தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’.
இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.
இப்படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்பு பாடல் வரிகளுக்கு ஏற்ப மணல் ஓவியம் வரையப்பட்டது.
நிமிடத்திற்கு நிமிடம் ஒவ்வொரு கருத்தாக சொல்லப்பட்ட விதம் எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியது. இதுவரை இல்லாத புதிய விழாவாக இது அமைந்தது.
விழாவில் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது…
“இது புதுமுகங்கள் நடித்த படம், படத்தில் பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன. இருந்தாலும் யாரும் வாங்க முன் வரவில்லை. பாடலைக் கேட்டு விட்டு நன்றாக இருக்கிறது என்பார்கள்.
யார் நடித்தது? என்பார்கள் புதுமுகங்கள் என்றதும் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.
கடைசியில் ஜங்லீ மியூசிக் வாங்கி உதவியுள்ளார்கள். நான் கேட்கிறேன் புதுமுகங்கள் என்றால் ஏன் வாங்க மாட்டீர்கள் ?
இன்று பிரபலமாக இருக்கும் எல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள் தானே ?” என்றார்.
விழாவில் இசையமைப்பாளர் சிவநக், நடிகர்கள் நிரந்த்,ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத் , ராகுல் சி.கல்யாண், கெளதமி, ஷிவானி,அபேக்ஷா, பாடலாசிரியர் ப்ரியன். எடிட்டர் கிராந்தி குமார்,தெலுங்கு இயக்குநர் ராஜசேகர ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Talent doesnot value here Only Face value says Director Kranthi Prasath