தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களும் ஒன்றிணைந்தது தான் புதுச்சேரி.
தற்போது கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
பள்ளிகளை எப்போது திறக்கலாம் என தெரியாமல் மத்திய & மாநில அரசுகளே திண்டாடி வருகிறது.
இந்த சூழ்நிலையால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடியவில்லை.
இதனால் பள்ளிகள் மூலம், பெற்றோர்களிடம் அரிசி மற்றும் உதவித்தொகை நேரடியாக நேற்று செப்டம்பர் 15 முதல் வழங்க அரசு உத்தரவிட்டது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி.. ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவுக்கு பதிலாக தானியங்கள், உதவித்தொகை வழங்கப் படுகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.290 ரொக்கமும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.390 ரொக்கமும் வழங்கப்படுகிறது.
அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று இதனை பெற்றுக்கொள்ளலாம்
Pudhucherry govt provides 4kg rice to school students