தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரம்மி எனப்படும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலைக்கு காரணமான சூதாட்டத்தை தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சூதாட்ட விளம்பரத்தில் பிரபலங்கள் நடிப்பதால் இளைஞர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் புகார்கள் வருகின்றன.
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் எனவும் . விளம்பர தூதுவர்களாக உள்ள பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில்…
பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்தி விளம்பரம் செய்கின்றனர்.
பொது மக்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும் இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Madras High Court issues notice to Virat Kohli, Ganguly and Tamannah in PIL against online games