கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கையை சினிமாவாக்க காத்திருக்கும் இயக்குனர்கள்..; யாருக்கு ஓகே சொல்வார்.?

கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கையை சினிமாவாக்க காத்திருக்கும் இயக்குனர்கள்..; யாருக்கு ஓகே சொல்வார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

natarajanஅண்மையில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் வலைப்பயிற்சி பவுலராக சென்றவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன்.

இவர் தமிழகத்தை சேர்ந்தவர். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவரான நட்ராஜனுக்கு தற்போது 29 வயதாகிறது.

அந்த தொடரில் பந்து வீச்சில் சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவரின் அண்மை பேட்டியில்…

ஐ.பி.எல். போட்டிக்கு முன்பு விராட்கோலி, டிவில்லியர்ஸ், டோனி போன்ற வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதே என் கனவு.

அவர்களது விக்கெட்டை கைப்பற்றியது பெரும் மகிழ்ச்சி.

அதனை அடிக்கடி நினைக்கையில் தூக்கமே வரவில்லை.

ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு தற்போது வெளியில் போக முடியவில்லை.

முன்பு போல் இயல்பாக வெளியில் செல்ல நினைக்கிறேன்.

பழனி மலை முருகன் கோயிலுக்கு சென்று மொட்டை போட்ட பின்பும் பலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பாராட்டினர்.

எனக்கு எப்போதும் போல சாதாரணமான மனிதனாக இருக்கவே ஆசை.

என் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் சிலர் சந்திக்க வீடு தேடி வந்தனர்.

ஆனால் இப்போது எனக்கு அதில் ஆர்வம் இல்லை.

என் முழு கவனத்தையும் கிரிக்கெட்டில் செலுத்தவே விரும்புகிறேன்.”

இவ்வாறு நட்ராஜன் தெரிவித்துள்ளார்.

Tamil directors to do Yorker king Natarajan biopic ?

சினிமா துறை ஒரு மின்சாரம்.. தப்பா தொட்டா ஷாக் அடிக்கும்..; அமைச்சருக்கு அன்றே அட்வைஸ் சொன்ன ஜெயலலிதா

சினிமா துறை ஒரு மின்சாரம்.. தப்பா தொட்டா ஷாக் அடிக்கும்..; அமைச்சருக்கு அன்றே அட்வைஸ் சொன்ன ஜெயலலிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadambur rajuசவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று ( பிப்ரவரி 1ம்தேதி) சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடந்தது.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:..

எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா சினிமாவிலிருந்து வந்தவர் கள். அவர்களை சினிமாவில் பார்த்து ரசித்து அவர்கள் சொன்ன நல்ல கருத்துக்களை கேட்டுதான் நாங்கள் அரசிய லுக்கு வந்தோம்.

எனக்கு செய்தி துறை அமைச்சர் பதவியை அம்மா அளித்த போது அதில் என்னவெல் லாம் பிற துறைகள் இடம் பெறும் என்பதை சொல்லி சினிமா துறையும் அதில் இருக்கும் அதை ஜாக்கிரதை யாக கையாள வேண்டும்.

சினிமா துறை மின்சாரம் போன்றது நன்கு ஒளி தரும் தவறுதலாக கைவைத்தால் ஷாக் அடித்துவிடும் என்று அறிவுரை வழங்கினார்.

சினிமா துறைக்காக திரைப்பட ஸ்டுடியோ அமைக்க வேண்டும் பெப்ஸி ஆர்.கே. செல்வமணி கோரிக்கை வைத்தபோது அதனை அம்மா விடம் சொன்னேன்.

அவர்கள் உடனடியாக பையனூரில் 5 கோடி செலவில் சினிமா ஸ்டுடியோ அமைத்து தருவ தாக அறிவித்ததுடன் நிதியும் அளித்தார்.

அம்மாவின் வழியில் இன்றைக்கு ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல் வரும் ஸ்டியோவுக்கான தவணை தொகை அளித்தார். மற்றொரு தவணையும் விரைவில் அளிப்பார்.
திரைப்பட துறைக்கு விருது வழங்குவதுபற்றியும் நம் முதல்வரிடம் கோரிக்கை வைத்தபோது 150 படங் களுக்கு தலா ரூ 7 லட்சம் அளித்தார்.

அதேபோல் கொரோனா காலகட்டத்தில் சினிமா துறை பாதிக்கப்பட்டி ருந்தபோது நிறைய உதவிகளை அரசு அளித்தது. மீண்டும் தொழில் தொடங்கவும் உடனுக்குடன் அனுமதி அளிக்கப்பட்டது,

தியேட்டர்களில் முதலில் 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்தது தமிழக அரசுதான். ஆனால் அன்றைக்கு 50 சதவீத டிக்கெட் தான் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியது.

15 நாட்கள் கழித்து இன்று மத்திய அரசே 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்திருக்கிறது.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழக அரசுதான் செயல்பட்டது என்பதை குறிப்பிடுகிறேன்.

இங்கு கலந்துகொண்டு பேசிய ரோஜா எம் எல் ஏ ஆந்திரா வில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பக்க பலமாக இருந்துசெயல்படுகிறார். தனக்கு அரசியல் வழிகாட்டி யாக அம்மாதான் இருந்ததாக கூறினார்.

பெப்ஸி தலைவராக ஆர்.கே.செல்வமணி சிறப்பாக செயல்படுகிறார். பெப்ஸியில் அங்கம் வகிக்கும் தொழிலா ளர்கள் மற்றும் டெக்னீஷியன் களுக்கு என்ன தேவையென் றாலும் அரசிடம் கோரிக்கை வைத்து பெற்று தருகிறார்.

இன்றைக்கு தொடங்கப்பட்டி ருக்கும் இந்த மேக்கப் அகாடமி சிறப்பாக செயல் பட்டு தமிழகம் முழுவதும் கிளைகள் அமைத்து செயல் பட வேண்டும் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

Minister Kadambur raju about cine industry

சினிமாவுக்கு வந்தபோது என் நிறத்தை கிண்டல் செய்தனர்..; அமைச்சர் முன்னிலையில் நடிகை ரோஜா ஆதங்கம்

சினிமாவுக்கு வந்தபோது என் நிறத்தை கிண்டல் செய்தனர்..; அமைச்சர் முன்னிலையில் நடிகை ரோஜா ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rojaசவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று ( பிப்ரவரி 1ம்தேதி) சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடந்தது.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார்.

இந்த விழாவில் நடிகை ரோஜா எம் எல் ஏ பேசும்போது…

’நான் சினிமா துறைக்கு வந்தபோது என்னை பலர் கிண்டல் செய்தனர். நான் கொஞ்சம் கலர் கம்மி அதனால் வெற்றி பெற மாட்டேன் என்றனர்.

ஆனால் என்னை சினிமாவில் அழகாக காட்டி, கலரும் கூட்டி காட்டி ரசிகர்கள் மனதில் பதிய வைத்தவர்கள் மேக் அப் மேன்கள்தான். இந்த விழா வுக்கு என்னை அழைத்தது மகிழ்ச்சி.

வீட்டில் விசேஷம் நடந்தால் மகளைதான் விளக்கு ஏற்ற வைப்பார்கள் அதபோல் இந்த விழாவில் என்னை விளக்கு ஏற்ற வைத்தி ருக்கிறார்கள்.

அரசியலில் நான் இன்றைக்கு பல போராட்டங் களை சந்தித்து வெற்றி பெற்ற தற்கு எனக்கு முன்னுதாரண மாக இருந்தவர் புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா தான்’ என்றார்.

நிகழ்ச்சியில் விருகை வி.என்.ரவி எம் எல் ஏ, எஸ். சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பெப்ஸி நிர்வாகிகள் மற்ற சங்கங்களின் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர். ஏ.சபரி கிரிசன் நன்றி உரையாற்றினார்.

Actress Roja Selva Mani about her colour

கௌதம் மேனன்-விஜய் சேதுபதி-அமலா பால்-வருண்-மேகா இணைந்த படம் பிப்ரவரி 12ல் ரிலீஸ்

கௌதம் மேனன்-விஜய் சேதுபதி-அமலா பால்-வருண்-மேகா இணைந்த படம் பிப்ரவரி 12ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் ஆந்தாலஜி திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அண்மையில் அமேசான் பிரைம் வீடியோவில் ‘புத்தம் புதுக் காலை’ படமும், நெட்ஃப்ளிக்ஸில் ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜி படமும் வெளியாகின.

இந்த வரிசையில் அடுத்து உருவாகியுள்ள ஆந்தாலஜி படம்தான் ‘குட்டி லவ் ஸ்டோரி’.

ITS ALL ABOUT LOVE

காதலை மையமாக வைத்து நான்கு இயக்குநர்கள் உருவாக்கியுள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த ஆந்தாலஜியைத் தயாரித்ததுள்ளது.

இந்த நான்கு கதைகளை வெங்கட் பிரபு, கெளதம் மேனன், விஜய் மற்றும் நலன் குமாரசாமி இயக்கியுள்ளனர்.

இவற்றில் கவுதம் மேனன் & அமலாபால் ஒரு படத்தில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி & அருவி அதிதி பாலன் வேறொரு படத்திலும் கதிர் & மேகா ஆகாஷ் அடுத்த படத்திலும் வருண் & சாக்‌ஷி அகர்வால் ஒரு படத்திலும் நடித்துள்ளனர்.

முதலில் ஓடிடி ரிலீசுக்குத் திட்டமிட்டு உருவானது இந்த படத்தை தற்போது நேரடியாகத் தியேட்டர்களில் வெளியிடுகின்றனர் வேல்ஸ் ஐசரி கணேஷ்.

ஓடிடி நிறுவனங்களும் முதலில் தியேட்டர் ரிலீஸை தான் விரும்புகிறதாம். தியேட்டர்களில் படம் பிரபலமானதும், ஓடிடியில் வெளியானால் இன்னும் பெரிய ரீச் நன்றாக இருக்கும் என ஓடிடி தளங்கள் விரும்புகிறதாம்.

Kutty Story in theatres on Feb 12th

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து..; தமிழக முதல்வர் அதிரடி

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து..; தமிழக முதல்வர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019 ஜனவரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும் அரசு ஊழியர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டது.

இதன் பின்னர் அரசு துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெறக்கோரி சங்கங்கள் கோரிக்கை வைத்து இருந்தன.

இந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

TN CM important desicion on government employees

பிப்ரவரி 12 முதல் தியேட்டர்களில் ரிலீசாகும் ‘இது விபத்து பகுதி’

பிப்ரவரி 12 முதல் தியேட்டர்களில் ரிலீசாகும் ‘இது விபத்து பகுதி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரேகா மூவீஸ் புரொடக்ஷன்ஸின் மூன்றாவது தயாரிப்பாக வெளிவரவிருக்கும் ஹாரர் திரில்லர் “இது விபத்து பகுதி” படம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் மிரட்ட வருகிறது.

எம். சக்ரவர்த்தி தயாரிப்பில் ரேகா மூவிஸ் வழங்கும் “இது விபத்து” பகுதி ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள். வெளியாகியுள்ளது.

கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு ஆகியவற்றை விஜய் திருமூலம் கையாண்டுள்ளார்.

கை தென்னவன், சசி, அனு கிருஷ்ணா, டிட்டோ ஷார்மின் ஆகியோர் நடித்துள்ளனர். ஆதிஷ் உத்ரியன், சாய்தர்ஷன், ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

எடிட்டிங் பணிகளை ஆண்டோ ராயன், ஸ்டன்ட் மின்னல் முருகன், நடனம் ஜோ மதி மற்றும் கலை சுந்தர் ராஜன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

இப்படத்தின் போஸ்டர்கள் சஸ்பென்ஸ், ஹாரர் திரில்லர் படமாக இருப்பதால் படம் விறுவிறுப்பான கதைகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 12 திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது.

Ithu Vibathu Paguthi from feb 12 in theatres

More Articles
Follows