தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே நாயகனாக நடித்த படம் ‘காந்தாரா’.
இப்படத்தை தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருந்தார்.
கன்னடத்தில் உருவான இந்த படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்தாண்டு 2022-ல் வெளியாகி ரூ.410 கோடியை அள்ளியது.
இந்த நிலையில் ‘காந்தாரா’ 2ஆம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“காந்தாரா முதல் பாகத்தை விட கூடுதலான செலவில் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளோம்.
‘காந்தாரா 2’ பட லோகேசன் பணிகளுக்காக கர்நாடகா கடற்கரைப் பகுதிக்கு டைரக்டர் ரிஷப் சென்றுள்ளார்.
மழைக் காலத்தில் இதன் சூட்டிங் நடைபெற உள்ளது. 2024 கோடைக் காலத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
‘kantara 2’ film update given by the producer Vijay Kirgandur