தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுவை சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றியது என்ஆர் காங்கிரஸ்.
இந்த கூட்டணியில் இருந்த பாரதிய ஜனதா 6 இடங்களில் வென்றது.
எனவே 10+6 எம்எல்ஏக்கள் 6 ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அடுத்த நாள் மே 8ல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரங்கசாமி சிகிச்சைக்காக , சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரி புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களை நியமித்துள்ளது தவறானது என்றும் தன் மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டனர்.
அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினர்..
இந்நிலையில், அப்போது, புதுச்சேரி சட்டமன்றத்திற்கு நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அரசுப் பணியில் இருப்பவர்களை நியமன உறுப்பினர்களாக நியமிக்க மட்டுமே தடை என மத்திய அரசு வாதம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Madras high court judgement on Pondicherry nominated MLAs