தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா, எஸ்ஏசி, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘மாநாடு’.
யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
அரசியல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது சிம்புவின் ‘மாநாடு’.
தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார்கள்.
சென்னை பூந்தமல்லி அருகே ஒரு பிரம்மாண்டமான மாநாடு அரங்கம் ஒன்றை கடந்த 10 நாட்களாக அமைத்து வந்தனர்.
இங்கு தான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.
இந்த நிலையில் ட்விட்டரில் RJ Rofina என்பவர் “அமெரிக்க அதிபர் ஜோ-பிடன் பருவகாலநிலை உச்சி மாநாட்டிற்கு இந்திய பிரதமர் உட்பட 40 தலைவர்களுக்கு அழைப்பு!” என்ற செய்தியை பதிவிட்டு இருந்தார்.
இந்த செய்தியை டேக் செய்த ‘மாநாடு’ தயாரிப்பாளர்…
*@SilambarasanTR_ மாநாடு க்கு வரசொல்லுங்க ….* என மோடியை அழைப்பது போல் பதிவிட்டு இருந்தார்.
தனுஷ் நடிப்பில் ரிலீசாகவுள்ள ‘கர்ணன்’ படத்தில்… கர்ணனை கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் பெரும் ஹிட்டடித்து வருகிறது.
அதே பாணியில் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
Simbu movie Producer invites PM Modi for Maanadu