தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதுநாள் வரை 50 நாட்கள் கடந்துவிட்டது. மே 17 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும்.
இந்த நிலையில் தமிழக அரசு பெட்ரோல்,டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை திடீரென உயர்த்தியுள்ளது.
இதனால் விலைவாசி மேலும் உயர வாய்ப்புள்ளது.
கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றும் செயல் என அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்புக் கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதைச் செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்”
இவ்வாறு தன் ட்விட்டரில் கமல் பதிவிட்டுள்ளார்.
Kamal slams Government for treachery on peoples