தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்டக்கத்தி, பீட்ஸா, சூதுகவ்வும், தெகிடி, இறுதிச் சுற்று, இன்று நேற்று நாளை உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட்.
இதில் பீட்ஸா படத்தின் இரண்டாம் பாகம் மட்டும் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்த நிறுவனம் இன்று நேற்று நாளை படத்தின் 2ஆம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது என அறிவித்திருந்தது.
அது போல் தங்கள் நிறுவனம் தயாரித்த மற்ற படங்களில், எந்தப் படத்தின் 2-ம் பாகம் வேண்டும் என ரசிகர்களிடைய கருத்து கணிப்பு நடத்தியது.
அதில் ‘சூது கவ்வும் 2’, ‘தெகிடி 2’ மற்றும் ‘மாயவன் 2’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த வாக்கெடுப்பில் சூதுகவ்வும் 2 படத்துக்கு அதிகளவில் ஆதரவு கிடைத்துள்ளது.
மேலும் சூதுகவ்வும், தெகிடி, மாயவன் ஆகிய 3 படங்களின் 2 -ம் பாகத்துக்கான திரைக்கதை உருவாக்கம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 movies Sequels of Thirukumaran Entertainment on floor