ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இணையும் சீனு ராமசாமி – விஜய்சேதுபதி

ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் இணையும் சீனு ராமசாமி – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and seenu ramasamy‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்மில் விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி.

அந்த படம் ரிலீசுக்கு முன்னரே விஜய்சேதுபதியை புகழ்ந்து பேசியிருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அப்போதே ரசிகர்கள் விஜய்சேதுபதி என்பவர் யார்? என கேட்டார்கள்.

சின்ன சின்ன வேடங்களில் நடித்த போதே தன் மீது நம்பிக்கை வைத்தவர்கள் சீனு ராமசாமி & கார்த்திக் சுப்புராஜ் என்பதனால் அவர்கள் அழைத்தால் கதை கூட கேட்காமல் நடிப்பார் விஜய்சேதுபதி.

அதன் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். இந்த பட தயாரிப்பாளர் லிங்குசாமியின் கடன் பிரச்சனையால் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

எனவே சீனு ராமசாமியின் ‘தர்மதுரை’ படத்துக்கு கால்ஷீட் தந்தார் விஜய்சேதுபதி.

இப்பட வெற்றியைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சேதுபதி.

இந்த நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்குவதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை அசுரன் படத்தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.

இந்த படம் படம் முற்றிலும் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Vijay Sethupathi and Seenu Ramasamy joins for thriller movie

வந்துட்டார்ய்யா.. வந்துட்டார்ய்யா.. வடிவேலு மீண்டும் வந்துட்டார்ய்யா..

வந்துட்டார்ய்யா.. வந்துட்டார்ய்யா.. வடிவேலு மீண்டும் வந்துட்டார்ய்யா..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vadiveluதமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும் சென்றாலும் வடிவேலு இடம் தனி இடம் தான்.

அவர் சினிமாவில் நடிக்காத காலம் தமிழ் ரசிகர்களுக்கு கஷ்டகாலம் தான்.

சினிமாவில் அவர் உச்சத்தில் இருந்த போதே 2011ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது தேமுதிக & அதிமுக கூட்டணிக்கு எதிராக வடிவேலு பிரச்சாரம் செய்தார்.

திமுக-வுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றதால் வடிவேலுக்கு திரைப்பட வாய்ப்புகளை வழங்க எவரும் தயாராகவில்லை.

சில ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிக்க “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” படத்தின் 2வது பாகம் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ என்ற பெயரில் உருவாகவுள்ளதாக அறிவித்தனர்.

இந்த படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்ய வடிவேலு கோரியதால் படக்குழுவுக்குள் பிரச்சினை உருவானது துவங்கியது.

இதனால் படப்பிடிப்பில் பங்கேற்காமல் நாட்களை வடிவேலு வீணடிக்க தயாரிப்பாளர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

எனவே வடிவேலு இனி திரைப்படங்களில் நடிக்காத வண்ணம் ரெட் கார்டு வழங்கப்பட்டது.

இந்த பிரச்சினையே 3 வருடங்களாக பேசப்பட்டாலும் ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பில் எந்த தீர்வும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன் களமிறங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

இதன் காரணமாக ஷங்கர் வடிவேலு இடையே உடன்பாடு ஏற்படும் எனவும் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

வந்துட்டார்ய்யா.. வந்துட்டார்ய்யா.. வடிவேலு மீண்டும் வந்துட்டார்ய்யா.. என ரசிகர்கள் நிச்சயம் சொல்வார்கள்.

Vagai Puyal Vadivelu re entry in kollywood ?

தமிழ்நாட்டுல அனுமதியில்ல.. ஹைதராபாத் பறந்தார் விஷால்

தமிழ்நாட்டுல அனுமதியில்ல.. ஹைதராபாத் பறந்தார் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal actorகொரோனா ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்த போதும் சினிமா படப்பிடிப்பு மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு இதுவரை அனுமதியில்லை.

அடுத்த மாத ஜூலை மாத இறுதியில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது தெலங்கானா மாநிலத்தில் சினிமா சூட்டிங்குக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் & படக்குழுவினர் தங்கள் பட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்கின்றனர்.

இந்த நிலையில் விஷால் நடிப்பில் து.பா.ஆ சரவணன் இயக்கத்தில் உருவாகும் பட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.

இது விஷாலின் 31வது படமாகும்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்க யுவன் இசையமைப்பை கவனிக்க பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Vishal 31 shoot resumes in hyderabad

லெஜண்ட் சரவணன் பட நடிகை ஊர்வசி ரெளடாலாவின் சேறு குளியல்

லெஜண்ட் சரவணன் பட நடிகை ஊர்வசி ரெளடாலாவின் சேறு குளியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சரவணா ஸ்டோர்ஸ்’ நிறுவனர் பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்து வரும் படம்.

இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர்.

மறைந்த நடிகர் விவேக் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கரும் நடித்திருக்கிறார்.

ரூ 210 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த திரைப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் ஜோடியாக கீத்திகா திவாரி மற்றும் ஊர்வசி ரெளட்டாலா நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊர்வசி ரெளடாலா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.. சேறு பூசிக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

சேறுக்குளியல் என்பது தனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கிளியோபாட்ரோ இதே சேறுக்குளியலை மிகவும் விரும்புவார். சருமத்திற்கு இந்த குளியல் மிகவும் நல்லது.

என ஊர்வசி ரெளடாலா தெரிவித்துள்ளார்.

Legend Saravanan’s heroine latest pic goes viral

1623764604311

நாற்காலி சண்டை.. பதவி பேரம்..; முன்னாள் முதல்வர் நாராயணசாமி கண்டனம்

நாற்காலி சண்டை.. பதவி பேரம்..; முன்னாள் முதல்வர் நாராயணசாமி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

narayanasamyபுதுச்சேரியில் அரசு அமைந்து 45 நாட்கள் ஆகியும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை.

பதவிக்காக பேரம் பேசி காலத்தை கடத்துகிறார்கள். அப்பாவி மக்கள் கொரோனாவில் அதிகளவில் உயிரிழந்ததுதான் இந்த அரசின் சாதனை” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்,

“பெட்ரோல் டீசல் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதுதான் அதற்கு காரணம்.

ஆனால் அவர்கள் மாநில அரசுகளின் மேல் பழி போடுகிறார்கள். கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால் அண்டை நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக விற்கப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் ஏழைகள் வயிற்றில் அடித்து விலை உயர்த்தப்படுகிறது.

அதனால் கலால் வரியை ரத்து செய்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். புதுச்சேரியில் கொரோனா தொற்ற கட்டுப்படுத்த ஊரடங்கை படிப்படியாக குறைக்க வேண்டும்.

புதிய அரசு அமைந்து 45 நாட்கள் ஆகியும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை. பதவிக்காக பேரம் பேசி காலத்தை கடத்துகிறார்கள். மக்களை கைவிட்டுவிட்டார்கள்.

அப்பாவி மக்கள் கொரோனாவில் அதிகளவில் உயிரிழந்ததுதான் இந்த அரசின் சாதனை. மக்களின் உயிரைப்பற்றி கவலைப்படாமல் நாற்காலிக்காக சண்டை போடுகிறார்கள்.

தேர்தலின்போது புதுச்சேரியை நிதிக் கமிஷனில் சேர்ப்போம், மில்களை மீண்டும் இயக்குவோம் என பா.ஜ.க பல தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது. அவற்றையெல்லாம் தற்போது நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

Ex cm Narayanasamy slams new government

ஆயுதபூஜை ஸ்பெஷலாக தன் ரசிகர்களுக்கு விருந்தளிக்க ரெடியாகும் சிம்பு

ஆயுதபூஜை ஸ்பெஷலாக தன் ரசிகர்களுக்கு விருந்தளிக்க ரெடியாகும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maanaadu simbuவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.

இதில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்பு.

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பிரேம்ஜி, எஸ்ஏசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் & படத்தின் அப்டேட் வேண்டும் என சிம்பு ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

இதனையடுத்து மிக விரைவில் ஒரு பாடல் வெளியிடப்படும் என இசையமைப்பாளர் யுவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த படம் ரிலீசுக்கு தயாராகவிட்டாலும் தற்போது கொரோனா ஊரடங்கால் தியேட்டர் மூடப்பட்டுள்ளன.

இன்னும் ஓரிரு மாதங்களில் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் அக்டோபர் 14ல் ஆயுதபூஜை ஸ்பெஷலாக மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.

STR’s treat for his fans on Ayudha Pooja

More Articles
Follows