தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஊராட்சிகளில் நடத்தப்படும், கிராம சபை கூட்டம் போல், சென்னையில், மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல், மாதிரி கிராம சபை கூட்டத்தை அறிவித்துள்ளார்.
‘கிராம சபை கூட்டம்’ என்பது, ஊராட்சி மன்ற தலைவரால் நடத்தப்படும்.
இதில், நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மை, வளர்ச்சி திட்டங்கள், பொதுமக்களை ஒருங்கிணைத்தல் போன்றவை குறித்து, விவாதிக்கப்படும்.
இதே பாணியில், சென்னை, ஆழ்வார்பேட்டையில், மாதிரி கிராம சபைக் கூட்டத்தை, நடிகர் கமல் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து, கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பஞ்சாயத்து ராஜ் என்ற அமைப்பு, 25 ஆண்டுகளுக்கு முன், ஏப்., 24ல் நிறுவப்பட்டது; நகரபாலிகா முறையும் நடைமுறைக்கு வந்தது.
‘இதை கொண்டாடும் வகையில், மாதிரி கிராம சபை நடத்தப்படுகிறது’ என, தெரிவித்துள்ளார்.





