தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பாலசுப்ரமணியர் கோயில் உள்ளது.
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள இந்த கோயிலில் நடிகரும் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேசன் தரிசனம் செய்துள்ளார்.
அவருக்கு ஊரடங்கு விதிமுறைகளை மீறி விஐபி தரிசனத்திற்கு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலறிந்த கிராம மக்கள் செயல் அலுவலர் நாராயணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்
மேலும் ஐசரி கணேசனை சிறுவாபுரி கிராம மக்கள் சிறைப்பிடித்தனர்.
இதனையறிந்த அங்கு விரைந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக
கூறியதை அடுத்து ஐசரி கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்
Ishari Ganesh has been imprisoned by the public in siruvapuri