தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்றது.
கடந்த மே 22-ஆம் தேதி போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் தகராறு ஏற்படவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 13 பேர் (அரசு அறிவிப்பின்படி) பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சற்றுமுன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
அப்போது அவரை பார்த்த மக்கள் அந்த வேதனையிலும் ரஜினியை பார்த்து சந்தோஷப்பட்டனர்.
நீங்க அரசியலும் வரனும் தலைவா. எங்களை நீங்கத்தான் காப்பத்தனும் என்று கூறியுள்ளனர்.
ரஜினி இன்முகத்துடன் அவர்களை அரவணைத்து பாதிப்புக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தற்போது தூத்துக்குடியில் உள்ள ஹோட்டலில் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ளார்.
அதன்பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை அவர் சந்தித்து நிதியுதவி அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Tuticorin shooting injured peoples happy with Rajini visit