பட்டுக்கோட்டையை படு நாசமாக்கிய கஜா; படமாக்கிய இடங்களை பார்த்து *சீமத்துரை* வேதனை

பட்டுக்கோட்டையை படு நாசமாக்கிய கஜா; படமாக்கிய இடங்களை பார்த்து *சீமத்துரை* வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seemathurai felt sad about Gaja cyclone affected areas where they done shoot’சீமத்துரை’ என்னும் பெயரை கேட்டாலே நமக்கு கிராமங்களும் அங்கே வெள்ளந்தியாக திரியும் இளைஞர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். கிராமங்களில் வாழும் ஒவ்வொரு இளவட்ட வாலிபர்களுமே சீமத்துரை தான்.

அப்படி எங்கள் பகுதியான பட்டுக்கோட்டையை சுற்றி நடந்த உண்மை சம்பவங்களை வைத்துதான் இந்த படத்தை எடுத்து இருக்கிறோம்.

காலம் மாறினாலும் பிரச்சினைகள் மட்டும் மாறாது என்பார்கள். அந்த மாதிரி இன்றைக்கும் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவானது தான் சீமத்துரை படம்.

கிராம மக்களுக்கு அருவா, கத்தி மட்டும் ஆயுதம் அல்ல. பாசமும் ஒரு ஆயுதம் தான். பாசத்துக்கும் கர்வத்துக்கும் இடையே நடக்கிற போராட்டத்தை வாழ்வியலோடு பதிவு செய்து இருக்கிறோம்.

சீமத்துரை என்னும் தலைப்புக்கேற்றாற்போல் காதல், கலாட்டா, கலவரம் என்று எல்லாம் கலந்த ஒரு படமாக சீமத்துரை இருக்கும்.

படத்தில் கீதன் கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் ஊர் ஊராக சென்று கருவாடு விற்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

’நான் மகான் அல்ல’ மகேந்திரன், ’கயல்’ வின்செண்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர்.

ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி மாயன், மேடை கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் பேசும்போது, ‘ தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை சுற்றி தான் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பட்டுக்கோட்டையை சுற்றி உயர்ந்து நின்ற தென்னை மரங்கள் படத்தில் முக்கியமாக பதிவு செய்தோம்.

ஆனால் அந்த தென்னை மரங்களை கஜா புயல் சுத்தமாக அழித்துவிட்டது.

நாங்கள் அழகாக படம் பிடித்த பகுதிகள் இன்று அலங்கோலமாக கிடப்பதை பார்க்கும்போது படக்குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்து மக்கள் எங்களை அவர்கள் குடும்பங்களில் ஒருவராக நடத்தினார்கள். அவர்கள் மீண்டு எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.’ என்றார்.

இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின், ஒளிப்பதிவு – D திருஞான சம்பந்தம், படத்தொகுப்பு – T வீர செந்தில்ராஜ், பாடல்கள் – அண்ணாமலை, நடனம் – சந்தோஷ் முருகன்,
தயாரிப்பு – புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா
இணை தயாரிப்பு – ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சந்தோஷ் தியாகராஜன்

Seemathurai felt sad about Gaja cyclone affected areas where they done shoot

பாடல்களே இல்லாத பிரசாந்தின் *ஜானி* டிசம்பர் 14ல் ரிலீஸ்

பாடல்களே இல்லாத பிரசாந்தின் *ஜானி* டிசம்பர் 14ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Top Star Prashanth starrer Johnny set to release on 14th Dec 2018டாப் ஸ்டார் பிரசாந்த் மற்றும் சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடித்துள்ள படம் ஜானி.

இதில் பிரபு மற்றும் ஆனந்த்ராஜ் இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரித்துள்ளார்.

ஜீவா சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெற்றிச்செல்வன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அண்மையில் இப்படத்தில் டீசர் வெளியாகி பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை படைத்தது.

கள்ள நோட்டை மையமாக வைத்து இந்த ஆக்‌ஷன் படத்தை உருவாக்கியுள்ளனர்.

வருகிற டிசம்பர் 14ல் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் பாடல்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Top Star Prashanth starrer Johnny set to release on 14th Dec 2018

*இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு* படத்துடன் மோதும் *சீமத்துரை*

*இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு* படத்துடன் மோதும் *சீமத்துரை*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ivanukku Engeyo Macham Irukku movie clash with Seemathuraiரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் ரிலீஸ் இந்த வாரம் இருந்ததால், மற்ற படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

தற்போது வருகிற டிசம்பர் 7ஆம் தேதி இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு மற்றும் சீமத்துரை ஆகிய 2 படங்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதுபற்றிய விவரம் இதோ….

சாய் புரொடக்சன் நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சரவணன் தயாரித்துள்ள படம் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு“.

இதில் விமல், ஆஷ்னா சாவேரி, ஆனந்தராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோருடன் போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடித்துள்ளனர்.

ஆங்கில நடிகை “மியா ராய்“ கன்பைட் காஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தை முகேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

சீமத்துரை படத்தில் கீதன் நாயகனாகவும், வர்ஷா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார்.

’நான் மகான் அல்ல’ மகேந்திரன், ’கயல்’ வின்செண்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர்.

ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி மாயன், மேடை கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின், ஒளிப்பதிவு – D திருஞான சம்பந்தம், படத்தொகுப்பு – T வீர செந்தில்ராஜ், பாடல்கள் – அண்ணாமலை, நடனம் – சந்தோஷ் முருகன், தயாரிப்பு புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா, இணை தயாரிப்பு ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம்

Ivanukku Engeyo Macham Irukku movie clash with Seemathurai

ஆலங்குடி கணேசனுக்கு 10 லட்சம் செலவில் வீடு கட்டும் லாரன்ஸ்

ஆலங்குடி கணேசனுக்கு 10 லட்சம் செலவில் வீடு கட்டும் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழை குடிமகனாக வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் ஆலங்குடி கணேசன்.

அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை. ஆனால் யாரும் அனாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக்குறைய 500 அனாதை சடலங்களை அந்தந்த மத முறைப்படி ஈமக்கிரியை செய்து தகனம் மற்றும் அடக்கம் செய்தவர் இந்த கணேசன்.

இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் யாருக்காவது ஏதாவது ஒன்று என்றால் ஓடோடி வந்து உதவி செய்பவர் கணேசன்..

கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம் நிதி திரட்டி அனுப்பி வைத்தவர் இவர்.

இந்த இரக்கமுள்ளவரின் வீட்டையும் இரக்கமில்லாமல் கஜா காவு வாங்கி விட. அதையும் பொருட்படுத்தாமல் கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் போய் விட்டார்.

இதை கேள்விப்பட்ட ராகவா லாரன்ஸ் அந்த வீட்டை நேரில் போய் பார்த்து உடனடியாக புதிய வீட்டை கட்டிக் கொடுக்க முடிவெடுத்து அதற்கான பூமி பூஜையை இன்று துவக்கி வைத்துள்ளார்.

சாதாரண வீடு மாதிரி இல்லாமல் எல்லா வசதிகளுடன் அவரை வாழ வைத்து பார்க்க வேண்டும்…வீட்டுக்கு அவர் போனால் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பாத்திரங்கள் கட்டில் பீரோ மின் விசிறி ஏ.சி.என்று வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.. வீடு கட்ட சுமார் 7.50 லட்ச ரூபாய்க்கு மேலே ஆகும் மற்ற செலவுகளுக்கு 2.50 லடசம் செலவு ஆகும் மொத்தம் பத்து லட்சம் ஆகலாம் என்றாலும் பரவாயில்லை…..

எனென்றால் அவரை என் அப்பா ஸ்தானத்தில் பார்க்கிறேன்” என்கிறார் ராகவா லாரன்ஸ்

தேவ் படத்தை தொடர்ந்து மாநகரம் இயக்குனருடன் இணையும் கார்த்தி

தேவ் படத்தை தொடர்ந்து மாநகரம் இயக்குனருடன் இணையும் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Dev movie Karthi team up with Maanagaram directorலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டான படம் ‘மாநகரம்’.

இதில் சந்தீப் கி‌ஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

‘மாநகரம்’ படத்தை அடுத்து அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

தற்போது தேவ் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி.

After Dev movie Karthi team up with Maanagaram director

After Dev movie Karthi team up with Maanagaram director

அரசியல்வாதிகளே நாட்டின் பேரிடர்.; கஜா பகுதியில் கடுப்பான கமல்

அரசியல்வாதிகளே நாட்டின் பேரிடர்.; கஜா பகுதியில் கடுப்பான கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MNM Party leader Actor Kamal slams TN Govt in Gaja Cyclone relief workஇரண்டு வாரங்களுக்கு முன்பு நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது.

15 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் நிவாரணப் பணிகள் முடிந்தபாடில்லை.

இந்நிலையில் 2வது முறையாக கஜா பாதித்த பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன்பின்னர் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள 7 பதிவுகள் இதோ….

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு “நல்ல சோறு” போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் “புழுத்துப்போன அரிசியை” சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக் கூட 3 தவணையாக அறிவித்திருப்பது மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத்தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும். (2/6)

அரசு இயந்திரம் மேலிருந்து கீழ் வரை கால் பாவி செயலாற்றிடவேண்டும். நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் “கிராம நிர்வாக அதிகாரிகள்” கூட சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், ”வெறும் அறிக்கையாக காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது”. (3/6)

வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. (4/6)

கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி வருவதற்கு வழியில்லாத நிலையில், இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்பது கேள்விக்கு உரியதாக இருக்கின்றது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம். (5/6)

இப்பொழுது வரை நாம் அனைவரும் செய்திருப்பது “முதலுதவி” மட்டுமே. முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8 வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும். (6/6)

கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

MNM Party leader Actor Kamal slams TN Govt in Gaja Cyclone relief work

MNM Party leader Actor Kamal slams TN Govt in Gaja Cyclone relief work

More Articles
Follows