தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுக்கு நடிகர் கமல்ஹாஸன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கான விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில், பலரும் தங்கள் வாழ்த்துக்களை கமலுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பார்த்திபன் தனது பாணியில் கமலுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்…
கமலுக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தற்கரிய செவாலியர் கிடைத்தத் தருணத்தில் அவர் ஆங்கிலத்தில் நன்றி கூறிய ஸ்டைலுக்கே இன்னொரு குட்டி செவாலியரை வழங்கலாம்.
மேலும் அவர் கூறியதாவது…
“கே. பாலச்சந்தர் சார் “அவன் எட்டாம் வகுப்பு கூட முடிக்கல. ஆனா அவனுடைய ஆங்கிலத்தை புரிந்துக்கொள்ள எனக்கே ஒரு தனி டிக்சனரி தேவைப்படுது” என்று கூறியிருக்கிறார்.
கலைக்காக உலகில் உள்ள எல்லா விருதுகளையும் அல்லது உலகையே ஒரு உலோகமாய் உருக்கி அதில் ஒரு கேடயம் செய்து வழங்கினாலும் அதை பெற தகுதியானவர் கமல் சார்.” என்று தெரிவித்துள்ளார்.