தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியன் 2 சூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் அறுந்து விழுந்தத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள்.
மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடத்திற்கு அருகிலிருந்த ஷங்கர் கதறி கொண்டு தலையில் அடித்துக கொண்டு அழுதார்.
நடிகர் கமல், லைகா நிறுவனம் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மேலும் நடிகர்கள் தனுஷ், ஜிவி. பிரகாஷ் ஆகியோரும் தங்கல் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இறந்த 3 பேருக்கும் அஞ்சலி செலுத்திய பின் கமல் பேசியதாவது…
”நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். நான்கு நொடிகள் முன்பு வரை நானும் அங்கு தான் இருந்தேன்.
படப்பிடிப்பில் நடந்த இந்த விபத்தை என் குடும்பத்தில் நடந்ததாகக் கருதுகிறேன்.
சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும்.
கடைநிலை ஊழியர்களுக்கும் கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலையை எய்த வேண்டும்.
ரூ. 100 கோடி 200 கோடி என்று மார்தட்டுக்கொள்ளும் நம்மால் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவி அளிக்கிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
Indian 2 accident Kamal announces Rs 1 crore to help