பாராட்டு மழையில் நனையும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ பட நடிகர் விவந்த்

பாராட்டு மழையில் நனையும் ‘பாரிஸ் ஜெயராஜ்’ பட நடிகர் விவந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivanthநடிகர் விவந்த் அவர்கள் சமீபத்தில் வெளியான ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

திரையுலகில் இவர் முன்பே பரீட்சயமானவர், இவர் நாளைய இயக்குனர் சீசன் 4 இல் திரையிடப்பட்ட ஒரு குறும்படத்தில் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

நடிகர் விவந்த் அவர்கள் கூறுகையில்…

“எனது முதல் படம் 2014 இல் வெளியான ‘இருக்கு ஆனா இல்ல’ திரைப்படம்.

இந்த படம் எனது நடிப்புக்கு ஒரு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது, எனது இரண்டாவது படம் 2018 ஆம் ஆண்டில் வெளியான ‘ஏகாந்தம்’, இது கிராமப்புற அடிப்படையிலான படம்.

எனது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நயம்’, இது திகில்- திரில்லர் கதையம்சம் கொண்டது.

நடிகர் சந்தனம் அவர்களின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ல் எனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பிற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த படத்தின் ஒரு பகுதியாக எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கிய நடிகர் சந்தானம் அவர்களுக்கும், இயக்குனர் ஜான்சன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

படம் பார்த்த பிறகு, தொழில்துறையைச் சேர்ந்த பலர் என்னை வாழ்த்தினர்.

இப்போது எனக்கு நிறைய பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன” என்கிறார் நடிகர் விவந்த்.

2005 முதல் புகழ்பெற்ற டப்பிங் கலைஞராகவும், வரவிருக்கும் பல ஹீரோக்களுக்கும் இவர் குரல் கொடுத்துள்ளார்.

இவர் திரைப்படங்களில் திறமையான நடிகராகவும் மற்றும் மிக சிறந்த டப்பிங் கலைஞராக மட்டுமின்றி, செய்தித்தாள் மற்றும் டிவி விளம்பரங்களிலும் மாடலாக நடித்துள்ளார்.

ஜோயலுக்காஸ், கே.ஆர்.ஜி நெய், ஆலயா வேஷ்டி, ஹமாம் சோப், ஆச்சி மசாலா, 999 லுங்கி, போத்தீஸ், சென்னை சில்க்ஸ், கலர் ஹோம்ஸ், சென்னை மெட்ரோ டெஸ்டிமோனி, நிப்பான் பெயிண்ட்ஸ் , ஹார்லிக்ஸ், ஜாரா பார்லர், சரவணா ஸ்டோர்ஸ், சுதா மருத்துவமனை, தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பல விளம்பரங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

Parris Jeyaraj actor Vivanth gets appreciation from cinema lovers

இன்ஸ்டாகிராமில் சாதனை..; ஸ்டார் ஹோட்டலில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தர்ஷா குப்தா

இன்ஸ்டாகிராமில் சாதனை..; ஸ்டார் ஹோட்டலில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தர்ஷா குப்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய காலகட்டங்களில் ஷோஷியல் மீடியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரபலமான நடிகைகளை பலோ பண்ணுபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பாமர மக்கள் வரை சென்று சேர்ந்தவர் தர்ஷாகுப்தா.

மெகாஹிட் திரைப்படமான “திரௌபதி” படத்தின் இயக்குனர் மோகன் ஜியின் அடுத்த படமான “ருத்ர தாண்டவம்” படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் தர்ஷா குப்தா.

இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் கூடியிருக்கிறது.

ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தா இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்ததை தொடர்ந்து, தனது ரசிகர்களை சந்திக்க நினைத்தார்.

சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனது ரசிர்களோடு இந்த மகிழ்ச்சியை கொண்டாட விரும்பினார்.

மதுரை, கன்னியாகுமாரி, திருச்சி, கோயமுத்தூர் என பல ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் சென்னை வந்தனர். 300 க்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி விருந்தும் சாப்பிட்டார்.

இந்தியாவில் ஒரு நடிகை தனது ஷோஷியல் மீடியா ரசிகர்களை சந்திப்பது, இதுவே முதல் முறையென்று நினைக்கிறோம்.

ரசிர்கள் கொடுத்த கிப்ட், பூங்கொத்துகளை பெற்றுக்கொண்ட தர்ஷாகுப்தா, ரசிகர்கள் கேட்ட பல்வேறு வகையான கிடுக்குப்பிடி கேள்விகளுக்கும் ரசித்துக்கொண்டே சாதுர்யமாக பதில் கூறினார்.

தர்ஷா குப்தா பேசும் போது எனக்கு 1 மில்லியன் பாலோயர்ஸ் வர நீங்கள் மட்டும் தான் காரணம். எனக்கு குடும்பம் என்பதே நீங்கள் தான்.

அதனால் தான் இந்த நிகழ்வை உங்களோடு கொண்டாட விரும்பினேன் என்று கூறினார்.
ரசிகர்களின் குடும்பத்தாரோடு வீடியோ காலில் பேசிய போது, உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் நெகிழ்ந்து போனார்கள். சிலரால் ஆனந்த கண்ணீரை அடக்க முடியவில்லை.

தற்போது ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தா மிகப்பெரிய பேனர் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும்.

Darsha Gupta’s treat to her fans

Darsha Gupta

JUST IN சீட் கொடுக்கல சீமான்..; புதிய கட்சிக்கு டெரர்ராக பெயர் வைத்த மன்சூர் அலிகான்

JUST IN சீட் கொடுக்கல சீமான்..; புதிய கட்சிக்கு டெரர்ராக பெயர் வைத்த மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mansoor ali khanகடந்த முறை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார் நடிகர் மன்சூர் அலிகான்.

நூதனமான முறைகளில் மன்சூர் அலிகான் பிரசாரம் செய்தாலும் இந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் தாம் போட்டியிட உள்ளதாக மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டார்.

இந்த நிலையில் திடீரென சென்னையி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மன்சூர் அலிகான்.

2021 சட்டசபை தேர்தலில் சீமான் எனக்கு தொகுதி ஒதுக்கவில்லை. இது வருத்தத்தை தருகிறது.

எனவே ‘தமிழ்த் தேசிய புலிகள் கட்சி’ என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளேன் என அறிவித்துள்ளார்.

Actor Mansoor Ali Khan starts new party

BREAKING அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அறிவித்தார் முதல்வர்

BREAKING அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அறிவித்தார் முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edappadi palanisamyதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருந்தது.

தற்போது 1 வயதை கூட்டி 59லிருந்து 60 ஆக உயர்த்தி ஓய்வு பெறும் வயதாக அறிவித்துள்ளனர்.

இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

TN increases govt employees retirement age to 60

BREAKING 9 10 11 மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என தமிழக முதல்வர் அறிவிப்பு

BREAKING 9 10 11 மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2020- 21 கல்வியாண்டில் 9, 10, 11 மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

10ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு இந்தாண்டு இல்லை என அறிவிப்பு.

இது சட்டமன்ற 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

தற்போதுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கால் கடந்த 1 வருடமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.

எனவே பள்ளி வகுப்புகள் பாதிப்பு காரணமாக மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கல்வி கற்று வருகின்றனர்.

மேலும் பாடத்திட்டங்களையும் 40% தமிழக அரசு குறைத்தது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

All pass for class 9,10, 11 students in TN

அரக்கோணம் ADMK வக்கீல்கள் ஆலோசனை கூட்டத்தின் பின்னணி MLA-வுக்கு வந்த ‘தோல்வி பயம்

அரக்கோணம் ADMK வக்கீல்கள் ஆலோசனை கூட்டத்தின் பின்னணி MLA-வுக்கு வந்த ‘தோல்வி பயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரக்கோணம் தொகுதியில் உள்ள அதிமுக வக்கீல்களை தனது பிறந்த நாளை முன்னிட்டு திடீரென அழைத்து ஆலோசனை கூட்டம் போட்டார் எம்.எல்.ஏ.சு.ரவி.

அரக்கோணம் தொகுதியில் 2 முறை தொடர்ச்சியாக ரவி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்ற போதிலும் ஒரு முறைகூட இப்படி தொகுதி வக்கீல்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியதில்லை.

இந்த திடீர் ஆலோசனை கூட்டத்தின் பின்னணியில் வரும் தேர்தலில் தனது செல்வாக்கு கண்டிப்பாக செல்லாக்காசாக போய்விடும் என்ற அச்சமும், கடந்த முறை போல இல்லாமல் எதிர்க் கட்சியான திமுக சார்பில் வக்கீல் எழில் இனியன் என்பவரை வேட்பாளராக களம் இறக்க அந்த கட்சி முடிவு செய்துதிருப்பதாக வெளியாகும் தகவல்களால் பதட்டம் அடைந்த எம்.எல்.ஏ.ரவி திடீரென வக்கீல்கள் உதவியை நாடியிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்த தொகுதிவாசிகள்.

எம்.எல்.ஏ.ரவியும் ஒரு வக்கீல்தான். கடந்த 2 முறையும் எதிர்த்து போட்டியிட்டவர்களின் பலவீனம் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல “தனி அரவணைப்பு” நடத்தி தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறாராம்.

அதோடு, ஜெ., முதல்வராக இருந்த கால கட்டத்தை விட எடப்பாடி முதல்வரான இந்த 4 ஆண்டு காலத்தில் அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவியின் “அசுர வளர்ச்சி” அமைச்சர்களை மிஞ்சியுள்ளதாம்.

இதை தெரிந்து கொண்டதால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் அரக்கோணம் எம்.எல்.ஏ.ரவியை வெளுத்து வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு, ஆளும் கட்சியின் ஆதரவு, கரன்சி செல்வாக்குடன் அசுர பலத்தோடு களம் இறங்க தயாராகியுள்ள வக்கீல் ரவியை தோற்கடித்து அரக்கோணத்தை மீண்டும் திமுக கோட்டை ஆக்க திமுகவும் ஒரு வக்கீலை களம் இறக்க தீர்மானித்து உள்ளது.

இதற்காக அரக்கோணம் தொகுதி முழுதும் ஏராளமான திமுக வக்கீல்கள் ஒரு படையாக களம் இறங்கி சத்தமில்லாமல் பணியாற்றி வருகிறார்கள்.

அதன் விளைவாக அதிமுக எம்.எல்.ஏ.ரவிக்கு மிக நெருக்கமாக வலது கரமாக செயல்பட்ட பிரபல வக்கீல் லோகாபிராம் திடீரென திமுக மாவட்ட செயலாளர் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இந்த சம்பவம் எம்.எல்.ஏ.ரவிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருக்காதா… கடந்த 2 தேர்தல்களிலும் ரவி வெற்றிக்கு பெரும் பக்க பலமாக செயல்பட்டவர் இந்த வக்கீல் லோகாபிராமாம். அதோடு, இவர் அரக்கோணம் பகுதியின் அரசு வக்கீலாகவும் இருக்கிறார்.

ஒரு அரசு வக்கீல் திடீரென கட்சி மாறியிருப்பதால்தான் ரவி பதட்டம் அதிகரித்து உள்ளது.

அதோடு தொகுதியிலும் ரவிக்கு பொதுமக்கள் மத்தியிலும், அவர் சார்ந்த ஆளும் கட்சியிலும் கடும் அதிருப்தி நிலவுகிறது.

இதை எல்லாம் தெரிந்து கொண்ட பின்னர் திடீரென அரக்கோணம் தொகுதி அதிமுக வக்கீல்களை அழைத்து ரவி எம்.எல்.ஏ. ஆலோசனை கூட்டம் போட்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்திலும் “வெயிட்” ஆன கவனிப்பு இருந்ததாம்.

ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்கு தோல்வி பயம் வந்து விட்டதோ…

Reason behind ADMK lawyers meeting in Arakkonam

MLA Ravi

More Articles
Follows