மாலையும் கழுத்துமாக.. பிரபல நடிகருடன் நெருக்கமாகிய கீர்த்தி சுரேஷ்

மாலையும் கழுத்துமாக.. பிரபல நடிகருடன் நெருக்கமாகிய கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் ‘தசரா’.

தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘மாமன்னன்’, ’சைரன்’, ’ரகு தாத்தா’ மற்றும் ’ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

தெலுங்கில் நானி உடன் இணைந்து நடித்த ’தசரா’ படம் சமீபத்தில் வெளியாகி ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

தமிழ் – தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ‘தசரா’ பட வெற்றியை நானி – கீர்த்தி சுரேஷ் உஉள்ளிட்ட படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர்.

அது குறித்த புகைப்படங்களை கீர்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் ஒரே மாலையில் நானி மற்றும் கீர்த்தி இருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

நானி - கீர்த்தி சுரேஷ்

Keerthy Sureshs recent photo goes viral

ஹாட்ரிக் வெற்றிக்காக 3வது முறையாக இணையும் விஷால் – ஹரி கூட்டணி

ஹாட்ரிக் வெற்றிக்காக 3வது முறையாக இணையும் விஷால் – ஹரி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் விறுவிறுப்பான டைரக்டர் என்றால் அவர் ஹரி.

அதுபோல ஆக்ஷன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஷால்.

இவர்கள் இருவரும் இணைந்த படம் ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’.

இந்த இரு படங்களும் நல்ல வசூலை அள்ளிக் கொடுத்தன.

இந்த நிலையில் ஹரி – விஷால் இருவரும் விரைவில் ஒரு புதிய படத்திற்காக இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சமீபத்தில்தான் ஹரி மற்றும் அவரது மனைவி பீரித்தா இணைந்து குட் லக் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர்.

இன்று அவர்களின் நிறுவனத்திற்கு வருகை தந்தார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

Director hari teamsup with vishal for 3rd time

2வது வாரத்திலும் 300+ தியேட்டர்களில் கெத்து காட்டும் ‘பத்து தல’

2வது வாரத்திலும் 300+ தியேட்டர்களில் கெத்து காட்டும் ‘பத்து தல’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், சௌந்தரராஜா, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் ‘பத்து தல’.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய 2 வெற்றி படங்களுக்குப் பிறகு சிம்புவின் நடிப்பில் ‘பத்து தல’ வெளியானதால் ரசிகர்கள் அதனை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

படமும் முதல் நாளில் உலகளவில் ரூ 12 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இன்று ஏப்ரல் 7 தேதி 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக பட குழுவின் அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

2வது வாரத்திலும் பத்து தல வெற்றி நடை போடுவதால் சிம்பு ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பத்து தல

Pathu Thala Marching into 2nd week with 300 screens

KPY பாலாவிற்கு ‘ருத்ரன்’ மேடையில் ரூ 10 லட்சம் வழங்கிய ராகவா லாரன்ஸ்

KPY பாலாவிற்கு ‘ருத்ரன்’ மேடையில் ரூ 10 லட்சம் வழங்கிய ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ருத்ரன்’.

இந்த படத்தின் மூலம் ‘பொல்லாதவன்’ & ‘ஆடுகளம்’ படங்களின் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இதில் லாரன்ஸ் உடன் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ருத்ரன்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ‘ருத்ரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர்.

(இந்த இசை விழாவின் ஒளிபரப்பு உரிமையை பிரபல டிவி சேனல் பெற்றுள்ளதால் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.)

இந்த நிலையில் இதே நிகழ்ச்சியில் ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவி வரும் விஜய் டிவி KPY பாலாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது தாயார் கையில் ரூ. 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.

ருத்ரன்

கூடுதல் தகவல்…

நடந்த இயக்குனர் நடிகர் இயக்குனர் ஆகியவற்றை தாண்டி மனிதநேயமிக்கவர் ராகவா லாரன்ஸ். இவர் தனது தாயார் பெயரில் அறக்கட்டளை நிறுவி ஊனமுற்ற குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

மேலும் பல ஏழை மாணவர்களின் படிப்புக்கும் உதவி வருகிறார். இவை இல்லாமல் தீவிர நோயால் அவதிப்படும் ஏழை மக்களின் சிகிச்சைக்கும் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ருத்ரன்
Raghava Lawrence donated Rs 10 lakhs to KPY Bala

‘தெய்வ மச்சான்’ விமலுக்கு கை கொடுத்த ‘விடுதலை’ நாயகர்கள்

‘தெய்வ மச்சான்’ விமலுக்கு கை கொடுத்த ‘விடுதலை’ நாயகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர்கள் சூரி மற்றும் ஆதி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர்.

இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தெய்வ மச்சான்’.

இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசையமைக்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும் வத்சன் இணைந்து எழுதியிருக்க, படத்தின் பின்னணி இசையை அஜீஷ் கவனிக்கிறார்.

தெய்வ மச்சான்

எடிட்டர் இளையராஜா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கிராமிய பின்னணியில் ஃபேண்டசி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

‘தெய்வ மச்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

முன்னோட்டத்தில் இந்த திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை பி வி ஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இதனிடையே விமல் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ எனும் இணையத்தொடர் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகியிருக்கும் ‘தெய்வ மச்சான்’ எனும் படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

vimal’s Deiva Machan trailer released

மக்களுடன் ‘எவன்’ படம் பார்த்து ரசித்த கவிஞர் புலமைப்பித்தன் பேரன் திலீபன்

மக்களுடன் ‘எவன்’ படம் பார்த்து ரசித்த கவிஞர் புலமைப்பித்தன் பேரன் திலீபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’.

அறிமுக இயக்குநர் துரை முருகன் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் திலீபன் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

நாயகியாக நடிகை தீப்தி மானே நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஜே கே சஞ்சீத், உஜ்ஜைனி, ராய், கானா பாலா, பாண்டி, ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எவன்

ஜி. சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. சசிதரன் இசை யமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை பாலா கவனிக்க இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் மறைந்த புலவர் புலமைப்பித்தன் விவேகா கானா பாலா ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

ஏப்ரல் 7 தேதியான இன்று படம் திரையரங்கில் வெளியானது. மக்களுடன் மக்களாக நடிகர் திலீபன் புகழேந்தி ஆல்பட் தியேட்டரில் படம் பார்த்தார்.

எவன்

Pulaimaipithan grand son Dhileepan watched Yevan movie with Public

More Articles
Follows