தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஜூன் 9 தேதி நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
திருமணமான 4 மாதங்களில் அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.
இவர்கள் ஏற்கனவே செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றதில் விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
எனவே நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தவுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் விக்னேஷ் சிவன் இரண்டு பதிவுகளை பதிவிட்டுள்ளார்.
அதில்….
‛உங்களிடம் அக்கறை செலுத்துபவர்கள் மீது கவனம் செலுத்துங்கள். அவர்கள்தான் எப்போதும் உங்களுடனே இருப்பார்கள். அவர்கள்தான் உங்களுக்கானவர்கள்’
இன்னொரு பதிவில்…
‛எல்லாம் சரியான நேரத்தில் உங்களை வந்து சேரும். அதுவரைக்கும் பொறுமையுடனும் நன்றியுடனும் இருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
Everything will arrive in time says Vignesh Sivan