ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதிக் கட்ட சூட்டிங் அப்டேட்

ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதிக் கட்ட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ டைகர் நாகேஸ்வரராவ்’ எனும் திரைப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியிருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

வம்சி இயக்கத்தில் தயாராகும் புதிய பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த திரைப்படத்தில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 1970களில் ஸ்டூவர்ட் புரம் எனும் பகுதியில் வாழ்ந்த பிரபல திருடனின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதும் இந்த திரைப்படத்திற்கு அவினாஷ் கொல்லா நிர்வாக தயாரிப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இந்த ஆண்டில் வெளியான பிரம்மாண்டமான பட்ஜெட் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக 5 ஏக்கர் நிலத்தில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கிராமத்தில் படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள். இதில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பங்கேற்கும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படுகிறது.

டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃப்ரீ லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

1970களில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமத்தில் வாழ்ந்த பிரபல திருடனின் சுயசரிதையை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் உடல் மொழி, வசன உச்சரிப்பு மற்றும் கெட்டப் ஆகியவை வித்தியாசமாக இருக்கும். நடிகர் இதுவரை இதற்கு முன் ஏற்றிராத கதாபாத்திரமாக இருப்பதால், இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

Final shooting update of Ravi Teja starrer ‘Tiger Nageswara Rao’

நூல் இழையில் உயிர் தப்பிய ஏ ஆர் ரஹ்மானின் மகன். வைரலாகும் புகைப்படம்..

நூல் இழையில் உயிர் தப்பிய ஏ ஆர் ரஹ்மானின் மகன். வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ ஆர் ரஹ்மான் மகன் அமீன் தனது Insta வில் , “இன்று நான் பாதுகாப்பாகவும் உயிருடனும் உள்ளதற்கு எல்லாம் வல்ல இறைவன், எனது பெற்றோர், குடும்பத்தினர், நலம் விரும்பிகள், ஆன்மீக ஆசிரியருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று இரவுகளுக்கு முன்பு, நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன், கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தேன், நான் நடுவில் இருந்தபோது ஒரு கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரவிளக்குகள் கீழே விழுந்தன. எங்கள் தலையில் விழுந்திருக்க வேண்டியது. அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.” என பதிவிட்டுள்ளார்.

A.R. Rahman’s son A.R. Ameen has a lucky escape from a freak accident

இசை இல்லைன்னா பத்து பைசா தேறாது.: எழுத்தாளர் அஜயன் பாலா அதிரடி

இசை இல்லைன்னா பத்து பைசா தேறாது.: எழுத்தாளர் அஜயன் பாலா அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவான சைக்கோ திரில்லர் படம் ‘மெமரீஸ்’.

வெற்றி & பார்வதி அருண் இணைந்துள்ள இந்த படம் மார்ச் 10ல் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஷிஜு தமீன்ஸ் பேசியதாவது…

இளைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் “மெமரீஸ்”. இது எனது முதல் படம். எங்கள் படம் வெற்றி பெற உங்கள் ஆதரவு தேவை நன்றி.

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் பேசியதாவது…

இப்படம் எனது இரண்டாவது படம். க் எனது முதல் படம். இப்படம் சீட் எட்ஜ் திரில்லர். நாங்கள் எல்லோரும் புதியவர்கள், மக்களிடம் நீங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி

வசனகர்த்தா அஜயன் பாலா பேசியதாவது…

“லாக்டவுன் முன்பாக இயக்குநர்கள் என்னைப் பார்க்க வந்தார்கள் அவர்கள் கதை சொன்ன போது நாம் கணிக்க முடியாத திருப்பங்கள் நிறைய இருந்தது.

இதுபோன்ற படங்களுக்கு இசை தான் முக்கியம்.. இசை இல்லைன்னா பத்து பைசா தேறாது.

இயக்குநர்கள் ப்ரவீன் ஷியாம் இருவரையும் கொஞ்சம் விட்டால் நம்மை குழப்பி விடுவார்கள்.

இது நான் லீனியரில் ஒரு மாறுபட்ட சைக்கோ திரில்லராக இருக்கும். வெற்றி திரை வாழ்வில் இது முக்கியமான படமாக இருக்கும். உங்களைப் பல இடங்களில் ஆச்சரியப்படுத்தும்.” என்று பேசினார்.

மெமரீஸ்

Music is important for Memories kind of movies says writer Ajayan Bala

‘மெமரீஸ்’ பார்க்கும் போது நீங்களே கேரக்டராக மாறிடுவீங்க..; டபுள் டைரக்டர்ஸ் கான்ஃபிடன்ட்

‘மெமரீஸ்’ பார்க்கும் போது நீங்களே கேரக்டராக மாறிடுவீங்க..; டபுள் டைரக்டர்ஸ் கான்ஃபிடன்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவான சைக்கோ திரில்லர் படம் ‘மெமரீஸ்’.

வெற்றி & பார்வதி அருண் இணைந்துள்ள இந்த படம் மார்ச் 10ல் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இயக்குநர் ப்ரவீன் பேசியதாவது…

மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும் போது படம் எளிதாகப் புரியும். இந்தப்படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியம் தரும்.

இயக்குநர் ஷியாம் பேசியதாவது…

நான் மலையாளி, தமிழில் படம் செய்துள்ளேன். இக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளர் தேடின போது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக்கொண்டார்.

வெற்றி இப்படத்தில் 4 தோற்றங்களில் வருவார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். உங்கள் ஆதரவைப் படத்திற்குத் தாருங்கள் நன்றி.” என்றார்.

மெமரீஸ்

You will became characters while watching Memories says directors

வேற ஹீரோவ வச்சு படம் பண்ணுங்க..; ‘மெமரீஸ்’ வாய்ப்பை மறுத்தும் நடித்த வெற்றி

வேற ஹீரோவ வச்சு படம் பண்ணுங்க..; ‘மெமரீஸ்’ வாய்ப்பை மறுத்தும் நடித்த வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shiju Thameen’s Film Factory Pvt Ltd வழங்கும், நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மெமரீஸ்” திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும்.

ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரச்செய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துக் கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இப்படத்தில் வெற்றி நாயகன் பாத்திரத்தில் நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடித்துள்ளார். ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார். கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படம் உலகமெங்கும் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நாயகி பார்வதி அருண் பேசியதாவது…

இது தான் எனது முதல் தமிழ்ப்படம் ஆனால் காரி முதலில் வெளியாகிவிட்டது. படப்பிடிப்பு எல்லாமே காட்டில் தான் நடந்தது. என்னுடைய கேரக்டர் ரொம்ப சின்னது தான் ஆனால் உங்களுக்குப் பிடிக்கும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

நடிகர் வெற்றி பேசியதாவது…

எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன் ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள்.

என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள், கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

மெமரீஸ்

Actor Vetri refused to act in memories movie

ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்த தனுஷின் ‘வாத்தி’

ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்த தனுஷின் ‘வாத்தி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வெளியான படம் ‘வாத்தி’.

இப்படத்தில் தனுஷ் , சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகெள பரணி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பாரதிராஜா, ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், பட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெர்ரடி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 17 அன்று தமிழ் – தெலுங்கு என இருமொழிகளில் திரையரங்குகளில் வெளியானது

இந்த நிலையில், ‘வாத்தி’/’சார்’ படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.

இப்படம் அதிகாரப்பூர்வமாக ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் கிளப்பில் நுழைந்ததாக தயாரிப்பு நிறுவனம் மார்ச் 4 அன்று ட்விட்டரில் அறிவித்தது.

புதிய போஸ்டரைப் பகிர்ந்துள்ள தயாரிப்பாளர்கள், “வாத்தி/ சார் மீதான காதல் தடுக்க முடியாதது. படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அபரிமிதமான ஆதரவிற்கு அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளனர்.

வாத்தி

dhanush’s ‘vaathi’ collections in 100 crore

More Articles
Follows