சிரஞ்சீவியை அறிமுகம் செய்த இயக்குநர் வாசு காலமானார்

சிரஞ்சீவியை அறிமுகம் செய்த இயக்குநர் வாசு காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கே.வாசு.

கே.வாசு தெலுங்கு முன்னணி கதாநாயகன் சிரஞ்சீவியை முதன் முதலில் ‘பிராணம் கரீது’ என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

சிரஞ்சீவி முதலில் நடித்தது ‘புனிதக் ரால்லு’ என்ற படமாக இருந்தாலும் அதற்கு முன்பாகவே கே.வாசு இயக்கிய ‘பிராணம் கரீது’ படம் திரைக்கு வந்து விட்டது.

கே.வாசு இயக்கிய ‘ஸ்ரீ சீரடி சாய்பாபா’ படம் இந்தியா முழுவதிலும் உள்ள சாய்பாபா பக்தர்களின் மனதை கவர்ந்தது.

இவரது தந்தை பிரத்தியேகாத்மா, சகோதரர் ஹேமாம்பதராவ் ஆகியோரும் இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தல ராயுடு, இண்டிலோ ஸ்ரீமதி வீதிலோ குமாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் கே.வாசு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இவருக்கு வயது 72.

இயக்குனர் கே.வாசு மறைவுக்கு திரையுலகினர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Filmmaker K Vasu, who introduced Chiranjeevi passes away

சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்

சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதிராஜா இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் சுதாகர்.

தமிழில் தொடர்ந்து ‘கல்லுக்குள் ஈரம்’, ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘மாந்தோப்பு கிளியே’, ‘எங்க ஊரு ராசாத்தி’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ரஜினிகாந்த்தின் அதிசய பிறவி படத்திலும் காமெடி வேடத்தில் கலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தெலுங்கில் ‘பவித்ரா பிரேமா’, ‘அக்னி பூலு’, ‘ஊரிகிச்சினா மாதா’, ‘போகி மண்டலு’, ‘கொண்டே கொடல்லு’ போன்ற பல படங்களில் முன்னணி நடிகராக நடித்தார்.

தெலுங்கில் காமெடி வேடங்களில் நடிக்கத் துவங்கினார்.

சமீபத்தில் சுதாகரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவந்தன.

இந்தத் தவறான தகவல் கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நடிகர் சுதாகர் தனது உடல்நிலை குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

அதில், ”எனது உடல்நிலை குறத்து தவறான வதந்திகள் பரவி வருகின்றன. அதனை நம்பாதீர்கள். “நான் உயிருடன் நன்றாக இருக்கிறேன்”. கவலைப்படத் தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் நடிகர் சுதாகர் தனது உடல்நிலை குறித்துப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Sudhakar put an end to rumours and clarifies his health condition

தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மோடிக்கு நன்றி. #தமிழன்டா என ரஜினி ட்வீட்

தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மோடிக்கு நன்றி. #தமிழன்டா என ரஜினி ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டெல்லியில் நவீன வசதிகள் கொண்ட புதிய பாராளுமன்றக் கட்டிடம் நாளை மே 28 அன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது

தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்ததுள்ளது இந்த செங்கோல்.

மேலும் இந்திய விடுதலையின் அடையாளமாகவும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு அத்தாட்சியாகவும் விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செங்கோல், பிரதமரால் நாளை மே 28ல் திறக்கப்படவுள்ளது.

புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில், மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் நிரந்தரமாக இடம் பெறவுள்ளது.

இந்த நிலையில் இது இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நேற்று மே 27ல் பதிவிட்டுள்ளதாவது…

இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்.

#தமிழன்டா

தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

Rajinikanth tweeted thanks Modi for ‘making Tamilians proud’

விஜய் சேதுபதியின் முதல் ஹிந்தி படம் ஓடிடி-யில் ரிலீஸ்.; லோகேஷ் வாழ்த்து.!

விஜய் சேதுபதியின் முதல் ஹிந்தி படம் ஓடிடி-யில் ரிலீஸ்.; லோகேஷ் வாழ்த்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய முதல் படம் ‘மாநகரம்’ கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரித்திருந்தார்.

முதல் படமே லோகேஷுக்கு வெற்றி படமாக அமைந்தது. தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆகி ‘மும்பைகர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தப் படத்தை ஹிந்தியில் இயக்க ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

தமிழில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் ஹிந்தியில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இவர்களுடன் விக்ராந்த் மாசே, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ் & தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வரும் ஜூன் 2ஆம் தேதி நேரடியாக ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

Here’s the #MUMBAIKAR trailer!

Wishing good luck to the entire team 😊💯

#MumbaikarOnJioCinema from 2nd June
@jiocinema

@vikrantmassey

@VijaySethuOffl

@hridhuharoon

@santoshsivan

@imsanjaimishra

@RanvirShorey
#TanyaManiktala
@sachinskhedekar
#JyotiDeshpande
@riyashibu_

@hr_pictures

@jiostudios

@TimesMusicHub

Lokesh Kanagaraj wishes to Vijay Sethupathi’s Mumbaikar

‘விடாமுயற்சி’ அப்டேட்.; 12 வருடங்களுக்குப் பிறகு அஜித் தரும் டபுள் விருந்து

‘விடாமுயற்சி’ அப்டேட்.; 12 வருடங்களுக்குப் பிறகு அஜித் தரும் டபுள் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு 2023 அஜித் நடிப்பில் உருவான ”துணிவு’ படம் வெளியானது.

இந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை (விடாமுயற்சி) மகிழ் திருமேனி இயக்குவார் என அறிவித்தது லைக்கா நிறுவனம்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஜூன் மாதம் ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளது.

இந்த படத்தில் அஜித் ஜோடியாக திரிஷா நடிப்பார் எனக. கூறப்படுகிறது.

இதற்கு முன்பு ஜி, என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

இத்துடன் ‘விடாமுயற்சி’ படத்தின் மற்றொரு அப்டேட்டும் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இரட்டை வேடங்களில் அஜித் இறுதியாக நடித்த படம் ‘அசல்’. இந்த படம் கடந்த 2010 வெளியானது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் அஜித் இரு வேடங்களில் நடிக்கவுள்ளார்.

2010 ஆண்டுக்கு முன்னர் ‘வாலி’, ‘சிட்டிசன்’, ‘பில்லா’, ‘அட்டகாசம்’, ‘வில்லன்’ ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் அஜித் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith plays dual role after 12 years

அஞ்சலியின் 50-வது படத்தலைப்பு – கலைஞர்கள் பற்றிய முழு தகவல்கள்..

அஞ்சலியின் 50-வது படத்தலைப்பு – கலைஞர்கள் பற்றிய முழு தகவல்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் – தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகை அஞ்சலி.

தமிழில் இவரது நடிப்பில் வெளியான ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

அழகும் திறமையும் நடித்த அஞ்சலி தற்போது 50 வது படத்தை நெருங்கி விட்டார்.

இவரின் 50-வது படத்திற்கு ‘ஈகை’ என்று தலைப்பிட்டு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் அஞ்சலியுடன் காஷ்யப், ஹரி, புகழ், அபிநக்‌ஷத்ரா, நிஷாந்த் ரகு, உள்ளிட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். #filmistreet

அசோக் வேலாயுதம் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய தரண் இசை அமைத்துள்ளார்.

தங்கராஜ் லட்சுமிநாராயணன் & தினகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Anjali’s 50th film is titled Eagai

More Articles
Follows