தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொடிய நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதனால் இந்திய மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு 10 நாட்களை கடந்துள்ளது.
இந்த நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் உரையாற்றினார்.
அப்போது, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்திய மக்களின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைக்க இவ்வாறு அவர் செய்ய சொல்லியிருக்கிறார்.
இதுகுறித்து ’மேயாத மான்’ ’ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…
“வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.
Rathna kumar
@MrRathna
வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது
Aadai director slams Modis Lights off speech in Corono War
வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது?. #COVID2019india #April5
— Rathna kumar (@MrRathna) April 3, 2020