தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் தன் தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் போராடி வருகின்றனர்.
மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து போராடுகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திராவிலுள்ள நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜாவும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகிறார்.
இந்து மதம் இருப்பதால் கொரானா பாதிப்பு இந்தியாவில் இல்லை.; சூர்யா கார்த்தி பட நடிகை விளக்கம்
தன் தொகுதி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்மணிக்கு சிகிச்சை கொடுக்க வசதி இல்லாததால் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு தனது சொந்த காரில் அந்த பெண்ணை அனுப்பி வைத்திருந்தார் ரோஜா.
தற்போது ஆந்திராவிலுள்ள தனது இல்லத்தில் கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து கொரோனாவிலிருந்து கடவுள் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, சிறப்பு யாகத்தை நடத்தியிருக்கிறார் ரோஜா.
Roja and RK Selvamani made special yaagam to prevent from Corona attack