‘காந்தாரா 2’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறாரா?

‘காந்தாரா 2’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து அவரது பணியை பாராட்டி பெரிய தங்க செயினை பரிசாக வழங்கினார். மேலும் அவர் ட்விட்டரில், “ஒரு எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகராக ரிஷப் உங்களுக்கு வாழ்த்துகள்.

ரிஷப் ஷெட்டி சமீபத்தில் ‘காந்தாரா 2’ படத்தைத் தயாரிக்கப் போவதாகவும், இது அசல் படத்தின் முன்னோடியாக இருக்கும் என்றும் அறிவித்தார்.

காந்தாரா 2 படத்தில் ரஜினி முக்கிய வேடத்தில் தெய்வமாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இது குறித்து இயக்குனர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Superstar Rajinikanth to play a divine role in ‘Kantara 2’?

அண்ணன் சத்யநாராயணாவுக்கு தங்கத்தால் அபிஷேகம் செய்த ரஜினிகாந்த்

அண்ணன் சத்யநாராயணாவுக்கு தங்கத்தால் அபிஷேகம் செய்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் நிஜப்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

சிறு வயதிலேயே தன் அம்மா அப்பா இருவரையும் இழந்தவர் ரஜினி. இவரை அண்ணன் மற்றும் அண்ணி ஆகிய இருவருமே அன்பாக வளர்த்து வந்தனர்.

எனவே தன் அண்ணன் மீது மிகுந்த மரியாதையை இன்றுவரை வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவரது அண்ணன் சத்யநாராயணா கர்நாடக மாநில அரசின் சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தனது 80வது பிறந்தநாளை பிப்ரவரி 19 கொண்டாடியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அவரது மகன் ராமகிருஷ்ணாவும் அதே நாளில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.

எனவே 80வது பிறந்தநாள் கொண்டாடிய அண்ணன் சத்யநாராயணாவுக்கு தங்க காசுகளால் ரஜினி அபிஷேகம் செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த இரட்டை கொண்டாட்டங்களைக் குறித்து உணர்ச்சிவசப்பட்ட ட்வீட் செய்துள்ளார் ரஜினி.

அதில்… “என் சகோதரர் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80 வது பிறந்தநாளையும் அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60 வது பிறந்தநாளையும் ஒரே நாளில் என் குடும்பத்துடன் கொண்டாடியதில் மகிழ்ச்சி. . என்னை நானாக மாற்றிய இந்த தங்க இதயத்தில் தங்கத்தை பொழிவதை பாக்கியமாக உணர்கிறேன். இன்று நான்.. கடவுளுக்கு நன்றி”

என பதிவிட்டிருந்தார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்

Rajini shares picture with his brother and tweet emotional

JUST IN நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி..; டாக்டர்கள் அறிக்கை

JUST IN நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி..; டாக்டர்கள் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இளைய திலகம் என்றால் அது நடிகர் பிரபு தான்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர கேரக்டரில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் தனக்கு நிகரான மற்ற ஹீரோக்களின் படங்களை நடிப்பதை தவிர்ப்பர்.

ஆனால் எந்த ஈகோவும் இல்லாமல் தன் சக நடிகர்களுடன் நடித்து வருபவர் பிரபு.

ரஜினியுடன் தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், கமலுடன் வெற்றி விழா, சத்யராஜுடன் சின்னத்தம்பி பெரியதம்பி மற்றும் விஜயகாந்த், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார்.

இன்றைய தலைமுறை நடிகர்கள் விஜய், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபு உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவரது உடல் நலம் குறித்து மருத்துவமனை தரப்பில் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கையில்…

21 பிப்ரவரி 2023

பத்திரிக்கை செய்தி

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி,

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில், பிரபல திரைப்பட நடிகர் பிரபு நேற்று (20 பிப் 2023) இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, இன்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன.

அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய – பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார்.

மெட்வே மருத்துவமனைக் குழுவின் தலைவர்

மரு. பழநியப்பன்

ஊடகத் தொடர்பு : இராம்குமார் சிங்காரம், கேட்டலிஸ்ட்

பிரபு

Actor Prabu health statement is here

டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் ‘லவ் டுடே’

டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் ‘லவ் டுடே’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோமாளி’ பட இயக்குனர் பிரதீப் நாயகனாக நடித்து இயக்கி வெளியான படம் ‘லவ் டுடே’.

இந்த படத்தில் சத்யராஜ், இவானா, ரவீனா ரவி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த 2022 நவம்பரில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இப்படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

மேலும், ‘லவ் டுடே’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் 100 நாள் வெற்றியைக் கொண்டாடியது.

இந்நிலையில், ‘லவ் டுடே’ படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அவரது ட்விட்டரில், “லவ் டுடே படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். பேன்டம் பிலிம்ஸ் உடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறோம். விரைவில் படக்குழு குறித்து அறிவிக்கப்படும்” என பதிவிட்டார்.

‘Love Today’ movie to be officially remade in Hindi

ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான்.; ‘தீர்க்கதரிசி’ சத்யராஜ் தீர்ப்பு

ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான்.; ‘தீர்க்கதரிசி’ சத்யராஜ் தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் ஆகியோர் நடித்துள்ள படம் ‘தீர்க்கதரிசி’.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது…

“இது போன்ற சிறிய படங்கள் செய்யத் தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இந்த இயக்குநர்களும் இணைய வேண்டும்.

ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கண்டெண்ட் சிறப்பாக இருந்தால், வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

சத்யராஜ்
Script is Hero says Sathyaraj at Theerkatharisi Audio Launch

போலீஸ் படமே கர்வம்தான்.. கதவுகள் மூடப்படாத துறை காவல்துறையே – ஹரி

போலீஸ் படமே கர்வம்தான்.. கதவுகள் மூடப்படாத துறை காவல்துறையே – ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் ஆகியோர் நடித்துள்ள படம் ‘தீர்க்கதரிசி’.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் நடிகர் நாசர் பேசியதாவது…

இந்தப்படத்தில் நான் நடிக்கவில்லை ஆனால் என் நண்பர்கள் நிறைய பேர் பணியாற்றியுள்ளார்கள். படத்தின் டிரெய்லர் பார்க்க நன்றாக உள்ளது படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் ஹரி பேசியதாவது…

“படத்தின் டிரெய்லர், பாடல் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. போலீஸ் திரைப்படம் பார்ப்பதே ஒரு கர்வம் தான். இந்தப் படத்தில் அஜ்மல் காவல்துறைக்கே உண்டான மிடுக்குடன் அழகாக இருக்கிறார். கதவுகள் மூடப்படாத ஒரே துறை காவல்துறை தான். அதைக் கருவாக வைத்து எடுத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். “ என்றார்.

நடிகர் இயக்குநர் தம்பி ராமையா பேசியதாவது…

“காவல்துறை கதாபாத்திரங்கள் தான் எனது வாழ்கையில் திருப்புமுனையாக இருந்தது. இந்த படமும் காவல்துறை பற்றிய கதையாக இருக்கிறது.

இந்த படத்தின் இயக்குநர்கள் நிறைய அனுபவங்களுடன் களமிறங்கியிருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார்.

தீர்க்கதரிசி

Police department doors will not be closed says Hari

More Articles
Follows