டோவீனோ தாமஸ் & மம்தா நடித்த ‘பாரன்ஸிக்’ தமிழில் ‘கடைசி நொடிகள்’ ஆனது

டோவீனோ தாமஸ் & மம்தா நடித்த ‘பாரன்ஸிக்’ தமிழில் ‘கடைசி நொடிகள்’ ஆனது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரிசையாக பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது.

அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார்.

கொலைகளும் கொலை நடத்திய விதமும் ஒரே மாதிரி இருப்பதால் கொலைகாரன் ஒருவரே தான் செய்திருக்கனும் என்று அந்த பாரன்ஸிக் ஆபீசர் கண்டுபிடிக்கிறார்.

கண்டுபிடித்து போலீஸிடம் சொன்னால் அவங்க ஏற்க மறுக்கிறார்கள்.

மெல்ல மெல்ல அந்த போலீஸ் துறையை நம்ப வைத்து அந்த கொலைகாரனை எப்படி பிடிக்கிறான் என்பது கதை.

இப்படத்திற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு செல்கிறது.

திரில்லர் என்றால் இதுதான் என்று ஒவ்வொரு காட்சிகளும் நெஞ்சை அள்ளிக் கொள்ளும் விதமாக “கடைசி நொடிகள்” உள்ளது.

கேரளாவில் பாரன்ஸிக் எனும் பெயரில் வெளிவந்து சக்க போடு போட்ட படம் இது.

“கடைசி நொடிகள்” எனும் பெயரில் தமிழுக்கு ரசிமீடியா மேக்கர்ஸ் உருவாக்கியுள்ளது.

விஸ்வசாந்தி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் கொலைகாரனை கண்டுபிடிக்கும் பாரன்ஸிக் ஆபீஸராக டோவீனோ தாமஸ் நடித்திருக்கிறார்.

மேலும் மம்தா மோகன் தாஸ், ரெபா மோனிகா, மோகன் சர்மா, பிரதாப்போத்தன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இன்னும் பலரும் உண்டு.

ஒளிப்பதிவு –
அகில் ஜார்ஜ்

இசை –
ஜேக்ஸ் பிஜோயி

வசனம் –
ஏ.ஆர், கே. ராஜராஜா

தமிழ் உருவாக்கம் –
ரசி மீடியா மேக்கர்ஸ்

தயாரிப்பு-கோபிநாத்

இணைத்தயாரிப்பு
S.சந்திரசேகர்

கதை திரைக்கதை இயக்கம் –
அனஸ்கான் – அகில்பால்

இந்த படம் விரைவில் வெளிவருகிறது.

Forensic tamil version is ready for release

என்னங்க ஜெகன் உங்க திட்டம்.; பிரியாணி காதலர்களை சிங்கராக மாற்றிய பாடலாசிரியர்

என்னங்க ஜெகன் உங்க திட்டம்.; பிரியாணி காதலர்களை சிங்கராக மாற்றிய பாடலாசிரியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பூம்புகார், பந்தபாசம் படித்தால், மட்டும் போதுமா உள்ளிட்ட படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களை எழுதியவர் பழம்பெரும் கவிஞர் மறைந்த மாயவநாதன்.

தற்போது மாயவநாதன் பிறந்த அதே தென்காசி மாவட்டம் பூலாங்குளத்தில் இருந்து அவரது பேரன் ஜெகன் கவிராஜும் தாத்தா வழியில் பாடலாசிரியராக களமிறங்கிறங்கியுள்ளார்.

சமீபத்தில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு குணா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள “என் ஜீரக பிரியாணி” என்ற பாடலை எழுதியிருக்கிறார் ஜெகன் கவிராஜ்.

இப்பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களையும் முக்கியமான பிரியாணி காதலர்களையும் கவர்ந்துள்ளது.

இந்தப் பாடல் அனுபவம் பற்றி ஜெகன் கவிராஜ் கூறியதாவது…

“என் உறவுவழித் தாத்தா மாயவநாதன் பயணித்த பாடல் வழியில் பயணிக்க வேண்டும் என்பது என் ஆசை.

ஏன் என்றால் நான் பிறந்த நேரத்தில் அவர் உயிரோடு இல்லை என்றாலும் அவரைப் பற்றி தினமும் யாராவது பெருமையாகப் பேசியபடியே இருப்பார்கள். பாடல் வரிகளின் வழியே இப்படியான இறவாப் புகழை எய்த முடியும் என்ற வேட்கை தான் பாட்டெழுதும் ஊக்கத்தைத் தந்தது.

சென்னைக்கு வந்தேன். திரையுலக நண்பர்களுடன் பழகினேன். பத்திரிகையாளராகவும் பணி புரிந்து வருகிறேன்.

2017ல் நாகேஷ் திரையரங்கம் படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளேன். ஆனாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் எளிதாக கிடைக்கவில்லை.

நீண்ட காலமாக எனது எழுத்துக்களை பாராட்டி வரும் இயக்குநர் பிரபு ஜெயராம் என்னை நம்பி இந்தப்பாடலை கொடுத்தார்.

இந்தப்படத்திற்கு முதலில் நீங்கள் வரிகளை எழுதுங்கள். பின் இசை அமைத்துக் கொள்ளலாம் என்றார்.

அந்தச் சுதந்திரம் என்னை உற்சாகமாக எழுத வைத்தது. அதற்கு இசை அமைப்பாளர் குணா தந்த ஆதரவும் முக்கியமானது.

இப்போது பாடலையும் பாடல் வரிகளையும் நிறைய பேர் பாராட்டுவது பெரும் உற்சாகத்தையும் அளிக்கிறது’ என்றார்.

முதலில் பத்திரிகையாளர்.. இப்போ பாடலாசிரியர்.. என்னங்க ஜெகன் சார் அடுத்து உங்க திட்டம்..? என்னவோ..

JeeragaBiriyani the 1st single from #YennangaSirUngaSattam penned by Jegan KaviRaj

பாலா பாணியில் கௌதம்.. பரிதாப நிலையில் சிம்பு..; ஏங்க வைக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ செகண்ட் லுக்

பாலா பாணியில் கௌதம்.. பரிதாப நிலையில் சிம்பு..; ஏங்க வைக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ செகண்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புக்கு ஜோடியாக காயட் லோஹர் என்பவர் நடிக்கவுள்ளார்.

இது வரை ஏற்றிடாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சந்தூரில் எடுக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதில் சிம்பு அழுக்கு கைலி மற்றும் பனியனுடன் அமர்ந்திருக்கிறார். அவர் கடுமையான வேலை செய்து விட்டு களைப்பில் இருப்பது போல உள்ளது.

படுக்க கூட இடம் இல்லாத ஓர் எளிய அறையில் பலர் நெருங்கி உட்கார்ந்தும் படுத்திருப்பதும் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான இந்த செகண்ட் லுக் டிசைன் ரசிகர்களால் சமூக வலைத் தளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் ஸ்டில்கள் மற்றும் சிம்புவின் லுக்கை பார்த்தால் பாலா படம் போன்ற பாணியே தெரிகிறது. சிம்புவை பார்த்தால் பரிதாபம் கொள்ளும் நிலையில் தோற்றம் உள்ளது.

இதனால் பாலா பாணியில் கௌதம் படம் எப்படி இருக்குமோ.? என ரசிகர்கள் இப்போதே ஏங்க ஆரம்பித்து விட்டனர்.

STR’s Vendhu Thanindhathu Kaadu Second look poster released

வனிதாவை ‘பிக்கப்’ செய்து பட்டமும் கொடுத்து செஞ்சுரி அடித்த பவர் ஸ்டார்

வனிதாவை ‘பிக்கப்’ செய்து பட்டமும் கொடுத்து செஞ்சுரி அடித்த பவர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாயகனாக, குணசித்திர நடிகராக, நகைச்சுவை நடிகனாக தயாரிப்பாளராக அரசியல்வாதியாக பல்வேறு பொறுப்புகளில் வலம் வந்து கொண்டிருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் அடுத்து இயக்குனர் மற்றும் இசையமைப்பாளராக அடி எடுத்து வைக்கிறார்.

2 எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் “. பி க் க ப் ” படத்தில்தான் அவர் இசையமைப்பாளராக களம் இறங்குகிறார்.

பிரபல இசையமைப்பாளர்கள் இதில் பாடுவதற்கு தயாராக உள்ளனர்.

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ‘ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, லட்சுமி பாலா, தீபிகா, குட்டி சரிதா, வெங்கய்யா பாலன், அகஸ்தியா என்று நட்சத்திரப் பட்டாளமே இதில் உள்ளது.

சென்னை, பெங்களூர், மும்பை, மதுரை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து வருகிறது.

பவர் ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறுகிறார் வனிதா.

அந்த பங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து சொல்கிறோம்.

படத்தில் காமெடி பிரதானமாக இருக்கும். ” பிக்கப்” படம் எனக்கு நூறாவது படமாகும்.

என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி. இயக்கத்துடன் செமத்தியான பாடல்களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன்.

இந்தப் படத்தோட டைட்டிலில் வனிதாவுக்கு ” வைரல் ஸ்டார்” என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்”. என்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

Vanitha and Power Star Srinivasan joins for Pickup

சிறந்த இயக்கம் இசை நடிப்பு பாட்டு என 9 பிரிவுகளில் விருதுக்கு ‘சைக்கோ’ பரிந்துரை

சிறந்த இயக்கம் இசை நடிப்பு பாட்டு என 9 பிரிவுகளில் விருதுக்கு ‘சைக்கோ’ பரிந்துரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த “சைக்கோ” SIIMA 2020″ விழாவில் 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Double Meaning Productions சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த “சைக்கோ” திரைப்படம், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான “SIIMA 2020″ திரை விழாவில், 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிபிராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் ‘மாயோன்” படம் மூலம் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமாகியுள்ள தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், தனது தயாரிப்பில், கடந்த வருடம் மிகப்பெரும் வெற்றி பெற்ற “சைக்கோ” திரைப்படம், தற்போது 9 விருதுகளுக்கு பரிந்துரையாகி மிகப்பெரும் அங்கீகாரத்தை பெற்றதற்கு, ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை சாத்தியமாக்கிய “SIIMA 2020” திரை விருது குழுவினருக்கும் நன்றியினை தெரிவித்துள்ளார். முக்கியமாக இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் தான் படத்தின் பெரு வெற்றிக்கு முக்கிய காரணமென அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் ‘மாயோன்’ திரைப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்ததில் மகிழ்ச்சி, அவரது இசை படத்தின் மிகப்பெரும் தூணாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

“சைக்கோ” திரைப்படம் 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த இயக்கம் (மிஷ்கின்), முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர் (உதயநிதி ஸ்டாலின்), சிறந்த இசை (இளையராஜா), சிறந்த பாடல் – உன்ன நினைச்சு (கபிலன்), சிறந்த பின்னணி பாடகர் ஆண் – உன்ன நினைச்சு (சித் ஸ்ரீராம்), சிறந்த அறிமுக தயாரிப்பாளர் ( Double Meaning Productions ), சிறந்த ஒளிப்பதிவு (தன்வீர் மிர்).

ராஜ்குமார் பிச்சுமணி சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA 2020) 9 வது பதிப்பு செப்டம்பர் 18 & 19 தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

Mysskin’s Psyco nominated for 9 categories in SIIMA 2020 awards

சிவகார்த்திகேயனுடன் உங்க கெமிஸ்ட்ரி சூப்பர்.; சூரியை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

சிவகார்த்திகேயனுடன் உங்க கெமிஸ்ட்ரி சூப்பர்.; சூரியை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி அடுத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையே எந்த பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அடைந்த முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டானதாக அமைந்துவிட்டது.

அவர் அளித்த பேட்டி:

இன்றைய பிறந்தநாள் போட்டோஷூட்டும் வீடியோவும் இணையத்தில் வைரலாகிறதே?

இன்றைய பிறந்தநாள் மிகவும் சந்தோஷமான, திருப்தியான நாளாக அமைகிறது. கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வருவது தான் முதலில் நிம்மதியை தருகிறது.

படப்பிடிப்புக்காக தாடி எடுக்க வேண்டி வந்தது. அதற்கு முன்பு ஒரு போட்டோஷூட் எடுக்க சொல்லி நண்பர்கள் கேட்டார்கள். அதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.

இதற்கு முன்பு தாடியில் எடுத்த போட்டோக்களே வைரலாகி வெற்றி அண்ணன் முதல் ரஜினி சார் வரை பலரும் பாராட்டினார்கள்.

இந்த படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பும் உற்சாகப்படுத்தி உள்ளது. சமீபகாலமாக ரசிகர்கள் என் பிறந்தநாளுக்காக பல நலத்திட்டங்கள் செய்துவருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்தாகவேண்டும்.

கதையின் நாயகனாக விடுதலை படம் குறித்து?

இறைவன் அருளாலும் தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆதரவாலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறேன். சினிமாவில் ஒரே ஒரு காட்சியில் ஓரமாக வந்துவிட மாட்டோமா என்று ஏங்கி இருக்கிறேன்.

சின்ன வேடங்களில் நடிக்கும்போது நமக்கும் கைதட்டல் கிடைத்துவிடாதா என்று ஆசைப்பட்டிருக்கிறேன். காமெடியனாக பேர் வாங்க விரும்பினேன்.

இவை அனைத்துமே நடந்தது. கதையின் நாயகனாக நடிக்க நிறைய வாய்ப்புகள் பல ஆண்டுகளாக வந்துகொண்டுதான் இருந்தன.

காமெடியனாக கிடைத்த மக்கள் ஆதரவை தவறாக பயன்படுத்தி விடக்கூடாதே என்று தவிர்த்து வந்தேன்.

காமெடியன் நாயகனாகும்போது காமெடி கதையில் தான் நடிக்க வேண்டும் என்பது கட்டாயமா? அதைத்தான் பிற நடிகர்களுடன் நடிக்கும்போதே பண்ணுகிறோமே என்று நினைத்திருக்கிறேன். எனவே அப்படி களம் இறங்கும்போது அது கவனிக்க வைக்கும் நம் நடிப்பை வெளிக்கொண்டுவரும் கதையாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன்.

என் இன்னொரு பக்கத்தை காட்டும் கதைக்காக காத்திருந்தேன். ஆனால் அது வெற்றி அண்ணனின் படமாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.

அழைப்பு வந்ததே கனவு போல இருந்தது. அசுரன் படத்துக்கு முன்பு பேசியது. அசுரன் படம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு முன்னணி நடிகர்கள் படங்கள் வரிசைகட்ட நம் படம் தாமதம் ஆகலாம் என நினைத்தேன்.

ஆனால் வெற்றி அண்ணன் இந்த படத்தை தொடங்கியது அவரது பெரிய மனதை காட்டியது. அவர் அழைத்ததே ஆச்சர்யமாக இருக்க இன்னொரு ஆச்சர்யமாக உடனே அட்வான்சை கொடுத்தார். அடுத்து பல வெற்றி படங்களை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிப்பு என்றதும் மகிழ்ச்சி ஆனேன்.

முதலில் சிவகார்த்திகேயனிடம் தான் பகிர்ந்தேன். இதற்கு முன்னர் எவ்வளவு சம்பளம் வாங்கி இருந்தாலும் இது பல கோடிக்கு சமம் அல்லவா? நேராக சாமி படத்தின் முன்பு வைத்துவிட்டு குடும்பத்திடம் சொன்னேன்.

மேனேஜருக்கே அதன் பின்னர் தான் சொன்னேன். விடுதலை தொடங்கியதை விட இப்போது இன்னும் பெரிய படமாகி விட்டது. இந்த படத்தில் ஒரு நடிகனாக இருப்பதே பெரிய பாக்கியம் தான். வெற்றி அண்ணனுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை.

அவரது அயராத உழைப்பால் மிக சிறந்த படமாக தயாராகி வருகிறது. படத்தின் விளம்பரம் பேப்பரில் வந்த அன்று முந்தைய இரவு தூக்கமே வரவில்லை.

சிறுவயதில் தீபாவளிக்கும் முதல் நாள் தூங்காமல் விழித்திருப்போமே அதுபோன்ற மனநிலையில் இருந்தேன். 45 ஆண்டுகளாக இசைக்கே ராஜாவாக விளங்குபவரின் இசையில் நடித்தது என் வாழ்நாள் பாக்கியம். அவரை சந்தித்தபோதும் மெய்மறந்தேன்.

அதேபோல் விஜய்சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது நான் செய்த புண்ணியம்.

விடுதலை படப்பிடிப்பு கடும் சிரமமாக இருந்ததாக கேள்விப்பட்டோமே?

படத்தில் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்பட அனைவருமே தங்களது அபார உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை பொறுத்தவரை லோகேஷன் தான் முதல் நாயகன். இரண்டாவது கதை.

அதன் பின்னர்தான் நடிகர்கள். 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த மலை கிராமத்துக்கு செல்லவே 3 மணி நேரம் ஆகும். அந்த ஊரில் மொத்தமே 75 குடும்பங்கள் தான்.
எங்கள் படக்குழுவுக்கு சிறப்பான ஒத்துழைப்பை தந்தார்கள்.

அந்த கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் சென்று படப்பிடிப்பு எடுக்கவேண்டும். எல்லோருமே கடுமையாக சிரமப்பட்டோம். ஆனால் யாருமே முகம் சுளிக்கக்கூடவில்லை. காரணம் வெற்றி அண்ணன் மீதான அன்பு. அனைவருமே அவர்மீது அத்தனை அன்பு செலுத்துகிறார்கள்.

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்த அனுபவம்?

இந்த பிறந்தநாளை போலவே வரும் தீபாவளியும் சிறப்பானதாக அமையப்போகிறது. அண்ணாத்த படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டதில் இருந்தே உற்சாகம் தொற்றிக்கொண்டது.

வீட்டில் இருந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஓட்டலுக்கு சென்றால் அங்கே சாருக்கும் அடுத்த அறையில் நான். சந்தோஷத்தில் பறக்கவே தொடங்கினேன்.

படப்பிடிப்புக்கு நான் சென்றபோதே அவர் தயாராக இருந்தார். ஒரு ரசிகனாக அவரை பார்க்க காத்திருந்தேன். அவரை சந்தித்தபோது இது கனவா? என்று கிள்ளிக்கொண்டேன். ஓ..சூரி எப்படி இருக்கீங்க என்று வாஞ்சையோடு கேட்டார்.

சிவகார்த்திகேயனுடன் உங்க கெமிஸ்ட்ரி சூப்பர் என்று சொல்லிவிட்டு அந்த படங்களை நினைவுபடுத்தி சொன்னார். அதன் பிறகு செட்டில் நான் தயங்கி நின்றாலும் இடைவெளிகளில் அழைத்து அருகில் அமர வைத்து உரையாடி கூச்சம் போக்கினார்.

அவர் பேச பேச சிறுவயதில் அவர் படங்களை பார்க்க பட்ட பாடுகள் தான் நினைவுக்கு வரும். தளபதி படத்தின் போது அந்த ஸ்டில்களை புது சட்டைகளில் வைத்து அயர்ன் பண்ணி ஒட்டி அணிந்துகொண்டு படத்துக்கு போனது, அதற்காக வீட்டில் வாங்கிய அடிகள் இதெல்லாம் நினைவுக்கு வரும்.

அவர் சினிமாவில் வரும்போது தொண்டை வலிக்கும் அளவுக்கு கத்தியிருக்கிறேன். ஒரு மிக பெரிய இயக்குனர், தலை சிறந்த சூப்பர் ஸ்டார் என அண்ணாத்த படமே என் வாழ்வில் மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது.

சூப்பர் ஸ்டார் என்ற பிரமிப்பு எல்லாம் அவர் பழகிய விதத்தில் போயே விடுகிறது. அப்படி ஒரு டவுன் டூ எர்த் மனிதராக பழகுகிறார். அதுதான் அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு திரும்பும்போது அவர் இருக்கைக்கு அடுத்த இருக்கை. அவரே அப்படி போட சொல்லி இருக்கிறார் என்று கேள்விபட்டதும் நான் விமானத்துக்கு மேலேயே பறந்து தான் வந்தேன்.

அந்த பயணத்தின்போது என்னை பார்த்து ‘நான் உங்களுக்கு கம்ஃபர்டிபிளாக இருந்தேனா…? என்று கேட்க அசந்துபோனேன்.

நான் சினிமாவுக்கு வந்த பலனையே அடைந்துவிட்டேன். கடவுளையே பார்த்ததுபோல் இருக்கிறது என்றேன். வாழ்த்து சொன்னார்.

டான் படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடிப்பது எப்படி இருக்கிறது?

சிவாவுடன் எப்போதுமே நமது கூட்டணியில் நகைச்சுவை களை கட்டும். ஆனால் இது அப்படி இருக்காது. பதிலாக எமோஷனலான ஒரு அண்ணன் மாதிரியான கதாபாத்திரம். நிறைய காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள். பொறுப்பான அண்ணனாக ஒரு குணச்சித்திர வேடம்.

சூர்யாவுடன் நடிக்கும் எதற்கும் துணிந்தவன்?

அது திரையரங்குகளில் ஒரு திருவிழாவாக இருக்கும். பாண்டிராஜ் சார் படங்களுக்கே உரிய குடும்ப செண்டிமெண்டுடன் ஆக்‌ஷன் கலந்த படமாக இருக்கும்.

வழக்கமான காமெடியனாக அல்லாமல் வித்தியாசமாக நாயகனுக்கு எதிராக இருக்கும் வேடம். கதாநாயகியின் தாய்மாமா வேடம்.

உடன்பிறப்பு படத்திலும் பேசப்படும் கதாபாத்திரமாமே?

எனக்கு பிடித்த 2, 3 படங்களில் கத்துக்குட்டி படமும் ஒன்று. அதே போல் என் மனதுக்கு நெருக்கமான அண்ணன்களில் இரா.சரவணனும் ஒருவர். உடன்பிறப்பு படத்தில் பிரிந்துபோன அண்ணன் தங்கை இரு குடும்பங்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் கதாபாத்திரம்.

காமெடியை தாண்டி உணர்வுபூர்வமான ஒரு கதாபாத்திரம். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்துடன் சமூகத்துக்கு மிக அவசியமான கருத்தும் படத்தில் இருக்கும். இரு குடும்பங்களை இணைக்க நான் எடுக்கும் முயற்சிகளால் ரசிகர்களை அழை வைத்துவிடுவேன்.

சசி அண்ணனுடன் கொம்பு வெச்ச சிங்கமடா படத்திலும் நல்ல கதாபாத்திரம். முகேன் ராவ் உடன் நடிக்கும் வேலன் படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்.

கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது பற்றி?
சமூக விஷயங்களில் எனக்கு இயல்பாகவே ஈடுபாடு உண்டு. அதை வெளியில் காட்டிக்கொண்டது இல்லை. கொரோனா சமயத்தில் அதை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைத்தது. கண்ணுக்கே தெரியாத வைரஸ் மக்கள் வாழ்க்கையையே புரட்டி போட்டது ரொம்பவே மனதை பாதித்தது.

முன்கள பணியாளர்களின் சிரமங்களை பார்த்த பிறகே இதில் ஏதாவது நாம் செய்யவேண்டும் என்ற எண்ணம் செயலானது. என்னால் முடிந்ததை செய்தேன். அதற்கு சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது என் சமூக பொறுப்பை அதிகரித்திருக்கிறது.

கொரோனா நமக்கு பல பாடங்களையும் கொடுத்துவிட்டது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. சொந்த பந்தமும் அவசியம் என்பதை உணர்த்திவிட்டது. வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தையே காட்டிவிட்டது.

கதையின் நாயகன், காமெடி, குணச்சித்திரம் மூன்றிலும் பயணிக்க திட்டமா?

நடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வளவுதான். இது தான் என்று மட்டும் அல்லாமல் எல்லாவித கதாபாத்திரங்களிலும் நடித்து பேர் எடுக்க வேண்டும்.

அடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான ராம் அண்ணன் இயக்கத்தில் நிவின் பாலியுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் தொடர்ந்து கௌதம் கார்த்திக் உடன் ஒரு படத்திலும் முத்தையா அண்ணன் இயக்கத்தில் கார்த்தி அண்ணன் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறேன்.

என்ன கதாபாத்திரம் என்பது அடுத்த விஷயம். ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். இதுதான் என் நோக்கம். அதற்காக கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கிறேன்.

இவ்வாறு சூரி மனம் திறந்து பேசினார்.

Actor Soori recent speech about super star

More Articles
Follows