சிம்புவின் ‘கொரோனா குமார்’ படம் ‘இதாஆப’ படத்தின் 2ஆம் பாகமா?

சிம்புவின் ‘கொரோனா குமார்’ படம் ‘இதாஆப’ படத்தின் 2ஆம் பாகமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ மற்றும் ’மஹா’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதில் ‘மாநாடு’ (நவம்பர் 4ல்) தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

’மஹா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நம்பலாம்.

தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தையும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சிம்புவின் 48வது படமாக உருவாகும் இப்படத்திற்கு கொரோனா குமார் என பெயரிட்டுள்ளனர்.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கான தலைப்பிற்காக ஒரு் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் குமுதா, குமார் கேரக்டர்களை இணைத்து இந்த தலைப்பை அறிவித்துள்ளனர்.

எனவே இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக இந்தபடம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Simbu to play the lead in Director Gokuls Corona Kumar

எக்ஸாம் மார்க் மட்டுமே வாழ்க்கையில்ல.. உங்க தற்கொலை பெற்றோருக்கு நீங்க தரும் தண்டனை – சூர்யா

எக்ஸாம் மார்க் மட்டுமே வாழ்க்கையில்ல.. உங்க தற்கொலை பெற்றோருக்கு நீங்க தரும் தண்டனை – சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாணவர்கள் தேர்வில் தோல்வியுருவதால் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சூர்யா. அதில் அவர் கூறியிருப்பதாவது :

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானின்று வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!

மாணவ, மாணவிகள் எல்லோரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டுமென்று ஒரு அண்ணனாக வேண்டி கேட்டுக்கிறேன். உங்களுக்கு போன வாரம் முன்னாடி, போன மாசம் இருந்த ஏதோவொரு மிகப் பெரிய கவலை, வேதனை இப்போ இருக்கா? யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும், ஏன்? இல்லாமல்கூட போயிருக்கும்.

ஒரு பரீட்சை உங்கள் உயிரை விட பெருசில்லை. உங்கள் மனசுக்கு கஷ்டமாக இருக்கா? நீங்க நம்புகிறவர்கள், உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்கள், அப்பா, அம்மா, பெரியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என்று யாரிடமாவது எல்லாத்தையும் மனசுவிட்டு பேசிடுங்கள்.

இந்த பயம், கவலை, வேதனை, விரக்தி இவையெல்லாமே கொஞ்ச நேரத்தில் மறையும் விஷயங்கள்.

தற்கொலை.. வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்.. என்று முடிவு பண்றதெல்லாம் உங்களை ரொம்ப விரும்புகிறவர்களுக்கு, அப்பா, அம்மா, குடும்பத்திற்கு நீங்க கொடுக்கும் வாழ்நாள் தண்டனை, மறந்துடாதீங்க.

நான் அத்தனை எக்ஸாம்ல ஃபெயில் ஆகியிருக்கேன். ரொம்ப ரொம்ப கேவலமாக மார்க்ஸ் வாங்கியிருக்கேன். அதுனால உங்களில் ஒருவனாக நிச்சயமாக சொல்ல முடியும்.

மதிப்பு, தேர்வு இதுமட்டுமே வாழ்க்கையில்லை. சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது. உங்களை புரிந்துகொள்ளவும், நேசிக்கவும் நிறைய பேர் இருக்கோம்.

நம்பிக்கையாக, தைரியமாக இருந்தால், எல்லோரும் ஜெயிக்கலாம். பெருசா ஜெயிக்கலாம்.

அச்சமில்லை… அச்சமில்லை… அச்சமென்பதில்லையே…

இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.

‘பொன்னியின் செல்வன்-1’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

‘பொன்னியின் செல்வன்-1’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’.

இதில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, பிரபு மற்றும் விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

மணிரத்னம் “பொன்னியின்செல்வன்” எடுக்கிறார் என்றதும் , படம் ரிலீஸ்க்கு முன் நாவலை முதலில் படித்து விடவேண்டும் என்று ஆவலில் உலகம் முழுக்க பலர் இதை இப்பொழுது படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த படம் உருவாகும்போதே 2 பாகங்களாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

எனவே புதிய போஸ்டரை வெளியிட்டு. இப்படம் 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் (ஏப்ரல்-மே) ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

வலிமை அப்டேட் : ரஜினி & சிம்புவால் தடுமாறும் அஜித்..; செப்டம்பரில் டீசர்.. அக்டோபரில் ரிலீஸ்.!

வலிமை அப்டேட் : ரஜினி & சிம்புவால் தடுமாறும் அஜித்..; செப்டம்பரில் டீசர்.. அக்டோபரில் ரிலீஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வரும் படம் ‘வலிமை’. இசை : யுவன்

இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் டிராக்கான.. ‘நாங்க வேற மாதிரி…’ என்ற பாடல் வெளியாகி வைரலானது.

இத கொஞ்சம் பாருங்க : கொரோனாவை முந்தி முதலிடம் பிடித்த ‘வலிமை’..; இரண்டாம் இடத்தில் ‘மாஸ்டர்’

வெகுவிரைவில் இரண்டாவது பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் செப்டம்பரில் வலிமை டீசரை வெளியிடவுள்ளதாகவும் அக்டோபரில் (ஆயுதபூஜை) படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த (800 தியேட்டர்கள் வரை) & சிம்புவின் ‘மாநாடு’ (250 தியேட்டர்கள் வரை) படங்களுக்கு அதிகளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் வலிமை-க்கு அதிக தியேட்டர் கிடைக்காது என்பதால் அஜித் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Reason behind Thala Ajith’s Valimai release date not finalised

சிம்புவின் 48வது படத்தை தயாரிக்கும் வேல்ஸ் பிலிம்ஸ்..; இயக்குனர் யார்.?

சிம்புவின் 48வது படத்தை தயாரிக்கும் வேல்ஸ் பிலிம்ஸ்..; இயக்குனர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ மற்றும் ’மஹா’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதில் ‘மாநாடு’ (நவம்பர் 4ல்) தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

’மஹா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நம்பலாம்.

இத கொஞ்சம் பாருங்க : சிம்புவின் ‘கொரோனா குமார்’ படம் ‘இதாஆப’ படத்தின் 2ஆம் பாகமா?

தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சிம்புவின் 48வது படமாகும்.

இந்த படத்தையும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் யார்? என்ற தகவல் நாளை வெளியாகலாம்.

Vels films next with STR announcement tomorrow

விக்ரம் சாந்தனு ஆனந்தி இணையும் ‘இராவண கோட்டம்’ சூட்டிங் அப்டேட்

விக்ரம் சாந்தனு ஆனந்தி இணையும் ‘இராவண கோட்டம்’ சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவி தயாரிக்கும் “இராவண கோட்டம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

படம் குறித்து தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவி கூறியதாவது….

“இராவணகோட்டம்” படத்தின் திரைப்படத்தின் இந்த பயணம் மனதிற்கு மிக நெருக்கமானதும், ப்ரத்யேகமானதுமாகும். மற்ற அனைத்து படங்கள் போலவே, இந்த பொது முடக்க காலத்தில், இப்படத்தின் படப்பிடிப்பும் பல தடைகளை சந்தித்தது.

தற்போது படத்தின் அனைத்து படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்தது, படக்குழு அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. தான் உறுதியளித்தபடி சரியாக திட்டமிட்டு, படப்பிடிப்பை முடித்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இராவணகோட்டம் திரைப்படம் சாந்தனு பாக்யராஜ் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனை திரைப்படமாக இருக்கும். எல்லா தயாரிப்பாளர்களும் தன் நடிகரை புகழ்வது போல் இதை நான் கூறவில்லை.

இப்படத்தில் சாந்தனு நடித்திருந்த காட்சிகளை பார்த்துவிட்டே, இதனை கூறுகிறேன். விரைவில் படத்தின் போஸ்ட புரடக்சன் பணிகளும் முடிக்கப்படவுள்ளன.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ, இசை, உலக திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம் என்றார்.

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கூறியதாவது…

இப்படத்தில் மிகுந்த ஈடுபாடுடனும், அர்ப்பணிப்புடன், உழைத்து உருவாக்கிய தயாரிப்பாளர் கண்ணன் ரவி அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். படக்குழுவிலுள்ள அனைவருக்குமே இது ஒரு முக்கியமான திரைப்படம், அவருடைய ஆதரவின் காரணமாக எங்கள் கனவு படைப்பு மிக அழகாக உருவானதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் மிகத் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு நடிகரும் தொழில்நுட்பவியலாளர்களும் முழு அர்ப்பணிப்புடன் கடுமையான உழைப்பை வழங்கியுள்ளனர்.

இத்திரைப்படம் அனைத்து உள்ளங்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன் என்றார்.

விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கியுள்ள,
இராவணகோட்டம் திரைப்படத்தை Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.

சாந்தனு பாக்யராஜ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இளையதிலகம் பிரபு சார், இளவரசு, குக் வித் கோமாளி தீபா, அருள்தாஸ், சுஜாதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Actor Shanthanu’s Raavana Kottam shooting wrapped

More Articles
Follows