தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நம்ம மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க, அன்பரசன் இயக்கத்தில் ‘நம்ம விவசாயம்’ என்ற பாடல் மற்றும் குறும்படம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடல் மற்றும் காட்சி தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த அமைப்பின் அடுத்தடுத்த திட்டங்களை குறித்த ஒரு அறிமுகமும் இதோ:
தமிழ் நாட்டில் குறு விவசாயிகள் மட்டும் 82 சதவீதம் இருக்கிறார்கள். சொந்த முயற்சியில் அரசின் ஆதரவு இல்லாமலேயே விவசாயம் செய்து வருகிறார்கள்.
இவர்களுக்கு அரசின் மானியமும் கிடைப்பதில்லை. ‘ நம்ம விவசாயம்’ என்ற அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
விவசாயத்தையும், விவசாயிகளையும் ஆதரிக்க துவங்கப்பட்ட அமைப்பு ‘நம்ம விவசாயம்’.
இந்நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் சத்யா பேசும்போது, ‘‘விவசாயம் இப்போதிருக்கும் சூழலில் அதைப்பற்றிய செய்திகளை பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தேனே தவிர, என்னால் எதையும் அதற்காக செய்ய முடியவில்லை.
அந்த நேரத்தில் தான் ‘நம்ம விவசாயம்’ பாடலுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. நானும் ஒரு சிறு துரும்பாக இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை நானே பரிசோதித்துக் கொண்ட உணர்வு கிடைத்தது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘லொள்ளு சபா’ ஜீவா பேசும்போது, ‘‘நம்ம விவசாயம்’ விழிப்புணர்வு நிகழ்வு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
இங்கு திரையிடப்பட்ட குறும்படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை, இந்த உணர்வுபூர்வமான விஷயத்தை மனதால் உணர்கிறேன். விவசாயம் இணையத்தில் இளைஞர்கள் மூலம் அதிகம் விவாதிக்கப்படுகிறது.
அது இணையத்தை தாண்டி வர வேண்டும். விவசாயத்தை தனியாக காப்பாற்ற முடியாது. ஒட்டு மொத்த அமைப்பும் மாறி, ஆட்சி மாற்றம் நடந்து, நல்ல தலைமை அமைந்தால் தான் மாற்ற முடியும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் நேரடியாக மக்களிடம் போய் சேர வேண்டும்.
விவசாயமும் சினிமாவும் கூட ஒரே நிலையில் தான் இருக்கின்றது. சரியான கட்டமைப்பு இல்லை. இரண்டிலுமே இடைத்தரகர்கள் தான் பயனடைகிறார்கள். இது மாறவெண்டும்’’ என்றார்.
‘‘அரசாங்கம் செய்ய வேண்டிய மிகப்பெரிய வேலையை ஆர்.கே மற்றும் 4 பேர் சேர்ந்து செய்ய இருக்கிறார்கள்.
65 நாட்கள் விவசாயிகள், மற்ற துறையினர், பிரபலங்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து விவசாயம் பற்றிய ஒரு நிகழ்வை செய்ய இருக்கிறோம்.
நல்ல நோக்கத்துக்காக செய்வதால் தனியாக எந்த ஒரு தொலைக்காட்சியையும் நாங்கள் அணுகவில்லை.
இது மக்களை சென்று சேர வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்’’ என்றார் இந்த குறும்படத்தை இயக்கியிருக்கும் அன்பரசன்!
இந்த படத்திற்கு பாடல் எழுதியிருக்கும் கிருதயா பேசும்போது, ‘‘இந்த ஆல்பத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகினோம். 6 மாதம் அவருக்காக காத்திருந்தும் அவரின் தொடர் அலுவல்களால் அவரால் இசையமைக்க முடியவில்லை.
உடனடியாக இளையராஜாவால் பாராட்டப்பட்ட சி.சத்யாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்தோம். அவரின் இசை தான் இந்த குறும்படத்திற்கு ஜீவன்’’ என்றார்.
Namma Vivasayam team plans to beat Bigg Boss show