தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சங்கத்துக்கு உதவும் வகையில் பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகவிருந்த இந்த படத்தில் சாயிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
கடந்த 2017-ம் ஆண்டு இந்த படம் தொடங்கப்பட்டது.
ஆனால் சில பிரச்சினைகளால் இதன் சூட்டிங் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் இந்த படத்தை தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் பிரபுதேவா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கார்த்தியும் விஷாலும் இணைந்து நடிப்பார்களா? என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.
ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா.
அதனையடுத்து இருவரும் சில ஆண்டுகள் காதலித்தனர். திருமணம் வரை சென்ற அவர்களது காதல் திடீரென முறிந்தது.
தற்போது டைரக்டர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து வருகிறார்.
இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
ஆனால் ஐசரி கணேஷ் தரப்பில்… ‘கருப்புராஜா வெள்ளைராஜா’ படம் மீண்டும் உருவாகவில்லை. அதுகுறித்து பரவிவரும் செய்திகள் உண்மையில்லை. ” என கூறியுள்ளார்.