தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த்… தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலும் தவிர்க்க முடியாத பெயர்..
கடந்து 30 ஆண்டுகளாக இவரை ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்த நிலையில்.. அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு பின்னர் கொரோனா காரணத்தால் பின் வாங்கி விட்டார்.
ஆனாலும் ரஜினிக்கு ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் மார்ச் 26ஆம் தேதி பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது.
மனிதம் காத்து மகிழ்வோம் என்ற தலைப்பில் ரஜினிகாந்த்க்கு பாராட்டு விழா மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதில் ரஜினி மன்றத்தில் உள்ள நலிவடைந்த ரசிகர்களுக்கு, ரசிகர்களே உதவி செய்யும் விதமாக ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசு, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் நட்டி நட்ராஜ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது இதில் அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதால் மீண்டும் ரஜினி அரசியலுக்கு வருகிறாரா.? அல்லது இது அரசியலை முன்னெடுக்கும் நிகழ்வா? எனவும் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது..
மீண்டும் முதலேர்ந்தா.?
Political leaders in a function led by Rajini fans.!?