கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசுக்கு உதவும் சத்யராஜ் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசுக்கு உதவும் சத்யராஜ் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona awarenessதமிழக அரசின்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

ஒரு பக்கம் ஊரடங்கு மறு பக்கம் கொரோனா தடுப்பூசி என கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவை திரைப்பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி ஆகியோர் வீடியோக்களில் விழிப்புணர்வு தொடர்பாக பேசி வெளியிட்டுள்ளனர்.

இதனை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இவர்கள் வீடியோவில் கூறியிருப்பதாவது…

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நம்மை அச்சுறுத்தி வருகிறது.

இதை தடுக்க நம் தமிழக அரசின் சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மிக மிக அவசியம் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும்.

வெளியே சென்றால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமானது தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும்.

கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். நம்மையும் நாட்டையும் காப்போம். கொரோனா நோயை வெல்வோம். மக்களை காப்பாற்றுவோம்.”

என இவர்கள் பேசியுள்ளனர்.

Tamil celebrities on corona awareness video

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா 1 லட்சம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா 1 லட்சம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalin (3)கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக 20,000-த்துக்கு அதிகமான தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு 13 பேரை சுட்டுக்கொன்றனர்.

மேலும், இந்த கலவரம் தொடர்பாக ஏராளமானோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

எனவே அந்த ஆலை மூடப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் இடைக்கால அறிக்கையை முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், கடந்த 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

இந்த நிலையில் 2018ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை இன்று மதுரையில் வழங்கினார் முதல்வர் முக. ஸ்டாலின்.

மேலும் அந்த சம்பவத்தில் தீவிர காயம் அடைந்த 3 பேருக்கும் பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இத்துடன் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மன உளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அதனடிப்படையில், 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும்.

இதுதவிர ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டாராம்.

அவரை இழந்துவாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது.

மேலும் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

MK Stalin gives govt jobs to kin of Thoothukudi police firing victims

ஆசியாவிலேயே பெரிய பணக்காரர்களான இந்தியர்கள்..; முதல் 2 இடங்களை பிடித்த முகேஷ் அம்பானி & கௌதம் அதானி

ஆசியாவிலேயே பெரிய பணக்காரர்களான இந்தியர்கள்..; முதல் 2 இடங்களை பிடித்த முகேஷ் அம்பானி & கௌதம் அதானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ambani Adaniசர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது
புளும்பெர்க்.

உலக அளவில் 13வது இடத்தை ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி 14ம் இடத்தில் உள்ளார்.

இதன் பட்டியல் வரிசை படி ஆசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தில் கௌதம் அதானி.

அதானி கிரீன் பங்குகள் மட்டும் கடந்த வருடம் சுமார் 370 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் 8.36 லட்சம் கோடியாக இருக்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் (2021-ம் ஆண்டு) இருந்து இதுவரை குழுமத்தின் சந்தை மதிப்பு தற்போது இரு மடங்கு உயர்ந்துள்ளது.

விமான நிலையம், சோலார், துறைமுக வர்த்தகம் விரிவாக்கம் பல துறையில் அதிக ஆர்வம் காட்டி முன்னேறியுள்ளார் கௌதம் அதானி.

இந்த அசுர முன்னேற்றத்தின் மூலம் சீனாவின் பெரும் பணக்காரரான Zhong Shanshan-ஐ பின்னுக்குத் தள்ளி விட்டார்.

இதன் மூலம் ஆசியாவின் 2வது பெரும் பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார் கௌதம் அதானி.

டாடா குரூப் மற்றும் ரிலையன்ஸ் குரூப் ஆகிய குழுமத்துக்கு பிறகு 100 பில்லியன் சந்தை மதிப்பைக் கொண்ட குழுமமாக அதானி குழுமம் திகழ்கிறது.

இவர்களுக்கு முன்பு முதலில் Zhong Shanshan தான் ஆசியாவின் பெரிய கோடீஸ்வரராக இருந்தார்.

அவரை சில மாதங்களுக்கு முன்பு தான் முகேஷ் அம்பானி 77 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முந்தினார் முகேஷ்.

இப்போது இந்தியாவின் கவுதம் அதானியும் ஸாங் ஷான்ஷானை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளார்.

ஷான்ஷானின் சொத்து மதிப்பு 63.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில், அதானியின் சொத்து மதிப்பு 66.5 பில்லியன் டாலராக உயர்ந்துவிட்டதால் தற்போது ஆசிய அளவில் 2வது இடத்திற்கு அதானி முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gautam Adani closes in on net worth of Asia’s richest man Mukesh Ambani

சமந்தாவின் ‛தி பேமிலி மேன் 2′ வெப் சீரிஸ் தொடருக்கு சீமான் எச்சரிக்கை

சமந்தாவின் ‛தி பேமிலி மேன் 2′ வெப் சீரிஸ் தொடருக்கு சீமான் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமந்தா நடித்துள்ள ‘தி பேமிலி மேன் 2′ வெப் சீரிஸ் ஜூன் 4 ஆம் தேதி முதல் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த வெப் தொடரின் ட்ரைலர் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் ‛தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன.

விடுதலைப்புலிகளைத் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஹிந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல.

உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் பயங்கரவாதிகள் எனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும் இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, தி பேமிலி மேன் 2 எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும். அதனைச் செய்ய மறுத்து, தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

NTK leader Seeman against The family man 2 web series

6 பேருக்கு கொரோனா..; ஆனாலும் சென்னையில் ஊரடங்கு தடையை மீறி ‘பிக்பாஸ்’ சூட்டிங்.!

6 பேருக்கு கொரோனா..; ஆனாலும் சென்னையில் ஊரடங்கு தடையை மீறி ‘பிக்பாஸ்’ சூட்டிங்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malayalam bigg bossசென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சூட்டிங் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழக அரசு கொரோனா ஊரடங்கு தடை விதித்த பிறகும், தொடர்ந்து சூட்டிங் நடந்து வந்ததுள்ளது.

(தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும், படப்பிடிப்பில் ஊழியர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவித்து இருந்தார்.)

இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் செட் அமைக்கப்பட்டு நடந்து வந்தது.

இந்த சூட்டிங்கில் 150 பேர் கலந்து கொண்டு இடைவிடாது சூட்டிங் நடத்தி வந்ததுள்ளனர்.

அதில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனாலும் சூட்டிங் நிறுத்தப்படவில்லை.

இது குறித்து தகவல் கிடைத்ததும், பூந்தமல்லி தாசில்தார், உதவி கமிஷனர் சுதர்சனம் ஆகியோர் பிலிம் சிட்டிக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கிருந்த நடிகர், நடிகைகளை வெளியேற்றினர். ஷூட்டிங் நடத்திய நிறுவனத்துக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர் அந்த செட்டுக்கு சீல் வைத்து பூட்டு போட்டனர்.

Bigg Boss Malayalam 3 shoot suspended, set in Chennai sealed for violating lockdown rules

12ஆம் வகுப்புக்கு வாட்ஸ் அப்பில் அலகு தேர்வு உத்தரவை பிறப்பிக்கவில்லை.. – தேர்வுத்துறை இயக்குனர் விளக்கம்

12ஆம் வகுப்புக்கு வாட்ஸ் அப்பில் அலகு தேர்வு உத்தரவை பிறப்பிக்கவில்லை.. – தேர்வுத்துறை இயக்குனர் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

12th exam whatsapp tnமே 3 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பொதுத் தேர்வு தள்ளிப் போகுமே தவிர ரத்து செய்யப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரித் தேர்வான அலகுத் தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டனர்.

ஒரே வகுப்பு மாணவ-மாணவியருக்கு என தனித்தனியாக வாட்ஸ் அப் குரூப் ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்கள் விடைகளை தனித் தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, அதை PDF ஆக மாற்றி அனுப்ப வேண்டும்.

அந்த விடைத்தாளில் மாணவர் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் எழுதியிருக்க வேண்டும்.

வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், ஆடியோ, ஸ்டிக்கர்ஸ், மீம்ஸ், வீடியோக்கள் ஆகியவற்றை பதிவிடக் கூடாது.

மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என்று எவ்வித உத்தரவையும் அதிகாரப்பூர்வமாக அரசுத் தேர்வுகள் துறை பிறப்பிக்கவில்லை.” என தேர்வுத் துறை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

TN 12th exam in whatsapp is not true says education ministry

More Articles
Follows