தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் தமிழில் ரஜினி விஜய் சூர்யா விக்ரம் விஷால் தனுஷ் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
மேலும் இளம் வயதிலேயே தேசிய விருதையும் வென்றார்.
இந்த நிலையில் இவரது பெயரில் பேஸ்புக்கில் ஒரு பெண் மோசடி செய்துள்ளார். கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை தனது டிபி ஆக வைத்துள்ள அந்த பெண் வாலிபர் ஒருவரிடம் நைசாக பேசியுள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த வாலிபரிடம் நைசாக பேசி உள்ளார். நாளடைவில் இவர்கள் நெருக்கமாக பேச பேச.. “தனக்கு நடிப்பு துறையில் ஆசை இல்லை தான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் அந்த பெண்.
மேலும் ஐஏஎஸ் படிக்க பணம் தேவைப்படுகிறது என தெரிவிதக்கு இதனை நம்பி அந்த வாலிபர் முதற்கட்டமாக 10 லட்சம் அனுப்பியுள்ளார்.
மேலும் இவர்களுக்கு நாளடைவில் நெருக்கமாகி தங்களது நிர்வாண புகைப்படங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் உங்களை பார்க்க வேண்டும் உங்களிடம் பேச வேண்டும் என அந்த வாலிபர் தெரிவிக்கவே அந்த பெண் சுதாரித்து கொண்டுள்ளார்.
அப்போது அந்த வாலிபர் அனுப்பிய நிர்வாண படங்களை வெளியே விடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
இதனை சொல்ல வெளியே சொல்ல பயந்து அந்த வாலிபர் கொஞ்சம் கொஞ்சமாக அவர் கேட்ட பணத்தை எல்லாம் கொடுத்துள்ளார். மொத்தமாக ரூபாய் 40 லட்சம் வரை அந்த வாலிபர் கொடுத்து ஏமாந்துள்ளார்.
மேலும் அந்தப் பெண் பணம் கேட்டு மிரட்டவே வேறு வழியில்லாமல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
தற்போது அந்த மோசடி பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில் அந்த பெண்ணுக்கு உடந்தையாக இருந்த அவரது கணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோடி கணக்கில் சம்பாதிக்கும் ஒரு நடிகை பணம் கேட்டுள்ளார்.. அதை உண்மை என அதை நம்பி ஒரு படித்த பட்டதாரி இன்ஜினியர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.