தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இரண்டாம் பாகத்தை இயக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த ஆர்வம் வரிசையில் தற்போது இணைந்துள்ளார் இயக்குனர் அறிவழகன்.
டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை பயமுறுத்திய படம் ஈரம். இந்த படத்தை இயக்கியிருந்தார் அறிவழகன்.
பெரும்பாலும் பேய் படங்கள் என்றால் அதில் மனிதர்களே பேய்களாக இருப்பார்கள். ஆனால் தண்ணீரை மட்டும் வைத்துக் கொண்டு மனிதர்களை பழிவாங்குவதை வித்தியாமாக செய்திருந்தார் இயக்குனர் அறிவழகன்.
இதில் ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் ஆகியோர் நடித்து இருந்தனர்.
தற்போது இந்த படத்தின் 2ஆம் பாகத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.
பெரும்பாலும் 2ஆம் பாக படங்கள் தோல்வியை தழுவி வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே தயாரிப்பாளர் ஷங்கர் என்ன சொல்லப்போகிறார்? என்பதை பார்ப்போம்.
தற்போது சுந்தர் சியின் அரண்மனை படத்தின் 3ம் பாகம். விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களின் 2ம் பாகத்தை உருவாக்க தயாராகி வருகின்றனர்.
Will Eeram 2 happen Arivazhagan waiting for Shankars OK Statement