தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புலவர் புலமைப்பித்தன் பேரன் திலீபன் புகழேந்தி (Dhileepan Pugazhendhi) மலையாள சோசியல் மீடியாவில் புகழ்பெற்ற அதுல்யா பாலக்கல் (Athulya palakkal) என்பவரை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் வரும் 2024 பிப்ரவரியில் தங்களுக்கான புதுவரவை (குழந்தை) எதிர்பார்த்து உள்ளனர்.
திலீபன் புகழேந்தி நடித்த ‘எவன்’ திரைப்படம் இவ்வருடம் வெற்றி படமாக அமைந்திருந்தது.
அதைத்தொடர்ந்து ‘சாகாவரம்’ திரைப்படம் இறுதிக்கட்டப் பணியில் உள்ளார்.
‘ஆண்டனி’ என்கிற திரைப்படம் ஆரம்ப கட்ட வேலைகளும் நடைபெறுகின்றன.
இவ்விரண்டு திரைப்படங்களும் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் அடுத்த வருடம் மிக பிரமாண்டமாக வெளி வர உள்ளது.
கூடுதல் தகவல்..
சினிமாவைப் பொறுத்தவரை படைப்பாளிகள் தங்களுடைய படைப்பை திரைப்படத்தை ஒரு குழந்தையாகவே பாவிப்பார்கள்.
பல மாதங்கள் உழைத்து ஒரு படத்தை ரிலீஸ் செய்வது ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமம் என்றும் சொல்வார்கள்.
அப்படி பார்க்கையில் திலீபனுக்கு நிஜத்தில் குழந்தையும் திரையில் இரண்டு குழந்தை (படங்களும்) வரவிருப்பதால் இரண்டும் சிறப்பான குழந்தையாக பேரும் புகழும் அடைய வாழ்த்துக்கள்.
Dhileepan Pugazhendhi waiting for his baby & movie release