தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏதாவது ஒரு அழகான இடத்தை பார்த்துவிட்டால் உடனே அதை போட்டோ எடுப்பதில் ஆர்வம் கொண்டவர் தானா நாயுடு.
இவர் ஒரு பங்களா ஒன்றை போட்டோ எடுக்கிறார். அதனை பார்த்த இவரது தோழிகள் இது பேய் வீடு. இதனை போட்டோ எடுத்தவர்கள் வேண்டுமானால் உயிரோடு இருக்கலாம். ஆனால் அவரது நெருங்கிய உறவுகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்கின்றனர்.
இதற்கு பல சம்பவங்களையும் ஆதாரத்துடன் கூறுகின்றனர்.
இதை நிரூபிப்பது போல அந்த வீட்டின் வாசல் நிறைய கொலைகள் நடக்கிறது.
போலீசார் இதனை விபத்துகள் என்றே விசாரணையை முடிக்கிறார்கள்.
அந்த ஊர்வாசிகளோ அந்த பங்களா பேய் தான் கொல்கிறது என்கின்றனர்.
போலீசால் அந்த கொலைகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்பதால் குழப்பத்தில் உள்ளனர்.
தானா நாயுடுக்கு தான் எழுதும் கதையில் வரும் கேரக்டர்கள் எல்லாம் கொல்லப்படுவதும் அவை ஒரே தேதியில் நடப்பதால் சந்தேகம் ஏற்படுகிறது.
இதனையடுத்து இவரும் சில முயற்சிகளை மேற்கொள்கிறார்.
கொலைக்கான காரணம் என்ன
நாயகியாக தானா நாயுடுவும் வில்லனாக பட இயக்குனர் பாஸ்கர் சீனுவாசனும் நடித்துள்ளனர். இருவருக்கும் படத்தில் நல்ல போட்டி. நாயகி தானா அமைதியாக இருந்து காரியம் சாதிப்பதில் வல்லவராக இருக்கிறார்.
இதற்கு மேல் அவரின் கேரக்டர் குறித்து சொன்னால் ரகசியம் லீக்காகி விடும்.
போலீசாக அன்பாலயா பிரபாரன், கைலாவின் அம்மாவாக கௌசல்யா நடித்துள்ளனர். தங்கள் கேரக்டர்களில் இவர்கள் கச்சிதம்.
பேபி கைலாவும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.
பரணி செல்வத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஸ்ரவனின் இசை பேசப்படும்.
வழக்கமான பேய் கதையாக இல்லாமல் இன்னும் சில திருப்பங்களை கொடுத்திருந்தால் ரசிகர்களுக்கு கைலா விருந்து கிடைத்திருக்கும்.
பாஸ்கர் சீனுவாசன் சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.
Kaila aka Kayla aka Khyla review