அனபெல் கேரக்டருக்கு ஆங்கில டப்பிங் கொடுத்த ‘ஜீனியஸ்’ நடிகை பிரியாலால்

அனபெல் கேரக்டருக்கு ஆங்கில டப்பிங் கொடுத்த ‘ஜீனியஸ்’ நடிகை பிரியாலால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்த “அன்னா பெல்லே சேதுபதி” ஒ டி டி பிளாட்ஃபாமில் வெளியானது. படத்தில், வெளிநாட்டு பெண் வேடம் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் டாப்சி.

அதிலும், ஆங்கில உச்சரிப்பில் டாப்சி பேசும் அழகு அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் உயிரூட்டியது. அந்த குரலுக்கு உயிரூட்டியவர், தென்னிந்திய நடிகை பிரியா லால்.

ஆம், சுசீந்திரன் இயக்கிய ஜீனியஸ் மற்றும் தெலுங்கில் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் மோகன் இயக்கிய ” குவா கோரின்கா “(Love Birds) ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த அதே பிரியாலால் தான் டாப்சிக்கு ஆங்கிலத்தில் குரல் கொடுத்துள்ளார்.

இந்த கதா பாத்திரத்திற்காக பல நடிகைகள் மற்றும் டப்பிங் கலைஞர்களை வரவழைத்து டப்பிங் செய்து பார்த்தனர் .

ஆனால் எந்த குரலும் பிரிட்டிஷ் பாணியில் உச்சரிப்புடன் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. அந்த வேளையில் தான் வெளிநாட்டு பெண்ணான பிரியலால் குறித்தும் அவரது குரல் வளம் மற்றும் துல்லியமான ஆங்கில உச்சரிப்பு பற்றியும் தெரியவந்தது.

ஆனால் தமிழ் -தெலுங்கு பாடங்களில் ஹீரோயினாக நடித்து வரும் அவர் டப்பிங் பேச சம்மதிப்பாரா என்ற சந்தேகம் பட குழுவினருக்கு. இருந்தாலும் படத்தின் தன்மை உணர்ந்து பட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்கி பிரியாலால் குரல் கொடுக்க ஒப்பு குரல் கொடுத்துள்ளார்.

பிரியாவின் குரல், அவ்வளவு துல்லியமாக பிரிட்டிஷ் பாணியில் பேசி அசத்தியதை படத்தின் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் மற்றும் அனைவரும் பாராட்டினார்கள். இப்பொழுது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

துபாயிலுள்ள ராசல் கைமாவில் பிறந்து லண்டனில் படித்து வளர்ந்த பிரியா லாலுக்கு நடிப்பும் நடனமும் தான் உயிர் மூச்சு. தமிழ் , மலையாளம், தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்திய பிரியா லால், ஹீரோயினாக நடிக்கும் தனது அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் தமிழில் சொந்த குரலில் பேசி நடிப்பதற்காக தமிழ் மொழியும் கற்று கொண்டுள்ளார். லண்டன் வாசியாக இருந்த பிரியா லால் கொச்சியில் தங்கி கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Priyaa Lal grabs attention in Vijay Sethupathi starrer Annabelle Sethupathy

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படம் ‘இதாஆப’ படத்தின் 2ஆம் பாகமா?

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படம் ‘இதாஆப’ படத்தின் 2ஆம் பாகமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ மற்றும் ’மஹா’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதில் ‘மாநாடு’ (நவம்பர் 4ல்) தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

’மஹா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நம்பலாம்.

தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தையும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சிம்புவின் 48வது படமாக உருவாகும் இப்படத்திற்கு கொரோனா குமார் என பெயரிட்டுள்ளனர்.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கான தலைப்பிற்காக ஒரு் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் குமுதா, குமார் கேரக்டர்களை இணைத்து இந்த தலைப்பை அறிவித்துள்ளனர்.

எனவே இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக இந்தபடம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Simbu to play the lead in Director Gokuls Corona Kumar

எக்ஸாம் மார்க் மட்டுமே வாழ்க்கையில்ல.. உங்க தற்கொலை பெற்றோருக்கு நீங்க தரும் தண்டனை – சூர்யா

எக்ஸாம் மார்க் மட்டுமே வாழ்க்கையில்ல.. உங்க தற்கொலை பெற்றோருக்கு நீங்க தரும் தண்டனை – சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாணவர்கள் தேர்வில் தோல்வியுருவதால் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சூர்யா. அதில் அவர் கூறியிருப்பதாவது :

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானின்று வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

மாணவ, மாணவிகள் எல்லோரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டுமென்று ஒரு அண்ணனாக வேண்டி கேட்டுக்கிறேன். உங்களுக்கு போன வாரம் முன்னாடி, போன மாசம் இருந்த ஏதோவொரு மிகப் பெரிய கவலை, வேதனை இப்போ இருக்கா? யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும், ஏன்? இல்லாமல்கூட போயிருக்கும்.

ஒரு பரீட்சை உங்கள் உயிரை விட பெருசில்லை. உங்கள் மனசுக்கு கஷ்டமாக இருக்கா? நீங்க நம்புகிறவர்கள், உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்கள், அப்பா, அம்மா, பெரியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என்று யாரிடமாவது எல்லாத்தையும் மனசுவிட்டு பேசிடுங்கள்.

இந்த பயம், கவலை, வேதனை, விரக்தி இவையெல்லாமே கொஞ்ச நேரத்தில் மறையும் விஷயங்கள்.

தற்கொலை.. வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்.. என்று முடிவு பண்றதெல்லாம் உங்களை ரொம்ப விரும்புகிறவர்களுக்கு, அப்பா, அம்மா, குடும்பத்திற்கு நீங்க கொடுக்கும் வாழ்நாள் தண்டனை, மறந்துடாதீங்க.

நான் அத்தனை எக்ஸாம்ல ஃபெயில் ஆகியிருக்கேன். ரொம்ப ரொம்ப கேவலமாக மார்க்ஸ் வாங்கியிருக்கேன். அதுனால உங்களில் ஒருவனாக நிச்சயமாக சொல்ல முடியும்.

மதிப்பு, தேர்வு இதுமட்டுமே வாழ்க்கையில்லை. சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது. உங்களை புரிந்துகொள்ளவும், நேசிக்கவும் நிறைய பேர் இருக்கோம்.

நம்பிக்கையாக, தைரியமாக இருந்தால், எல்லோரும் ஜெயிக்கலாம். பெருசா ஜெயிக்கலாம்.

அச்சமில்லை… அச்சமில்லை… அச்சமென்பதில்லையே…

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

‘பொன்னியின் செல்வன்-1’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

‘பொன்னியின் செல்வன்-1’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’.

இதில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, பிரபு மற்றும் விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

மணிரத்னம் “பொன்னியின்செல்வன்” எடுக்கிறார் என்றதும் , படம் ரிலீஸ்க்கு முன் நாவலை முதலில் படித்து விடவேண்டும் என்று ஆவலில் உலகம் முழுக்க பலர் இதை இப்பொழுது படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த படம் உருவாகும்போதே 2 பாகங்களாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

எனவே புதிய போஸ்டரை வெளியிட்டு. இப்படம் 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் (ஏப்ரல்-மே) ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

வலிமை அப்டேட் : ரஜினி & சிம்புவால் தடுமாறும் அஜித்..; செப்டம்பரில் டீசர்.. அக்டோபரில் ரிலீஸ்.!

வலிமை அப்டேட் : ரஜினி & சிம்புவால் தடுமாறும் அஜித்..; செப்டம்பரில் டீசர்.. அக்டோபரில் ரிலீஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வரும் படம் ‘வலிமை’. இசை : யுவன்

இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் டிராக்கான.. ‘நாங்க வேற மாதிரி…’ என்ற பாடல் வெளியாகி வைரலானது.

இத கொஞ்சம் பாருங்க : கொரோனாவை முந்தி முதலிடம் பிடித்த ‘வலிமை’..; இரண்டாம் இடத்தில் ‘மாஸ்டர்’

வெகுவிரைவில் இரண்டாவது பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் செப்டம்பரில் வலிமை டீசரை வெளியிடவுள்ளதாகவும் அக்டோபரில் (ஆயுதபூஜை) படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த (800 தியேட்டர்கள் வரை) & சிம்புவின் ‘மாநாடு’ (250 தியேட்டர்கள் வரை) படங்களுக்கு அதிகளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் வலிமை-க்கு அதிக தியேட்டர் கிடைக்காது என்பதால் அஜித் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Reason behind Thala Ajith’s Valimai release date not finalised

சிம்புவின் 48வது படத்தை தயாரிக்கும் வேல்ஸ் பிலிம்ஸ்..; இயக்குனர் யார்.?

சிம்புவின் 48வது படத்தை தயாரிக்கும் வேல்ஸ் பிலிம்ஸ்..; இயக்குனர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ மற்றும் ’மஹா’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதில் ‘மாநாடு’ (நவம்பர் 4ல்) தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

’மஹா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நம்பலாம்.

இத கொஞ்சம் பாருங்க : சிம்புவின் ‘கொரோனா குமார்’ படம் ‘இதாஆப’ படத்தின் 2ஆம் பாகமா?

தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சிம்புவின் 48வது படமாகும்.

இந்த படத்தையும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் யார்? என்ற தகவல் நாளை வெளியாகலாம்.

Vels films next with STR announcement tomorrow

More Articles
Follows