காதலருடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஸ்ருதிஹாசன்

காதலருடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shruthihassan celebrated Christmas with her lover Michael Corsaleநடிகை ஸ்ருதிஹாசனும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

பொது நிகழ்ச்சிகளில் கூட இருவரும் ஒன்றாகவே பங்கேற்று வருகின்றனர்.

அண்மையில் கூட நடிகர் ஆதவ் கண்ணாதாசனின் திருமணத்தில் மைக்கேல் கோர்சலுடன் ஸ்ருதி கலந்து கொண்டார்.

இந்நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் படம் ஒன்றை ஸ்ருதியே தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shruthihassan celebrated Christmas with her lover Michael Corsale

அடுத்த டைரக்சன் மெர்சல் புரொடியூசருக்குதான்..; தனுஷ் கன்பார்ம்

அடுத்த டைரக்சன் மெர்சல் புரொடியூசருக்குதான்..; தனுஷ் கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush as directorநடிப்பு, தயாரிப்பு என பல துறைகளை கடந்து தற்போது டைரக்சன் துறையிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார் தனுஷ்.

இவர் முதன்முதலாக இயக்கிய பவர் பாண்டி படம் பட்டி முதல் சிட்டி வரை பட்டைய கிளப்பியது.

எனவே அடுத்த படத்தை விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் மௌனமே அதற்கு பதிலாக கிடைத்தது.

இந்நிலையில் தன் அடுத்த படத்தை மெர்சல் பட தயாரிப்பாளர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்க்கு இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் அதில் தான் நடிக்கவுள்ளதையும், மற்ற விவரங்களை 2018ல் வெளியிடுவேன் என தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தனுஷ்-சாய்பல்லவி கூட்டணியில் இணைந்தார் வரலட்சுமி

தனுஷ்-சாய்பல்லவி கூட்டணியில் இணைந்தார் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maari 2 stillsபாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 விரைவில் உருவாகவுள்ளது.

இப்படத்தை தனுஷ் தயாரித்து நடிக்கிறார்.

நாயகியாக சாய்பல்லவி நடிக்க, முக்கிய வேடத்தில் கிருஷ்ணா நடிக்கிறார்.

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஜீவாவின் 29வது படத்தில் நடிக்கும் கொரில்லா; படத்தலைப்பும் அதான்

ஜீவாவின் 29வது படத்தில் நடிக்கும் கொரில்லா; படத்தலைப்பும் அதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gorillaடான் சாண்டி இயக்கும் புதிய படத்தில் ஜீவா ஜோடியாக `அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

முக்கிய கேரக்டரில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் யோகி பாபு நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார்.

ஹெய்ஸ்ட் (திருட்டு சம்பந்தப்பட்ட) காமெடி த்ரில்லர் ஜேனரில் உருவாகும் இப்படம் ஜீவாவின் 29-வது படமாகும்.

விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்க, ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு `கொரில்லா’ என தலைப்பிட்டுள்ளனர்.

மேலும் தமிழ் சினிமாவில் முதன்முறையாக கொரில்லா ஒன்று இப்படத்தில் நடிக்கவுள்ளது.

Actor Jiivas 29th movie titled Gorilla and it plays main role

கடவுளாக பாவித்து ரஜினியை பிரதட்ஷினம் செய்த ரசிகர்

கடவுளாக பாவித்து ரஜினியை பிரதட்ஷினம் செய்த ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அவரது ரசிகர்கள் தலைவர் என அழைத்தாலும் ஒரு சிலர் அவரை தங்கள் தெய்வமாகவே வழிப்பட்டு வருகின்றனர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இந்நிலையில் இன்று தன் ரசிகர்கள் 3வது நாளாக போட்டோ எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

அப்போது பல ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் அவரது காலில் விழுந்தும், அவரை கட்டியணைத்தும் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

ஒரு ரசிகர் போட்டோ எடுப்பதற்கு முன்பு மேடையேறியதும் ரஜினியை கடவுளாக பாவித்து அவரை சுற்றி வலம் (பிரதட்ஷனம்) வந்தார்.

அதன்பின்னரே அவர் போட்டோ எடுத்துக் கொண்டார்.

பெரிய நடிகர்கள் தமிழக அரசை கேள்வி கேட்கனும்; விஜய் படத்தயாரிப்பாளர் வேண்டுகோள்

பெரிய நடிகர்கள் தமிழக அரசை கேள்வி கேட்கனும்; விஜய் படத்தயாரிப்பாளர் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer selva kumarஅருண்.சி இயக்கத்தில் விஜய் டிவி வைஷாலினி, மொட்ட ராஜேந்திரன். ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ள படம் ஆறாம் திணை.

இதன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது…

“இன்று சினிமா தயாரிக்கவேண்டும் என்றாலே பயமாக இருக்கிறது. படத்திற்கு பூஜை போட்டத்தில் ஆரம்பித்து ரிலீஸ் தேதி வரை எந்த திசையில் இருந்து என்ன பிரச்சனை வருமோ என பயந்துகொண்டே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஒரே இந்தியா ஒரே வரி என சொன்னார்கள்..

ஆனால் இங்கே தமிழ்நாட்டில் மட்டும் சினிமாவுக்கென தனியாக அதிக வரி விதிக்கிறார்கள்.

பெரிய நடிகர்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். இதை அரசாங்கத்துக்கு எதிரான குரலாக நினைக்கவேண்டாம்.

நமக்கான கஷ்டங்களுக்கு நாம் குரல் கொடுத்தால் தான் தீர்வு கிடைக்கும்.

இன்று புதிதாக திரையுலகில் படம் எடுக்க வருபவர்கள் சீனியர்களான பாக்யராஜ், பேரரசு போன்றவர்களிடம் உதவிகளை கேட்கலாம்” என தனது குமுறலை வெளிப்படுத்தினார்.

இதை தொடர்ந்து பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், “பேய் இருக்கா இல்லையான்னு கேட்டா இருக்குன்னுதான் சொல்வேன்.

அமானுஷ்யம்னா அது பேயா, இல்ல முனியா எதோ ஒன்னு இருக்குங்க. மனுசனால எது ஒன்றை பாக்க முடியாதோ அதை பார்க்கத்தான் ஆசைப்படுவான். இல்லைன்னா நயன்தாரா படத்துக்கு எதுக்கு இவ்வளவு கூட்டம் வருது.

பொன்ராஜ் பேசும்போது…

தியேட்டர்காரர்கள் கொளையடிக்கிறார்கள், அதனால் சின்ன படங்கள் சாகிறது என குற்றம் சாட்டினார். கடந்த வருடத்தில் நான் ஐம்பது படங்கள் விநியோகம் பண்ணினேன்.

அதுல 45 படங்கள் சின்ன படங்கள் தான். இன்றைக்கு விஜய் பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர் முதன்முதலா நடித்தபோது அது சின்ன படம் தான். எங்களை போன்ற தியேட்டர்காரர்கள் சின்ன படம் என அதை புறக்கணித்திருந்தால் அவர் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியுமா..?

தியேட்டர்களில் சில சின்ன படங்களுக்கு 15 பேர் கூட வர மாட்டேங்கிறாங்க.. இதுனால எங்களுக்கு ஏசி போடுற காசு கூட கிடைக்காது. அப்படின்னா அந்த படத்தை நிறுத்துறத தவிர எங்களுக்கு வேற வழியில்ல.. இதோ இப்ப அருவின்னு சின்ன படம் ஒன்னு வெளியாச்சு.

ஆனால் முதல்நாள்ல இருந்து நல்ல கூட்டம்.. அந்தப்படத்துக்கு மட்டும் கூட்டம் எப்படி வந்துச்சு. மக்களுக்கு மட்டும் எப்படியோ அது தெரியுது. அந்த வித்தை மட்டும் எங்களுக்கு தெரிஞ்சிருந்தா அத்தனை சின்ன படங்களையும் ஓட வைச்சிருப்போம். அந்த சக்ஸ் பார்முலாவ கண்டுபிடியுங்க.

முதல்ல திருட்டு விசிடி பிரச்சனை இருந்துச்சு. இப்போ படம் ரிலீஸாகி 15 நாட்கள்ல அமேசான்ல படம் வந்துருது. இது லீகலா வருதுன்னாலும் குறைஞ்சது ஒரு மாதத்திற்காவது படங்களை இப்படி அமேசான்ல கொடுக்காம இருங்க. திரையரங்குகள் தான் வசூலை மொத்தமாக அள்ளிக்கொடுக்க முடியும்.

அமேசனால அப்படி அள்ளிக்கொடுக்க முடியாது. தியேட்டர்கள் பொன்முட்டையிடும் வாத்து. அதை நீங்கள் அழித்து விடாதீர்கள்” என சூடு கிளப்பினார் அபிராமி ராமநாதன்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பேசிய இயக்குனர் கே.பாக்யராஜ்,

“பேய் இருக்கா இல்லையான்னு இப்ப வரைக்கும் எல்லோரிடமும் ஒரு கேள்வி இருந்துட்டே இருக்கு.. சின்ன வயசுல நான் கூட, இப்படி பேய் இருக்கும்னு நினைச்சு பயந்து பத்தடி தூரத்துல இருக்க என்னோட வீட்டுக்கு ஒரு பர்லாங் தூரம் சுத்திலாம் நடந்து வந்திருக்கேன். அப்புறம் போகப்போகத்தான் பேய் இல்லைன்னு எனக்கு தெளிவாச்சு.

ஒரு சிம்பிள் லாஜிக்.. இப்ப யாராலோ கொல்லப்பட்டு பேயா மாறுகிறவங்களுக்கு தங்களை கொன்னது யார்னு தெரியும். பேயா மாறிவந்ததும் அவங்களை கொன்னு பழி தீர்த்துட்டு போயிட்டா அப்புறம் காவல்துறை, நீதி மன்றம் இதுக்கெல்லாம் வேலையே இருக்காதே.

அப்படி ஏன் கொல்றது இல்ல..?“ என ஒரு பகுத்தறிவு கேள்வியுடன் படக்குழுவினரை வாழ்த்தி, இசை குறுந்தகட்டை வெளியிட்டார்.

நன்றி தெரிவித்து படத்தின் இயக்குனர் அருண்.சி பேசும்போது, “கடந்த மாதம் ஒரு கனவு வந்தது.. அந்த கனவில் நானும் படத்தின் தயாரிப்பாளரும் பாக்யராஜ் சாரிடம் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். அதெல்லாம் வர முடியாது என முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிடுகிறார் பாக்யராஜ்.

ஆனால் இப்போது நிஜத்தில் நாங்கள் சென்று அழைத்தபோது, நீங்க போங்க.. நான் வந்திடுறேன் என ஒரே வார்த்தையில் சொன்னார். இந்தப்படமும் இதுபோல நிறைய ட்விஸ்ட்டுகளுடன் இருக்கும்.

என்னுடைய 12 வருட கனவு நனவாகி இருக்கிறது.

மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா இருவருமே பல சிரமங்களை பொறுத்துக்கொண்டு கடுமையான உழைப்பை இந்தப்படத்திற்காக கொடுத்துள்ளார்கள்.

விஜய் டிவி குரேஷி இந்தப்படத்தின் வசனங்களில் சில கவுன்ட்டர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி கேட்டார், நிச்சயம் அவை படத்தில் கைதட்டல் பெறும். இந்தப்படத்துல நடிகை லாவண்யா கண்களாலேயே பேசி நடித்தார். படத்தில் பேய்களுக்கான வழக்கமான பிளாஸ்பேக் இல்லாமல் புதிய பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறோம்” என கூறினார் அருண்.சி.

More Articles
Follows