தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா தயாரித்து நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் நவம்பர் 2ல் அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீசானது.
முதல்வர் முதல் கடைக்கோடி தமிழன் வரை இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
1995ல் கடலுரில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை கொண்டு இந்த படத்தை உருவாக்கியிருந்தார் டைரக்டர் ஞானவேல்.
ராசாக்கண்ணு மற்றும் பார்வதி அம்மாள் ஆகியவர்களின் கதையை தழுவி தான் இந்த படம் எடுக்கப்பட்டது. நாயகி பெயர் செங்கணியாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் போலீசாரால் கொலை செய்யப்பட்ட ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாள் அவர்கள் தற்போது சென்னை அருகே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தற்போது பார்வதி அம்மாளுக்கு ரூபாய் 10 லட்சம் நிதி அளிப்பதற்காக அறிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
ஜெய்பீம் படம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்துக்கு கடிதத்திற்கு நன்றி தெரிவித்து இந்த தகவலை தெரிவித்துள்ளார் சூர்யா.
அந்த கடிதத்தில்… ‘பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்து அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும் பார்வதி அம்மாள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்திருப்பதாகவும் அவருடைய காலத்திற்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அந்த தொகையை சேரும்படி செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்விக்கு உதவுவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு என்றும் ஆகவே தான் ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்ததாகவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் சூர்யா.
Suriya deposits Rs 10 lakhs to Real Rasakannus wife Parvathy