ராசாக்கண்ணு மனைவிக்கு 10 லட்சம்..; இருளர் மாணவர்களுக்கு உதவிடவும் சூர்யா முடிவு

ராசாக்கண்ணு மனைவிக்கு 10 லட்சம்..; இருளர் மாணவர்களுக்கு உதவிடவும் சூர்யா முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் நவம்பர் 2ல் அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீசானது.

முதல்வர் முதல் கடைக்கோடி தமிழன் வரை இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

1995ல் கடலுரில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை கொண்டு இந்த படத்தை உருவாக்கியிருந்தார் டைரக்டர் ஞானவேல்.

ராசாக்கண்ணு மற்றும் பார்வதி அம்மாள் ஆகியவர்களின் கதையை தழுவி தான் இந்த படம் எடுக்கப்பட்டது. நாயகி பெயர் செங்கணியாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் போலீசாரால் கொலை செய்யப்பட்ட ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாள் அவர்கள் தற்போது சென்னை அருகே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தற்போது பார்வதி அம்மாளுக்கு ரூபாய் 10 லட்சம் நிதி அளிப்பதற்காக அறிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

ஜெய்பீம் படம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்துக்கு கடிதத்திற்கு நன்றி தெரிவித்து இந்த தகவலை தெரிவித்துள்ளார் சூர்யா.

அந்த கடிதத்தில்… ‘பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்து அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும் பார்வதி அம்மாள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்திருப்பதாகவும் அவருடைய காலத்திற்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அந்த தொகையை சேரும்படி செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்விக்கு உதவுவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு என்றும் ஆகவே தான் ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்ததாகவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் சூர்யா.

Suriya deposits Rs 10 lakhs to Real Rasakannus wife Parvathy

கோவை ஆசிரியரின் கொடூர செயலால் மாணவி தற்கொலை.; வேதனையில் வெண்பா

கோவை ஆசிரியரின் கொடூர செயலால் மாணவி தற்கொலை.; வேதனையில் வெண்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

அவர் இறப்பதற்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில்…

அந்தக் கடிதத்தில், “யாரையும் சும்மா விடக் கூடாது. ரீத்தாவோட தாத்தா. எலிசா சாருவோட அப்பா. இந்த சார் ***** (கெட்ட வார்த்தை). யாரையும் விடக் கூடாது” என தன் கைப்பட எழுதியுள்ளார்.

இந்த மாணவி தற்போது மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இதற்கு முன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.

அந்தப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி, (வயது 35) தான் இவரின் தற்கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

மிதுன் – மாணவி வாட்ஸ்அப் உரையாடலும் வெளியானது. அதில் மாணவிக்கு மிதுன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது உறுதியானது.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போக்சோ பிரிவில் போலீசார் மிதுனை கைது செய்தனர்.
மேலும் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 26ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மிதுன் சக்கரவர்த்தி உடுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவி புகார் அளித்தும் சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத, சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன், (வயது 52) மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆசிரியர்களின் பாலியல் தொல்லைகளை கண்டிக்கும் வகையில் இளம் நடிகை வெண்பா கூறியுள்ளதாவது…

எத்தனை முறை இது போன்ற சம்பவங்கள் தொடரும். இதற்கு முடிவே இல்லையா..? என மாணவி எழுதிய கடிதத்துடன் தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையாக பதிவிட்டுள்ளார் வெண்பா.

அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே எமனாக மாறி வருவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக #JusticeforPontharani என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இரண்டு நாட்களாக டிரெண்டாகி வருகிறது.

Actress Venba condemns sexual harassment in schools

இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

இணையத்தில் வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை.

இந்த படம் அடுத்தாண்டு 2022 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

இப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்துள்ளார் ராஜ் ஐயப்பா. இவர் நடிகர் பானு பிரகாஷின் மகன் ஆவார்.

இந்த நிலையில் அஜித்தின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ராஜ் ஐயப்பா.

அவர் நடிகர் அஜித்திடம் அனுமதி வாங்கியே இதனை பகிர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

அந்த ஸ்டேட்டஸில், ‛ஏழை, நடுத்தரவர்க்கம், பணக்காரர் என்பது தனி நபரின் பொருளாதார நிலையை குறிக்கிறதே தவிர குணத்தை அல்ல. இந்த சமூகத்தின் எல்லா பிரிவுகளிலும் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள். அதனால் ஒருவரின் பொருளாதார நிலையை வைத்து ஒருவரின் குணத்தை மதிப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும். எல்லோரும் எழுங்கள்..’ என பதிவிட்டுள்ளார்.

இதனை அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

நவ. 19 ரிலீஸ் : ஓடிடிக்கு ஒன்னு.. தியேட்டருக்கு நாலு.. எகிறும் எதிர்பார்ப்பில் ‘சபாபதி’

நவ. 19 ரிலீஸ் : ஓடிடிக்கு ஒன்னு.. தியேட்டருக்கு நாலு.. எகிறும் எதிர்பார்ப்பில் ‘சபாபதி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவம்பர் 4ல் தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த மற்றும் விஷால் ஆர்யா நடித்த எனிமி ஆகிய படங்கள் வெளியானது.

அதற்கு அடுத்த வாரம் நவம்பர் 12ல் துல்கர் சல்மான் நடித்த குருப், மற்றும் டோனி நடித்த பார்டர் படங்கள் ரிலீஸ் ஆனது.

தற்போது இந்த வாரம் நவம்பர் 19ல் ரிலீசாகவுள்ள படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

சினிமா தியேட்டர்களில் சந்தானம் நடித்துள்ள ‘சபாபதி, ஜாங்கோ, கடைசிலல பிரியாணி, அடையாள மீட்பு’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இந்த 3 படங்களில் புதுமுகங்கள் நாயகன் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இதில் சந்தானம் நடித்த சபாபதி படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அண்மையில் இப்பட டிரைலர் வெளியாகி ரசிகர்கள் கவர்ந்துள்ளதே காரணம்.

இந்த படங்கள் அல்லாமல் ஓடிடி தளத்தில் பிரபுதேவா நடித்த ‘பொன் மாணிக்கவேல்’ படம் ரிலீசாகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தீபாவளிக்கு வெளியாகாமல் தள்ளிப்போன சிலம்பரசன் நடித்துள்ள ‘மாநாடு’ படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகிறது.

Prabhu Deva and Santhanam movie release updates

தேங்கிய தண்ணீர்… தயங்கிய தளபதி..; பீஸ்ட் செட் டோட்டல் வேஸ்ட்..?

தேங்கிய தண்ணீர்… தயங்கிய தளபதி..; பீஸ்ட் செட் டோட்டல் வேஸ்ட்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டாக்டர்’ படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்ச்ர்ஸ் தயாரித்து வருகிறது.

தற்போது சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ‘பீஸ்ட்’ படத்துக்கான போடப்பட்ட பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட்டிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆனால் பெரிதாக பாதிப்ப்பு இல்லை என்றாலும் தண்ணீர் முழுவதுமாக வடிந்துவிடவில்லை.

எனவே தண்ணீர் வடிந்த பின் சூட்டிங்கில் கலந்துக் கொள்ளவிருக்கிறாராம் தளபதி.

சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ‘பீஸ்ட்’ படக்குழு மீண்டும் ஜார்ஜியா சென்று சில முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளனர்.

விஜய் நடித்து வரும் இந்த ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், லிலிபுட் ஃபரூக்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, எடிட்டராக நிர்மல், கலை இயக்குநராக கிரண் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.

Vijays Beast shooting set flooded with rain water

செல்வராகவன்-கீர்த்தி இணைந்த ‘சாணிக்காயிதம்’ பட ரிலீஸ் அப்டேட்

செல்வராகவன்-கீர்த்தி இணைந்த ‘சாணிக்காயிதம்’ பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்த செல்வராகவன் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார் செல்வராகவன்.

இந்த படத்தை ஒப்புக் கொள்வதற்கு முன்பே ‘சாணிக்காயிதம்’ படத்தில் கீர்த்திக்கு ஜோடியாக படத்தின் நாயகனாக நடித்து வந்தார் செல்வா.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக்காயிதம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்களே ஆனாலும் கொரோனா ஊரடங்கு மற்றும் சில பிரச்சினைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

இந்த படத்துக்கு முதலில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அண்மையில்தான் சாம் சி.எஸ்

இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சாணிக்காயிதம் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படத்தயாரிப்பாளர் பேசி வருவதாக கூறப்படுகிறது.

2022 ஆண்டு பிப்ரவரியில் இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்.

Selvaraghavan and Keerthy Sureshs Saani Kayidham release update

More Articles
Follows