தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரை எதிர்த்துப் பேசவே பலரும் பயந்தனர். அப்படியொரு இரும்பு பெண்ணாக வாழ்ந்து வந்தார்.
எனவே அவர் மறைந்த பின் அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர்.
ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இதே படம் ஹிந்தி ஜெயா என்ற பெயரில் உருவாகிறது.
இவரைப் போல குயின் என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக கௌதம் மேனன் இயக்கி வருகிறார்.
இதில் ஜெயலலிதாவாக பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா.
அதில் தனது அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்ககூடாது. மேலும், ஜெயலலிதாவின் கண்ணியம் பாதிக்கப்படாமல் படம் எடுக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தீபா மனுவில் தெரிவித்துள்ளார்.