தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’.
இதில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, பிரபு மற்றும் விக்ரம் பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
மணிரத்னம் “பொன்னியின்செல்வன்” எடுக்கிறார் என்றதும் , படம் ரிலீஸ்க்கு முன் நாவலை முதலில் படித்து விடவேண்டும் என்று ஆவலில் உலகம் முழுக்க பலர் இதை இப்பொழுது படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த படம் உருவாகும்போதே 2 பாகங்களாக உருவாகி வருகிறது.
இந்த நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
எனவே புதிய போஸ்டரை வெளியிட்டு. இப்படம் 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் (ஏப்ரல்-மே) ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.