சிறுவாபுரியில் நடிகரும் கல்வியாளருமான ஐசரி கணேசன் சிறைப்பிடிப்பு

சிறுவாபுரியில் நடிகரும் கல்வியாளருமான ஐசரி கணேசன் சிறைப்பிடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ishari Ganeshதிருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பாலசுப்ரமணியர் கோயில் உள்ளது.

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள இந்த கோயிலில் நடிகரும் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேசன் தரிசனம் செய்துள்ளார்.

அவருக்கு ஊரடங்கு விதிமுறைகளை மீறி விஐபி தரிசனத்திற்கு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலறிந்த கிராம மக்கள் செயல் அலுவலர் நாராயணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

மேலும் ஐசரி கணேசனை சிறுவாபுரி கிராம மக்கள் சிறைப்பிடித்தனர்.

இதனையறிந்த அங்கு விரைந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக
கூறியதை அடுத்து ஐசரி கணேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்

Ishari Ganesh has been imprisoned by the public in siruvapuri

தேசிய விருது வென்ற நடிகர் ‘சஞ்சாரி’ விஜய் மரணம்.; ரசிகர்கள் அதிர்ச்சி

தேசிய விருது வென்ற நடிகர் ‘சஞ்சாரி’ விஜய் மரணம்.; ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanchari vijayசஞ்சாரி என்கிற நாடகக் குழுவில் நடித்து வந்தவர் கன்னட நடிகர் விஜய்.

பின்னர் சினிமா சான்ஸ்கள் இவரை தேடி வர ‘சஞ்சாரி’ விஜய் என பிரபலமானார்.

‘ரங்கப்பா ஹோக்பிட்னா’ என்ற பட மூலம் 10 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தார்.

இதனையடுத்து ‘கில்லிங் வீரப்பா’, ‘வர்த்தமானா’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

2015ல் ‘நான் அவனல்ல அவளு’ என்ற படத்தில் திருநங்கையாக நடித்து இருந்தார்.

அந்த படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய விஜய்க்கு அவ்வருடம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது.

கடந்த வருடம் ஊரடங்கில் மக்களுக்கு பெரும் உதவிகள் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் ஹெல்மேட் போடாமல் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது விளக்குக் கம்பம் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

எனவே பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் விஜய் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி விஜய் மூளைச்சாவு அடைந்தார்.

சஞ்சாரி விஜய்யின் மறைவுக்கு கன்னட திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kannada actor Sanchari Vijay passes away

தளபதி ரசிகையா ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி..? கடுப்பான தல ரசிகர்கள்.!

தளபதி ரசிகையா ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி..? கடுப்பான தல ரசிகர்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivaangi‘குக் வித் கோமாளி’ என்ற டிவி நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஷிவாங்கி்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தன் சொந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை சிவாங்கிக்கு வழங்கினார்.

இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் ஷிவாங்கி.

அப்போது தல தளபதி படங்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதில் விஜய் நடித்து வெளியான கடைசி படம் எது? என்ற கேள்விக்கு ’மாஸ்டர்’ என சரியாக பதில் சொன்னார் ஷிவாங்கி.

ஆனால் அஜித் படங்கள் பற்றிய கேள்விக்கு தவறாக பதிலளித்தார்.

தற்போது அஜித் நடித்து வரும் படத்தின் பெயரை கூட அவர் சரியாக சொல்லவில்லை.

இதனால் ஷிவாங்கியை திட்டி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

Ajith fans slams Coocku with comali fame Sivaangi

9ம் வகுப்பு மார்க் அடிப்படையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது

9ம் வகுப்பு மார்க் அடிப்படையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn 11th admissionஒரு வகுப்புக்கு தேர்ச்சி பெற்றால் அதற்கு முந்தைய வகுப்பின் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

10 வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

ஆனால் கடந்தாண்டு 10ம் வகுப்புத் தேர்வு நடத்தவில்லை என்பதால் 2019 – 2020 கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஒவ்வொரு பாடப் பிரிவிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் 15% மாணவர்களை கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள இந்தாண்டு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான சேர்க்கையை ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகளை (section) ஒதுக்கீடு செய்யவுள்ளனர்.

11th admission based on 9th class marks – TN GOVT

ஸ்பெஷல் விமானத்தில் பறக்க ரஜினிக்கு சிறப்பு அனுமதியளித்த மத்திய அரசு.?

ஸ்பெஷல் விமானத்தில் பறக்க ரஜினிக்கு சிறப்பு அனுமதியளித்த மத்திய அரசு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthநடிகர் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஓரிரு முறை தன் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வார்.

தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் விமானம் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே அவர் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளார்.

இதனையடுத்து மத்திய அரசும் அவருக்கு அனுமதி அளித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி சிறப்பு (தனி) விமானத்தில் ரஜினி அமெரிக்கா செல்ல ஏற்பாடு நடக்கிறது.

இந்த தனி விமானத்தில், 12-14 பேர் வரை பயணம் செய்யலாம் என தெரிகிறது.

எனவே தன்னுடன் தன் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார் ரஜினி.

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துவிட்டு அங்கேயே சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் தான் இருக்கிறார். அங்கேயே ஒரு ஹாலிவுட் படத்திலும் (தி கிரே மேன்) நடித்து முடித்துள்ளார் தனுஷ்

எனவே தனுஷ் குடும்பத்தாருடன் இணைந்து சில நாட்கள் அமெரிக்காவில் தங்கவிருக்கிறாராம் ‘அண்ணாத்த’ ரஜினி.

Rajnikanth to travel to the US for a medical check-up in a special flight

யூடியூபர் ‘சாட்டை’ துரைமுருகன் & கிஷோர் கே சாமி அரெஸ்ட்..; நெக்ஸ்ட் டார்கெட் கேமர் மதன்

யூடியூபர் ‘சாட்டை’ துரைமுருகன் & கிஷோர் கே சாமி அரெஸ்ட்..; நெக்ஸ்ட் டார்கெட் கேமர் மதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gamer madanயூடியுப்பில் பிரபலமானவர் சாட்டை துரைமுருகன். இவர் கலைஞர், ஸ்டாலின் போல விதவிதமாக கெட் அப்புகளில் வந்து நாம் தமிழருக்கு ஆதரவாக கொஞ்சம் ஓவராக பேசி பரபரப்பை ஏற்படுத்துவார்.

மேலும் திமுகவினரை தரைகுறைவாகவும், அவதூறாகவும் பேசுவார்.

இந்த நிலையில் திருச்சியில் வினோத் என்ற கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது.

எனவே சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைதை கண்டித்து நாம் தமிழர் சீமான் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இத்துடன் ‘சாட்டை’ துரைமுருகன் மீது மிரட்டல் புகார் தவிர சில வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

இவரை தொடர்ந்து கிஷோர் கே சாமி என்ற யூடியூபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபரும் திமுக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரை தவறாக பேசி வந்தார்.

மேலும் பெண் பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாக பேசி வந்த நிலையில் இவருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது ஆபாச சர்ச்சையாக்குள்ளாகியுள்ளவர் கேமர் மதன்.

சிறுமிகளிடமும் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பாலியல் ரீதியாக பேசுவது இவன் வாடிக்கையாகும்.

இளைஞர்களை சீரழிக்கும் “பப்ஜி” எனும் ஆன்லைன் விளையாட்டு நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதில் விபிஎன் என்னும் பிரைவேட் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடி இருக்கிறார் மதன்.

சிறுமிகளின் பாலியல் ரீதியான புகைப்படங்கள், வீடியோக்களையும் இவர் டெலிகிராமில் விற்றதாகவும் புகார் வந்துள்ளன.

தன்னோடு விளையாட்டில் இணையும் சிறுவர், சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவதாக கூறப்படுகிறது.

எனவே சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இதனையடுத்து மதன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல் துறை உத்தரவிட்டிருந்தது்

இந்த நிலையில் மதன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

Case filed against pubg fame Madan

More Articles
Follows