சுஷாந்த் சிங் நினைவு இல்லம் & ட்ரஸ்ட் தொடங்க குடும்பத்தினர் முடிவு

சுஷாந்த் சிங் நினைவு இல்லம் & ட்ரஸ்ட் தொடங்க குடும்பத்தினர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sushant singh rajputகிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாகவே வாழ்ந்து காட்டியவர் ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

34 வயதான இவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

இது இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சுஷாந்த் மறைவுக்குப் பிறகு அவருடைய குடும்பத்தினர் ‘குட்பை சுஷாந்த்’ என இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சினிமா, அறிவியல், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இளம் திறமைசாலிகளுக்கு ஆதரவாக சுஷாந்த் சிங் ராஜ்புட் அறக்கட்டளை ஒன்றை நிறுவ உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் சிறு வயதில் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் என்ற இடத்தில் அவர் வளர்ந்த வீட்டை நினைவில்லமாகவும் மாற்ற உள்ளார்களாம். அதில் சுஷாந்த் நினைவாக அவர் பயன்படுத்திய பொருட்கள், ஆயிரக்கணக்கான புத்தகங்கள், அவருடைய டெலஸ்கோப், பிளைட் சிமுலேட்டர் உள்ளிட்டவற்றை அவருடைய ரசிகர்களுக்காகவும், ஆர்வலர்களுக்காகவும் வைக்க உள்ளனர்.

மேலும் சுஷாந்த உயிரோடு இருக்கும்போது பயன்படுத்திய இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக் ஆகிய கணக்குகளை அவருடைய நினைவாக தொடர்ந்து செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் அவரின் ஆன்மாவுக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளனர்.

போலீஸை தாக்கும்போது கண்டித்த ரஜினி… கொலை செய்த போலீசாரை கண்டிக்கலையே.. ஏன்..?

போலீஸை தாக்கும்போது கண்டித்த ரஜினி… கொலை செய்த போலீசாரை கண்டிக்கலையே.. ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஇந்திய நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கில் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் தாக்குதலால் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மரணமடைந்தனர்.

இந்த செய்தி இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் அவர்களை தாக்கிய போலீசை சஸ்பெண்ட் செய்தும் ஆயுதப்படைக்கும் மாற்றி உள்ளது காவல்துறை.

மேலும் தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு நிதியுதவியும் அளித்துள்ளது.

ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இறப்புக்கு காரணமான போலீஸார் மீது கொலை வழக்கு பதிவுசெய்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது-

#JusticeForJayarajAndFenix என்கிற ஹேஷ்டேகில் கோலிவுட் பிரபலங்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

ஆனால் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி என உச்ச நட்சத்திரங்கள் எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.

நீங்கள் எப்போது மெளனத்தைக் கலைக்கப்போகிறீர்கள்” என இவர்களின் ரசிகர்களே கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து மற்றொரு புகாரும் எழுந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு காவிரி பிரச்சினையின் போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக்கூடாது என்ற போராட்டங்கள் நடைபெற்றது.

அப்போது போலீஸை ஒரு ஜிம் பாய் தாக்கிய வீடியோ வெளியானது.

அதை ரஜினி கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதில், ”வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று பதிவிட்டு இருந்தார் ரஜினிகாந்த்.

தற்போது போலீஸின் கொடூரமான தாக்குதலால் இரண்டு உயிர்கள் போய்விட்டது.

போலீசை தாக்கியவர்களை கண்டித்த ரஜினி, இரு அப்பாவிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்யவில்லையே என கேட்டு வருகின்றனர்.

விஷாலின் ‘சக்ரா’ பட ட்ரெய்லரில் பிரதமர் மோடி பேச்சு!

விஷாலின் ‘சக்ரா’ பட ட்ரெய்லரில் பிரதமர் மோடி பேச்சு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chakra trailer‘சக்ரா ‘படத்தின் ட்ரெய்லரில் மோடியின் பேச்சு வசனங்கள் இடம் பெற்றுள்ளது பரபரப்பாகியுள்ளது.

விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர் இன்று 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது.ட்ரெய்லரில் வரும் வசனங்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைப்பது மட்டுமல்ல பரபரப்பான படம் என்பதற்கான முன்னோட்டமாகவும் இருக்கின்றன.

இதோ அந்த ட்ரெய்லரில் வரும் வசனங்கள் :

வசனம் 1 : அடையார் சர்க்கிள்ல நடந்திருக்கு .ஓவர்.
ஏழு வீட்ல ராபரி.

வசனம் 2: பெசன்ட் நகர் 13 வீட்ல ராபரி நடந்திருக்கு ஓவர்.

வசனம் 3: நாயகன் விஷால்: ஆகஸ்ட் 15 இண்டிபெண்டன்ஸ் டே .டோட்டல் சென்னை சிட்டியே அதிகப்படியா கண்காணிப்புக்குள்ள இருக்குற ஒரு நாள், ஆனா அன்னிக்கு…

வசனம் 4 : நாயகன் : இது ஏதோ பற்றிக்குலர் ஏரியாவுல, இல்ல பற்றிக்குலர் ஸ்ட்ரீட்ல , நடந்த ராபரி கிடையாது. திஸ் இஸ் சம்திங் பிக்.

வசனம் 5 : கமிஷனர் : 49 வீடுய்யா, சிட்டியே பதறிகிட்டு இருக்கு

வசனம் 6 : இன்ஸ்பெக்டர்: மத்த வீட்ல கை வச்சது பிரச்சனை இல்லய்யா, இந்த வீட்ல கை வச்சதுதான் பிரச்சனை அசோக சக்ரா, மிலிட்டரில குடுக்குற மிகப்பெரிய கவுரவம், அந்த மெடல திருடிருக்கான், சும்மா விட்ருவானா அவன்?

வசனம் 7: DFH மேனேஜர்: நீங்க போலீசா?

வசனம் 8: நாயகன்: மிலிடரி …!

வசனம் 9 : நாயகி : இந்த சென்சிட்டிவான கேஸ் நான்தான் இன்வஸ்டிகேட் பண்றேன் சந்துரு, கூடிய சீக்கிரமா அந்த புறம்போக்குகளை பிடிப்பேன்

வசனம் 10: நாயகன் : ஒரு நாட்டையே அச்சுறுத்துற தீவிரவாதிகள் ஆக்டிவிட்டீஸை கண்காணிக்க ஒரு நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்ஸி பண்ற ஆராய்ச்சிய விட, ஒரு சராசரி மனிதனோட தேவைகளையும், அவனோட ஆசைகளையும் கண்டுபிடிக்கிறதுக்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி பண்ற ஆராய்ச்சிதான் அதிகம்னு சொல்ல வர்றீங்க..

வசனம் 11
: நாயகி: கேர்ஃபுல்லா இருங்க , சஸ்பெக்ட் எப்ப வேணா அட்டாக் பண்ணலாம்…..

வசனம்: 12 நாயகன் குரல்: நிச்சயமாக நாம் தேடிட்ருக்குற கிரிமினல் , நம்ம கண்ணுக்கே, தெரியமாட்டான்

வசனம் 13 :யாரோ HACK பண்ணிருக்காங்க…

வசனம் 14: நாயகன் : இப்பதான் சீண்டி விட்ருக்கேன் த கேம் பிகின்ஸ் …..

வசனம் 15: நாயகன் : நம் கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டும் இல்ல, வயர்லஸ் நெட்ஒர்க்கும் கூட ஆபத்துதான்.

WELCOME TO DIGITAL INDIA…

என்று நாயகன் விஷால் சொன்ன பிறகு மோடியின் பேச்சு இடம் பெறுகிறது.அது படத்தில் இடம்பெறும் போது எந்த விதமான அர்த்தத்தைக் கொடுக்கிறது என்பதைப் படம் பார்த்தால்தான் புரியும் என்கிறார்
இப்படத்தை இயக்கியுள்ள எம் .எஸ் .ஆனந்தன்.

விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.

போலீஸ் என்பது பொறுப்பு அதிகாரமில்லை; சாத்தான்குளம் சம்பவத்திற்கு வெண்பா சாட்டையடி

போலீஸ் என்பது பொறுப்பு அதிகாரமில்லை; சாத்தான்குளம் சம்பவத்திற்கு வெண்பா சாட்டையடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venba condemns TN Police for Jayaraj and Fenix murderதூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது மொபைல் போன் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் தந்தை, மகனை (ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ்) அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் போலீஸ் தாக்கினர்.

சிறையில் அடைக்கப்பட்ட மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டதை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளனர்.

காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ட்விட்டரில் #JusticeForJayarajAndFenix என்ற ஹேஷ்டேக்கில் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ், விஷால், குஷ்பூ, இமான், ஜெயம் ரவி, ஹன்சிகா, அதுல்யா, கதிர் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர் என்பதை நேற்றைய (ஜீன் 26) செய்தியில் பார்த்தோம்.

இந்த நிலையில் இளம் நடிகை வெண்பாவும் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

போலீஸ் என்பது பொறுப்பு.. அது அதிகாரமில்லை. ஒரு சிலரால் காவல்துறைக்கே களங்கம். ஒருபோதும் நிரபராதிகள் தண்டிக்கப்பட கூடாது.

ஒரு குடும்பத்தில் இருவர் மரணம். ஈடு செய்ய முடியாத இழப்பு. நிதியை விட நீதியே தேவை.. இப்படிக்கு வெண்பா என பதிவிட்டுள்ளார்.

கற்றது தமிழ், சிவகாசி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் வெண்பா.

காதல் கசக்குதய்யா, பள்ளி பருவத்திலே, மாயநதி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார் வெண்பா என்பது குறிப்பிடத்தக்கது.

Venba condemns TN Police for Jayaraj and Fenix murder

22 நிமிட பிட் படத்துக்கு ரூ 200.; ராம்கோபால் வர்மாவின் அட்ராசிட்டி

22 நிமிட பிட் படத்துக்கு ரூ 200.; ராம்கோபால் வர்மாவின் அட்ராசிட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ram Gopal Varmas Naked movie is just 22 min but he charge Rs 200கொரோனா ஊரடங்கு சமயத்திலும் தன் சர்ச்சைகளை தொடர்ந்து செய்து வருகிறார் இயக்குனர் ராம்கோபால் வர்மா.

ஏற்கெனவே ‘கிளைமாக்ஸ்’ என்ற ஆபாசப் படத்தை நேரிடையாக இணையத்தில் வெளியிட்டார். அதை பார்க்க 100 ரூபாய் கட்டணம் வசூலித்தார்.

கடந்த சில தினங்களாக நேக்டு என்ற படத்தை இயக்கியுள்ளதாக அறிவித்து ஆபாச படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் டிரைலர் படு மோசமாக சித்திரிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று ஜீன் 27 இரவு 9 மணிக்கு ‘நேக்டு நங்கா நக்னம்’ என்ற ஆபாசப் படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்தார்.

இப்படத்திற்கு 200 ரூபாய் கட்டணம் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று சற்று முன்னர் தான் அது வெறும் 22 நிமிடப் படம் எனக் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த படத்தை பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Ram Gopal Varmas Naked movie is just 22 min but he charge Rs 200

https://twitter.com/RGVzoomin/status/1276809846818398209

https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2FRGVzoomin%2Fstatus%2F1276809846818398209&widget=Tweet

வனிதா 3வது திருமணம்; லிப் கிஸ் அடித்து பீட்டரை கரம் பிடித்தார்.! (Video)

வனிதா 3வது திருமணம்; லிப் கிஸ் அடித்து பீட்டரை கரம் பிடித்தார்.! (Video)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Vanitha Peter Paul marriage held today at Chennaiநட்சத்திர குடும்பம் என்று அழைக்கப்படும் குடும்பங்களில் ஒன்று விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியரின் குடும்பமும் ஒன்று.

இதில் விஜயகுமாரின் மகள் வனிதா சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

வனிதா இதுவரை 2 திருமணங்கள் செய்துள்ளார். முதல் கணவரை விவாகரத்து செய்து சில ஆண்டுகளில் 2வது திருமணம் செய்தார்.

முதல் கணவர் ஆகாஷ் மூலம் ஒரு மகன், மகளும், இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் மூலம் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் பீட்டர் பால் என்பரை 3வது திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதற்கு இவரின் மகள்களும் ஆதரவு கொடுத்தனர்.

அதன்படி இவர்களது திருமணம் இன்று (ஜுன் 27) வனிதாவின் இல்லத்தில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக நடந்தது.

பின்னர் வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்றுக் கொண்டார் பீட்டர்.

Actress Vanitha Peter Paul marriage held today at Chennai

More Articles
Follows