தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 45 நாட்களாக தமிழ் சினிமாவில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
ஒரு பக்கம் தயாரிப்பாளர் சங்கமும் புதிய டிஜிட்டல் சேவையை செய்யும் ஏரொஸ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது.
ஸ்டிரைக் முடியும் தருவாயை எட்டிக் கொண்டிருந்தாலும், மேலும் நிலவி வரும் மற்ற பிரச்சினைகளையும் களைந்து வருகின்றனர்.
இந்நிலையில் திரைப்பட வெளியீட்டில் ஒரு புதிய மாற்றத்தை தயாரிப்பாளர் சங்கம் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது பெரிய படங்களோ, சிறிய படங்களோ, எந்தப் படம் முதலில் சென்சார் செய்யப்படுகிறதோ, அந்த வரிசைப்படிதான் படங்களை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார்களாம்.
இந்த திட்டத்துக்கு எல்லா தயாரிப்பாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Tamil movie release will be decided by Censor date