மிஸ்டர் உத்தமனாக மாறிய மனோபாலா..; நயன்தாரா தம்பியுடன் கூட்டணி

மிஸ்டர் உத்தமனாக மாறிய மனோபாலா..; நயன்தாரா தம்பியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த ’ஊர்காவலன்’, விஜயகாந்த் நடித்த சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கருப்பு நிலா உள்பட சுமார் 20க்கும் மேலான திரைப்படங்களை இயக்கியவர் மனோபாலா.

மேலும் இவர் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

’சதுரங்க வேட்டை’ ’பாம்பு சட்டை’ உள்ளிட்ட படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

தற்போது மனோ பாலா முதல் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடித்து இருக்கிறார்.

‘மிஸ்டர் உத்தமன்’ என்ற இந்த வெப் தொடரை நிஷாந்த் லோகநாதன் இயக்கி இருக்கிறார்.

இதில் முதன்மை கதாபாத்திரத்தில் சச்சின் நாச்சியப்பன் நடிக்கிறார்.

இவர் நயன்தாராவுக்கு தம்பியாக நெற்றிக்கண் படத்தில் நடித்திருந்தார். யூடியூப், விளம்பர படங்களில் நடித்த பிரணிகா தக்ஷு இதில் நாயகியாக நடிக்கிறார்.

மிஸ்டர் உத்தமன் வெப் தொடர் காதல், காமெடி, பேண்டஷி கலந்து உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த வெப் தொடர் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் ‘ஸ்டே டியூன்’ என்ற யூடியூப்பில் வெளியாக இருக்கிறது.

Staytuned launches a new Web Series named Mr Uthaman by Manobala

Staytuned youtube channel is proudly announcing a new launch of web series named Mr Uthaman directed by Nizhanth Loganathan and a fame actor Manobala played an important role. The web series is going to be launched on September 3 2021, Friday. Actor Sacchin Nachyappan played the lead role, Saccin Nachiyappan has played an important role in Netrikann as Actress Nayanthara’s brother.

Female lead role is played by Pranika Dhakshu who has acted in many youtube series, advertisements and also Vijay TV artist.

Mr Uthaman is a fantasy love comedy genre and it’s the first youtube web series for Actor Manobala which is expected to be a huge success.

Staytuned youtube channel has released two web series namely Kadhal Café and Sagiye. For the first time Staytuned youtube channel proudly works with the Comedy Legend Manobala which is expected to have a huge response.

Staytuned launches a new Web Series named Mr Uthaman by Manobala

ஆரம்பிக்கலாமா.. பிக்பாஸ் 5 புரோமோ வெளியானது.; போட்டியாளர்கள் இவர்கள் தானா.?

ஆரம்பிக்கலாமா.. பிக்பாஸ் 5 புரோமோ வெளியானது.; போட்டியாளர்கள் இவர்கள் தானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்காகி வரும் பிக்பாஸ் சீசன்களை கமல் தொகுத்து வழங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்.

கமல் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சி தமிழில் இப்படியொரு வரவேற்பை நிச்சயம் பெற்றிருக்காது. எனவே பிக்பாஸ் 5 சீசன்னையும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த நிகழ்ச்சித் தொடருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இதில் பங்கேற்றதால் தான் நடிகைகள் ஓவியா, லாஸ்லியோ, ஷிவானி, நடிகர்கள் பாலாஜி, ஆரி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் படு பிரபலமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மாதம் தான் பிக்பாஸ் 4 தொடங்கியது. அக்டோபர் 4ல் தொடங்கி 2021 ஜனவரி 17ம் தேதி வரை நடந்தது.

இந்தாண்டும் கொரோனா தொற்று அச்சத்தால் பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவதில் தாமதம் ஆகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் 5 சீசனுக்கான வீடு சென்னையில் உள்ள இ.வி.பி. படப்பிடிப்பு தளத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து, சுனிதா கோகாய், கனி திரு உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

தற்போது பிக்பாஸ் புரோமா வெளியாகியுள்ளது. அதில் கமல் ஆரம்பிக்கலாமா? என கேட்கிறார்.

ஆரம்பிக்கலாமா? ? #BiggBossTamil Season 5 | விரைவில்.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision

Kamal Haasan’s Bigg Boss promo 5 Tamil revealed

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் கைது.; அவருக்கே ஷாக்கிங் நியூஸ் கொடுத்த ரசிகர்

‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் கைது.; அவருக்கே ஷாக்கிங் நியூஸ் கொடுத்த ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குக் வித் கோமாளி’ என்ற டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பலரில் ஒருவர் அஸ்வின் குமார்.

இதனையடுத்து இவருக்கும் சினிமா வாய்ப்புக்கள் வரத் தொடங்கிய நிலையில் சில படங்களில் ஹீரோவாகிவிட்டார்.

புதுமுகம் ஹரிஹரன் இயக்கத்தில் ‘என்ன சொல்லப் போகிறாய் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவருடன் அந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழும் நடிக்கிறார்.

இவர்கள் இணையும் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் “அஸ்வின் குமார் கைது என பிரேக்கிங் நியூஸ் கொடுத்து அஸ்வினையே ஒரு ரசிகர் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்.

அதில்… இளம் பெண்களின் மனதை திருடியதற்காக நடிகர் அஸ்வின் குமார் கைது என ஒரு போஸ்டரை டிசைன் செய்து கலாய்த்துள்ளார்.

அந்த போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் (இன்ஸ்டா ஸ்டோரியில்) வெளியிட்டிருக்கிறார் நடிகர் அஸ்வின்.

Shocking : Cooku with comali Ashwin arrested

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க கமல் போடும் மெகா ப்ளான்

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்க கமல் போடும் மெகா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் சீசன் 4 வரை கமல் தொகுத்து வழங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். கமல் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சி தமிழில் இப்படியொரு வரவேற்பை நிச்சயம் பெற்றிருக்காது.

கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மாதம் தான் பிக்பாஸ் 4 தொடங்கியது. அக்டோபர் 4ல் தொடங்கி 2021 ஜனவரி 17ம் தேதி வரை நடந்தது.

இந்தாண்டும் கொரோனா தொற்று அச்சத்தால் பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவதில் தாமதம் ஆகிறது.

தற்போது லோகேஷ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

கமலே தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி பகத்பாசில் நரேன் காளிதாஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

தற்போது விக்ரம் படத்தின் அவுட்டோர் காட்சிகளை முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.

இதன் பின்னர் செட் போட்டு காட்சிகளை படமாக்கவுள்ளனர்.

விக்ரம் சூட்டிங் நடக்கும் இதே தளத்தில் பிக்பாஸ் 5 படப்பிடிப்பும் நடக்கவுள்ளதாம். இவை இரண்டும் இவிபி ஸ்டுடியோவில் செட் அமைத்து படமாக்க உள்ளனர்.

எனவே ஒரே தளத்திற்கு சென்று பிக்பாஸ் & விக்ரம் இரண்டு சூட்டிங்கையும் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறாராம் உலகநாயகன்.

இப்போ சொல்லுங்க.. ஒரே கல்லில் 2 மாங்கா அடிக்க கமல் திட்டம் போடுகிறார் தானே..

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது என்பது கூடுதல் தகவல்.

Kamal Haasan’s super plan for 2 of his projects

யுவனின் பர்த் டே பார்ட்டியில் பாட்டு பாடி அசத்திய சிம்பு – தனுஷ்

யுவனின் பர்த் டே பார்ட்டியில் பாட்டு பாடி அசத்திய சிம்பு – தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன்ஷங்கர் ராஜா.

இவர் இளையராஜாவின் இளைய இசை வாரிசு என்றாலும் தனக்கான ஒரு இசை பாதையை வகுத்து அதில் வலம் வருகிறார்.

இன்றைய இளைஞர்களின் இதயம் அறிந்து பின்னணி இசையை கொடுப்பதிலும் கை தேர்ந்தவர் இவர்.

இந்த நிலையில் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா.

இதனை முன்னிட்டு நேற்று பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார். அதில் சிம்பு தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

யுவன் இசையமைத்த ‘லூசுப் பெண்ணே…’ என்ற பாடலை சிம்பு மேடையில் பாடினார்.

அதுபோல் யுவன் இசையமைத்த ‘ரவுடி பேபி..’ பாடலை பாடகி தீ உடன் இணைந்து தனுஷ் பாடினார்.

இந்த பாடல் வீடியோக்கள் நேற்று நள்ளிரவு முதலே வைரலாகி வருகிறது.

இந்த பார்ட்டியின் போது ‘என்ஜாயீ எஞ்சாமி’ பாடகர்களான அறிவு & தீ உடன் தனுஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

அதை தன் டிவிட்டர் தளத்தில் “எஞ்சாமிக்களுடன், ஒரு பில்லியனில் பாதி போட்டோ,” என பதிவிட்டுள்ளார் தனுஷ்.

அந்த போட்டோவை எடுத்தது நான்தான் என சந்தோஷ் நாராயணன் ரீட்வீட் செய்துள்ளார்.

Simbu and Dhanush sung a song in Yuvan’s birthday party

மை பொண்டாட்டி – சூர்யா..; வாடீ ராசாத்தீ – ரசிகர்கள்..; ஜோதிகாவை வரவேற்கும் நெட்டிசன்கள்

மை பொண்டாட்டி – சூர்யா..; வாடீ ராசாத்தீ – ரசிகர்கள்..; ஜோதிகாவை வரவேற்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி கமல் விஜய் அஜித் சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியவர் நடிகை ஜோதிகா.

நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்த பின்னர் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரீ எண்ட்ரீ கொடுத்து ’36 வயதினிலே’ படத்தின் நாயகியானார். அந்த படத்தில் இடம் பெற்ற ‘வாடீ ராசாத்தி…’ பாட்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

அது ஜோதிகாவை வரவேற்கும் விதமாக இருப்பதாக கருதப்பட்டது.

இதனையடுத்து ஜாக்பாட், தம்பி, நாச்சியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதுநாள் வரை எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் இணையாத ஜோதிகா தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

அதை அவரது கணவர் சூர்யா வரவேற்றுள்ளார்.

Vaadi Raasathi.. #Jo enters #Insta

#Jyotika is on Instagram officially now – her very first social media account

https://t.co/k5ck4WwfcJ

#Suriya – “my pondatti strongest, thrilled to see you on insta” ?

Actress Jyotika makes her social media debut on Instagram

Suriya Jyothika
Suriya Jyothika
More Articles
Follows