தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
+2வில் நல்ல மார்க் எடுத்தும் நீட் தேர்வு முறையால் மருத்துவராக முடியாத மாணவி அனிதா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர்.
சில பிரபலங்களின் கருத்துக்கள் இதோ…
நடிகர் விஷால் : அனிதா மருத்துவக் கல்விக்கு தகுதி பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பதிலாக நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தவர்கள் நம்மை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள்.
பாடலாசிரியர் விவேக் : இந்த பொண்ணு மனசுல இருந்த கனவுக்கும், கண்ல இருந்த ஏமாற்றத்துக்கும், எங்க கண்ணீருக்கும் யார் பதில் சொல்லுவா?
மூட்ட தூக்கி படிக்க வச்ச அப்பா. ஒரு தலைமுறைக்கான கனவு டா அது. 1176 ம் தன் ரத்தமும் கொடுத்தாச்சு. இன்னும் பசிக்குதா உங்களுக்கு?
நடிகர் சிவகார்த்திகேயன் : இந்த தேசம் ‘தகுதி’யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது…என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி
இயக்குனர் ராம் : “நீட் ஒரு அரசபயங்கரவாதம். 12 வருட உழைப்பை, கனவை, அனிதாவை படுகொலை செய்த பயங்கரவாதம்”.
இயக்குனர் பாண்டிராஜ் : தூக்கு போடுற வயசா இது ? வேதனைப்பட வேண்டிய விசயம் இல்லை. வெக்கப்பட வேண்டிய விஷயம். எப்போ கல்வி வியாபாரம் ஆச்சோ அப்பவே அரசும் செத்து போச்சு.
நடிகர் விஜய்சேதுபதி: தங்கை அனிதாவின் தற்கொலையை அரசியல் ஆக்காதீர்கள். துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அனிதாவின் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
டைரக்டர் சீனுராமசாமி:
டாக்டர் அனிதா தங்கையே உங்கள் தற்கொலை ஏற்புடையதல்ல. நேர்மையற்றவர்கள் பிழைக்கும் நாட்டில் நீங்கள் வாழ்ந்திருக்க வேண்டும். இதய அஞ்சலி.
இந்த மதிப்பெண்ணுக்கு நாடு உங்களை தேடி வந்து வாய்ப்பளித்திருக்க வேண்டும் மதிப்பெண் இருந்தும் கிராம நகர ஏழை மாணவர்கள் தவிப்பவர்கள் எத்தனையோ..?
நடிகர் பார்த்திபன்:
அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில் அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும்.
நடிகை கஸ்தூரி : எதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா !!! வயிறு எரிகிறது.
நடிகர் விவேக்.
வாழ்க்கையில் உயர்வதற்கும் கல்விக்கும் சம்பந்தமில்லை. தற்கொலை முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும்.
பள்ளி கல்வியை பாதியில் விட்ட பலர், வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார்கள்.
விமானியாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டவர் அப்துல் கலாம். ஆனால் அது நிறைவேறாவிட்டாலும் அவர் தவறான முடிவை எடுக்கவில்லை. பின்னர் வேறு துறையில் சாதித்து முன்மாதிரியாக இருந்தவர் அவர்.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
மேலும் அன்றைய தினமே அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அவரது தந்தைக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கழிப்பறை கூட இல்லாத வீட்டில் மருத்துவ கனவோடு பிறந்த அனிதா இன்று இல்லை. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் அதிகாரமும் சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை.
நல்ல மருத்துவராக ஆகியிருக்க வேண்டியவர் அவர். தமிழக இளைஞர்களுக்கு இந்த நாள் கறுப்பு தினம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர்கள் சீமான், அமீர், ரஞ்சித், பாண்டிராஜ் உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Kollywood Industry condolence to Anitha family