தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சன் லைட் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் அறிமுக இயக்குநர் துரைமுருகன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘எவன்’.
இதில் திலீபன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தீப்தி மானே நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ஜே. கே. சஞ்சீத், உஜ்ஜைனி ராய், கானா பாலா, பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சிவராமன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை பாலா செய்துள்ளார்.
ஏ.கே. சசிதரன் இசையமைக்க பாடல்களை மறைந்த புலவர் புலமைப்பித்தன், விவேகா, கானா பாலா, ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
‘எவன்’ படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…
“தமிழ் திரையுலகில் அம்மா -மகன் உறவை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வந்திருக்கலாம். ஆனால் இந்த படத்தில் அம்மா மகன் உறவை புதுவிதமான கோணத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறோம்.
அதாவது கதையின் நாயகன் அம்மாவிற்காக உயிரையும் கொடுப்பான். உயிரையும் எடுப்பான் இதுதான் இந்த படத்தில் ஒரு வரி கதை.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்பாக ‘எவன்’ தயாராகி இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதற்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு முறை கூத்து பட்டறைக்கு சென்ற போது என் கண்ணில் பட்டு கண நேரத்தில் மனதில் கதாபாத்திரமாக பதிந்தவர் தான் திலீபன்.
அதன் பிறகு அவரை பற்றி விசாரித்த போது, அவர் புலவர் புலமைப்பித்தனின் பேரன் என்று தெரிந்தது. பொருத்தமான நபரை தான் திரையுலகில் அறிமுகப்படுத்துகிறோம் எனும் உற்சாகம் ஏற்பட்டது. இந்த திரைப்படம் பல தடைகளை கடந்து ஏப்ரல் 7ம் தேதியன்று வெளியாகிறது.
இந்த படத்தில் உள்ள எல்லா சண்டை காட்சிகளிலும் டூப் போடாமல் இவரே நடித்துள்ளார். முறையாக சண்டை பயிற்சி கற்றுள்ளார் நடிகர் திலீபன்.
அங்கு படப்பிடிப்பில் இருந்தவர்கள் சொன்ன போதும் கூட 20 மாடியில் இருந்து குதிக்கும் காட்சியில் நடிகர் ஜாக்கி ஜானை போல ஒரே டேக்கில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இரு சக்கர & நான்கு சக்கர வாகனங்களில் நடிகர் அஜித்தை போல வித்தை காட்டும் திறமை படைத்தவர் எவன் (YEVAN ) பட நாயகன் திலீபன்”
இவ்வாறு இயக்குநர் துரைமுருகன் தெரிவித்தார்.
Pulamai Pithan grandson Thileepan makes debut in Evan