தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்த்த இளையராஜாவின் 76வது பிறந்தநாள் விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு அவரின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் சங்கம் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த விழா மாலை 6 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்பிபி மற்றும் யேசுதாஸ் அங்கு சரியான நேரத்திற்கு வரவில்லை. அவர்கள் வரவே 8 மணி ஆனது. 8.30 மணி போல கமல்ஹாசன் வந்தார்.
இளையராஜா 7.45மணிக்கு விழாவை தொடங்கினார். இதனால் ரசிகர்கள் பொறுமை இழந்தனர்.
மேலும் விழா தொடங்கும்போதே தண்ணீர் பாட்டில்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு வகைகள் விற்பவர்கள் கூட தண்ணீர் பாட்டில் வைத்திருக்கவில்லை.
இதனால் கூல் ட்ரிங்ஸ் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது. 2 லிட்டர் 7அப் கூல் ட்ரிங் ரூ. 500க்கு விற்கப்பட்டது. இதனால் பலரும் கோபம் அடைந்தனர்.
தண்ணீர் இல்லை. குழந்தைகளுக்கு என்ன கொடுப்பது? எதையாவது வாங்க வேண்டும் என மக்கள் வாங்க ஆரம்பித்தனர்.
மேலும் காவல் துறையினரும் போதுமான அளவு இல்லை. ரூ. 1000 டிக்கெட் வாங்கியவர்கள் ரூ. 5000 சீட்களில் அமர்ந்தனர். இதனால் அவர்களுக்கு உட்கார சேர்கள் இல்லாமல் போனது.
மேலும் பலரும் நிற்க ஆரம்பித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்ப்பட்டது.
மேலும் நிகழ்ச்சி தொடங்கி 2 மணி நேரத்திற்கு மெலோடி மற்றும் சோக பாடல்கள் மட்டுமே பாடப்பட்டது. இதனால் 10 மணிக்கே நிறைய பேர் கலைந்து சென்றனர்.
ஆக.. இசையை கேட்க வந்தவர்களுக்கு இந்த இளையராஜாவின் இசை விழா இம்சை ஆனது.
Ilayaraaja Concert controversy happened on his birthday
#இளையராஜா பிறந்தநாளில் அவருக்கு ஏற்பட்ட அவப்பெயர்.. மக்கள் கடும் பாதிப்பு#NoWater #HBDIlaiyaraaja #HBDIlayaraja #Ilayaraja #ILAYARAJA75 @thisisysr @IndiraProjects @SangeethaMobile @planetradiocity @PTTVOnlineNews @News18TamilNadu @polimernews @ThanthiTV pic.twitter.com/icTLlJhkm1
— Filmi Street (@filmistreet) June 2, 2019