தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இன்று மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, நாடுமுழுவதும் இன்று மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.
பஸ்கள், ரயில்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட எந்த வாகனமும் ஓடவில்லை.
அதன்காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன.
ஊரடங்கு உத்தரவால் ஒரு சில குடும்பங்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தவர்களில் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர் ஒருவருக்கு இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருந்த திருமணம் எளிய முறையில் விஜயகாந்தின் வீட்டில் நடந்துள்ளது.
இதற்காக விஜயகாந்த் வீட்டிற்கு மணமக்கள் விமல், கமலி ஆகியோர் அழைத்து வரப்பட்டனர்.
மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் விஜயகாந்த் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்று கூட்டம் கூடாமல் திருமணம் நடந்தது.
மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை ஏற்று மாஸ்க், சானிடைசர் போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து எளிய முறையில் நடைபெற்ற திருமணத்திற்கு விஜயகாந்த் தாலி எடுத்து கொடுத்தார்.
பின் மணமக்கள் அவரிடம் அவரிடம் ஆசி பெற்றனர்.
Marriage function shifted to vijayakanth house due to Janata curfew