மீண்டும் முதலேர்ந்தா.? ரஜினி ரசிகர்கள் முன்னெடுக்கும் விழாவில் அரசியல் தலைவர்கள்.!?

மீண்டும் முதலேர்ந்தா.? ரஜினி ரசிகர்கள் முன்னெடுக்கும் விழாவில் அரசியல் தலைவர்கள்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்… தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலும் தவிர்க்க முடியாத பெயர்..

கடந்து 30 ஆண்டுகளாக இவரை ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்த நிலையில்.. அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு பின்னர் கொரோனா காரணத்தால் பின் வாங்கி விட்டார்.

ஆனாலும் ரஜினிக்கு ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் மார்ச் 26ஆம் தேதி பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது.

மனிதம் காத்து மகிழ்வோம் என்ற தலைப்பில் ரஜினிகாந்த்க்கு பாராட்டு விழா மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதில் ரஜினி மன்றத்தில் உள்ள நலிவடைந்த ரசிகர்களுக்கு, ரசிகர்களே உதவி செய்யும் விதமாக ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசு, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் நட்டி நட்ராஜ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது இதில் அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதால் மீண்டும் ரஜினி அரசியலுக்கு வருகிறாரா.? அல்லது இது அரசியலை முன்னெடுக்கும் நிகழ்வா? எனவும் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது..

மீண்டும் முதலேர்ந்தா.?

Political leaders in a function led by Rajini fans.!?

நான் அரசியலுக்கு வராததற்கு அதுதான் காரணம்..; மீண்டும் ரஜினி விளக்கம்

நான் அரசியலுக்கு வராததற்கு அதுதான் காரணம்..; மீண்டும் ரஜினி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மார்ச் 11ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையின் 25வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

எப்போதும் போல தன்னுடைய பேச்சில் கலகலப்பும் உண்மையும் கலந்து பேசினார்.

அவர் பேசியதாவது…

“நான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்து விட்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அது உங்கள் எல்லாருக்கும் அறிந்தது தான். கொரோனா வேகமாக பரவியது.

அப்போது என்னை பரிசோதித்த டாக்டர்கள் உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு உள்ளது. மேலும் நான் Immunosuppressant. மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன்.

இந்த சமயத்தில் நீங்கள் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது. இதனால் ஆபத்து என்றனர்.

மேலும் நீங்கள் எங்கு சென்றாலும் மற்றவர்களுடன் சேர்ந்து நிற்காமல் 10 அடி தூரத்தில் நிற்க வேண்டும்.. நிச்சயமாக மாஸ்க் போட வேண்டும் என்றனர். இது கண்டிப்பாக சாத்தியம் இல்லாத ஒன்றாகும்.

ஒரு கட்டத்தில் நாங்களே வந்து இதனை மக்கள் முன்னிலையில் தெரிவிக்கிறோம் என டாக்டர்கள் சொன்னார்கள். எனவே தான் நான் அரசியல் முடிவில் இருந்து பின் வாங்கினேன்.. அரசியலுக்கு வர மாட்டேன் என்று அறிவித்தேன்” என்றார் ரஜினிகாந்த்.

Rajinikanth speech at sapiens health foundation

ஒரே பாடலில் உயர்ந்த நாயகன் நான் அல்ல.; பிரசன்னா பேச்சுக்கு உதயநிதி விளக்கம்

ஒரே பாடலில் உயர்ந்த நாயகன் நான் அல்ல.; பிரசன்னா பேச்சுக்கு உதயநிதி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற படத்தை இயக்கியவர் மாறன்.

இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’.

இந்த படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க ஆத்மிகா நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஸ்ரீகாந்த் பிரசன்னா சென்ட்ராயன் சுபிக்ஷா வசுந்தரா மாரிமுத்து உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்துள்ளனர்.

சித்து என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை மார்ச் 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட உள்ளது.

இந்த நிலையில் இன்று மார்ச் 11ஆம் தேதி சென்னையில் பத்திரிக்கையாளர்களை பட குழுவினர் சந்தித்தனர்.

அப்போது மேடையில் நடிகர் பிரசன்னா பேசும் போது..

“கொரோனா காலகட்டத்திற்கு முன்பே இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் உதயநிதி திமுகவின் இளைஞர் அணி தலைவர்.. பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தற்போது தமிழக அமைச்சர் என படிப்படியாக உயர்ந்துள்ளார்.

சினிமாவில் ஒரே பாடலில் நாயகன் பெரிய ஆளாகி விடுவார் அதுபோல இந்த படம் முடிவதற்குள் உதயநிதி உயர்ந்து நிற்கிறார்” என பேசினார்.

அதன் பிறகு உதயநிதி பேசும் போது பிரசன்னாவின் பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார் ய.

“சினிமாவில் காட்டப்படுவது போல் ஒரே பாடலில் நான் உயர்ந்துவிடவில்லை.. அது நான்கு நிமிடத்தில் ஒரு பாடலில் நாயகன் வாழ்வில் உயர்வதாக காட்டப்படும்.

நான் நான்கு ஆண்டுகளில் திமுக பொறுப்பில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் தற்போது அமைச்சர் என உயர்ந்து நிற்கிறேன்” என கலகலப்பாக பேசினார் உதயநிதி.

Udhayanidhi speech at Kannai Nambathe press meet

சஞ்சய் தத் என்ட்ரி. ஸ்வீட் அப்டேட் கொடுத்த லியோ டீம்!

சஞ்சய் தத் என்ட்ரி. ஸ்வீட் அப்டேட் கொடுத்த லியோ டீம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. படம் ஆயுத பூஜை விடுமுறையில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்துள்ளது. படத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்து வருகிறது படக்குழு.

இந்நிலையில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில், “சஞ்சய் தத் சார் அவரது ஸ்டைலில் படக்குழுவுடன் இணைந்துள்ளார். வீடியோ வேணும்ணு கேட்டீங்களாமே. எங்களுக்கு கேட்ருச்சு.” என்று கூறி சஞ்சய் தத் விஜய் மற்றும் படக்குழுவுடன் இணைந்த வீடியோவை பதிவேற்றியுள்ளனர். தற்போது அது வைரலாகி வருகிறது.

Sanjay Dutt joins Thalapathy Vijay’s Leo

தங்களின் சிறப்பான நாளை மகளுடன் கொண்டாடிய ஆர்யா சாயிஷா தம்பதி

தங்களின் சிறப்பான நாளை மகளுடன் கொண்டாடிய ஆர்யா சாயிஷா தம்பதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்யாவும் சாயிஷாவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் பிரபல ஜோடி. சமீபத்திய விஷயம் என்னவென்றால், அபிமான ஜோடி நேற்று தங்கள் நான்காவது திருமண ஆண்டு விழாவை நெருங்கியவர்களுடன் ஒரு நெருக்கமான விழாவில் தங்கள் குழந்தையுடன் கொண்டாடியது.

இருவரும் 10 மார்ச் 2019 அன்று புனிதமான பந்தத்தில் இணைந்தனர். காதல் பறவைகள் 2019 ஆம் ஆண்டு வெளியான கஜினிகாந்த் படத்தின் செட்டில் சந்தித்து டேட்டிங் செய்யத் தொடங்கினர். 2021 ஆம் ஆண்டு டெடி படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

Arya and Sayyeshaa celebrate their special day with their daughter

விருது கிடைத்தால் ரசிகர்களுக்கும் ஊடகத்திற்க்கும் சமர்ப்பணம் – வையாபுரி

விருது கிடைத்தால் ரசிகர்களுக்கும் ஊடகத்திற்க்கும் சமர்ப்பணம் – வையாபுரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் வையாபுரி.

விஜய்ஸ்ரீ ஜி இயக்கிய ‘பவுடர்’ வித்தியாசமான கோணத்தில் நகைச்சுவை செய்யாமல் அனித்ராவின் தந்தையாக நடித்திருந்தார்.

இந்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இதனையடுத்து ஜெயப்பிரகாஷ் இயக்கிய ‘தலைக்கூத்தல்’ படத்தில் சமுத்திரகனி, வசுந்த்ரா, கதிர், ஆடுகளம் முருகதாஸ், கலைச்செல்வன், வையாபுரி ஆகியோர் நடித்து இருந்தனர்.

இதில் பெண் வேடமிட்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருந்தார் வையாபுரி. இவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டது

வையாபுரியின் தோற்றத்தையும், நடிப்பையும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வெகுவாக பாராட்டினார்கள்!

மேலும் “இந்த ஆண்டுக்கான சிறப்பு தோற்ற விருதை தாங்கள் பெறுவீர்கள்” என உற்சாகப்படுத்தினர்!

இந்தப் படத்தில் நடித்ததற்காக விருது ஒன்று தனக்கு கிடைத்தால், அந்த விருதை ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் சமர்ப்பணம் செய்வேன் என்றார் வையாபுரி.

Submission to fans and media if awarded actor Vaiyapuri

More Articles
Follows