தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கையான ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக முழு ஊரடங்கு தொடர்ந்து நிலையில், அதன்பிறகு மாத மாத புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுவருகிறது.
செப்டம்பர் 30-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நிறைவடைகிறது.
தமிழக அரசு சார்பில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில்…
அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.
அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்
நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது
நோய் கட்டுப்பாடு பகுதிகளில் கட்டுபாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்
அக்டோபர் 31 ஆம் தேதி வரை கட்டுபாடுகளை அமல்படுத்தலாம்.
அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் திறக்க அனுமதி.
* திரையரங்குகள் 50 % இருக்கைகளுடன் இயங்க அனுமதி… திரையரங்குகளில் 50 சதவிகித டிக்கெட்களை மட்டுமே விற்பனை செய்யலாம்
சினிமா தியேட்டர்கள், மல்டி பிளக்ஸ் தியேட்டர்களுக்கான தளர்வுகள் அறிவிப்பு
பொழுது போக்கு பூங்காக்களையும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.
நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது.
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அக்.31 ஆம் தேதி வரை தளர்வுகளின்றி பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது
– மத்திய அரசு
Unlock 5 guidelines : Theatres to re open from october 15