தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : துரை சுதாகர், டோனா, கோவை ஜெயக்குமார், பேனாமணி, கூத்துப்பட்டரை துளசி, பேராசிரியை லட்சுமி, ரூபி, பொள்ளாச்சி M.K. ராஜா மற்றும் பலர்.
இயக்கம் : முஜிபூர் ரஹ்மான்
இசை : பழநிபாலு
ஒளிப்பதிவாளர் : ராஜன்
எடிட்டர்: ஆர். சரண் சண்முகம்
பி.ஆர்.ஓ. : குமரேசன்
தயாரிப்பு : ஆதம்பாவா
கதைக்களம்…
கதையின் நாயகன் துரை சுதாகர் பிணத்திற்காக தப்பாட்டம் அடிப்பவர். சூதாட்டம், சாராயம், தப்பாட்டம் ஆகியவைதான் இவரது பொழுதுபோக்கு.
இவரது அக்கா மகள் டோனா இவரையே சுற்றி சுற்றி வருகிறார்.
ஒருநாள் டோனாவை கற்பழிக்க முயல்கிறார் வில்லன். ஆனால் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி வந்து தன் அம்மாவிடம் சொல்கிறார்.
இதை தன் தம்பியிடம் சொன்னால் பிரச்சினை அதிகமாகும் என்பதால் யாரிடமும் சொல்லக்கூடாது என்கிறார் டோனாவின் அம்மா.
அதன்பின்னர் துரை சுதாகருக்கும் டோனாவுக்கு திருமணம் நடக்கிறது. சில மாதங்களுக்கு பின்னர் டோனா கர்ப்பம் அடைகிறார்.
இந்நிலையில் டோனாவை கற்பழித்துவிட்டேன் என சுதாகர் முன்னிலையில் சொல்கிறார் வில்லன்.
இதனால் தன் மனைவியின் கர்ப்பத்திற்கு காரணம் வில்லன்தான் என்பதால் மனைவியை ஒதுக்கிவைக்கிறார் சுதாகர்.
அதன்பின்னர் என்ன நடந்தது?, டோனா தன்னை பத்தினி என்று நிரூபித்தாரா? சுதாகர் தன் அக்கா மகளை ஏற்றுக் கொண்டாரா? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு இப்படம் தொடர்பான விளம்பரங்களில் ஜொலித்து வருகிறார் துரை சுதாகர்.
குடிசைப் பகுதியில் வாழும் மக்களில் ஒருவராக தோன்றியிருக்கிறார்.
ஆத்திரக்கானுக்கு புத்திமட்டு என்ற கேரக்டரில் நன்றாகவே தேர்ச்சி பெறுகிறார். ஆனால் முகபாவனைகளில் இன்னும் மெச்சூரிட்டி தேவை.
முதலில் லூசுப்பெண் போல வரும் நாயகி டோனா ரோசாரியா திருமணத்திற்கு பிறகு தன் உணர்வுபூர்வமான பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஒரு குத்தாட்ட பாடலில் கவர்ச்சி காட்டி சூடேற்றுகிறார்.
சுதாகரின் மாமா, டோனாவின் அம்மா கேரக்டர்கள் படத்திற்கு பலம்.
அதிலும் டோனாவின் பாட்டியாக வருபவர் கண்களாலேயே தன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். இவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம்.
முதல்பாதியில் வரும் சாராயக்கடை காட்சிகள் காமெடிக்கு பதிலாக வெறுப்பை ஏற்றுகிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்..
பழனி பாலுவின் இசையில் ஓரிரு பாடல்கள் ரசிக்கும் ரகம். பாடலை விட பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவில் இன்னும் மெருகேற்றியிருக்கலாம்.
தம்பதிகள் என்றால் சந்தேகத்தை தவிர்த்து சந்தோஷமாக வாழவேண்டும். இவர்களின் நடுவில் சந்தேகம் வந்துவிட்டால் அது எந்த மாதிரியாக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இப்படம் நல்ல உதாரணம்.
படத்தின் க்ளைமாக்ஸ் பாரதி கண்ணம்மா படத்தை நினைவு படுத்துகிறது.
படத்தின் ஆரம்பம் முதலே நாயகியுடன் பாசமாக இல்லை நாயகன். பின்பு இறுதிகாட்சியில் மட்டும் சாவை தேடிச் செல்வது ஏனோ..?
காட்சிகளில் சுவாரசியம் கூட்டியிருந்தால் இந்த தப்பாட்டம் சவுண்ட் பார்ட்டியாக இருந்திருக்கும்.
தப்பாட்டம்… தம்பதியருக்குள் சந்தேகம் வந்தால் திண்டாட்டம்தான்