யுவன் முத்தையா இயக்கும் ஈடிலி படம் பூஜையுடன் தொடக்கம்

யுவன் முத்தையா இயக்கும் ஈடிலி படம் பூஜையுடன் தொடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

eedili movie stillsலிம்மல் ஜி, லீசா எக்லேயர்ஸ், நிகாரிகா, ‘அட்டு’ ரிஷி மற்றும் பலர் நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், அம்மா கிரியேசன்ஸ் டி சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய் சந்தர், இறுதிச்சுற்று & இறைவி திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இப்படத்தை சாகர் புரொடக்சன்ஸ் மற்றும் சித்தர் மூவீஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

திறமையான இளைஞர்களுக்கு விஜய் ஊக்கம் தருவார்… சிலிர்க்கும் சிபிராஜ்

திறமையான இளைஞர்களுக்கு விஜய் ஊக்கம் தருவார்… சிலிர்க்கும் சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and sibiraj‘சத்யா’ படத்தின் வெற்றி நன்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் சிபிராஜ் பேசியதாவது…

” ‘சத்யா’ திரைப்படத்தில் என்னுடைய நடிப்பைக் கேலி செய்து நானே ஒரு வசனம் பேசியிருப்பேன்.

ஆனால் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் என்னுடைய நடிப்பைப் பாராட்டினார்கள். ஒவ்வொரு விமர்சனமும் என்னை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.

தெலுங்கில் ‘ஷணம்’ படத்தில் எழுதி நடித்த ஆத்விசேஷ் இங்கு வந்துள்ளார். ஆத்விசேஷ் தெலுங்கில் நடித்த ‘ஷணம்’ படத்தை நாங்கள் தமிழில் ரீமேக் செய்திருந்தோம்.

வருங்காலத்தில் அவர் தெலுங்கில் நடிக்கும் படத்தை தமிழில் நான் ரீமேக் செய்யும் ஆவலில் இருக்கிறேன்.

அதே போல் நான் தமிழில் நடிக்கும் படத்தை அவர் தெலுங்கில் ரீமேக் செய்வேன் என்று கூறியுள்ளார்.

ஆத்விசேஷும் நானும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஆசையுள்ளது.

விஜய் அண்ணா பெரிய நடிகர். அவர் ‘சத்யா’ படம் பார்க்கவில்லை. ஆனால் படத்திற்கு வரும் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பார்த்து என்னை பாராட்டினார்.

அவர் எப்போதும் இளைஞர்களையும் திறமையானவர்களையும் ஊக்குவிக்கத் தவறுவதில்லை” என்று பேசினார் சிபிராஜ்.

ரியல் தீரன் போலீஸ் பெரியபாண்டியனுக்கு கார்த்தி நேரில் அஞ்சலி

ரியல் தீரன் போலீஸ் பெரியபாண்டியனுக்கு கார்த்தி நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi pays homage to periy apandiyanஅண்மையில் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படம் வெளியானது. இப்படத்தல் வட நாட்டுக் கொள்ளையர்களை பிடிக்க கார்த்தி அங்கு செல்வார்.

அங்கு இவரை கொல்ல நடக்கும் சண்டைக் காட்சி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் இதுபோன்ற நிஜ சம்பவம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. இதில் தமிழக போலீஸ் பெரியபாண்டியன் வடநாட்டு கொள்ளையர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த பாதிப்பில் நடிகர் கார்த்தி அந்த வீரமரணமடைந்த அதிகாரிக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு….

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலை புதுரை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். இவர் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை கேஸில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராஜஸ்தானுக்கு சென்று அங்கு இருந்த கொள்ளையர்களால் கொல்லபட்ட மரணமடைந்தார்.

அன்னாரின் உடல் அவருடைய சொந்த ஊரான சாலை புதூரில் நேற்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசியில் படபிடிப்பில் இருந்த நடிகர் கார்த்தி அங்கு இருந்து 2மணி நேர தொலைவில் உள்ள சாலை புதூருக்கு சென்று “ பெரியபாண்டியன் “ அவர்களின் நினைவிடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கார்த்தி கூறியதாவது…

பெரியபாண்டியன் அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம் “ பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும்.

அவர் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற அதே நாளில் தான் நீங்கள் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பார்த்தேன். தீரன் படத்தை பார்த்ததும் இவ்வளவு கொடூரமான கொலைகார கொள்ளை கும்பலா ?? இதை போன்ற ஒரு கும்பலை தான் நம்முடைய கணவரும் பிடிக்க சென்றிருப்பாரோ என்று தோன்றியது.

அதன் பின் அவரை தொலைபேசியில் அழைத்து பேசினேன் தீரன் படம் பார்த்தேன் அதில் வந்த பயங்கரமான காட்சிகளை பற்றி கூறி என்னுடைய கணவரிடம் கவனமாக இருங்க , உங்களுடன் இன்னும் சில காவல் துறை போர்சை அழைத்து செல்லுங்கள்.

எனக்கு மனது சரியில்லை என்று கூறினேன். நான் அவருக்கு எதுவும் நடந்துவிட கூடாது என்று பயந்துகொண்டே இருக்கையில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தது “ என்றார்.

உண்மை சம்பவமான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்கும் போதே எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று மனஅழுத்தமாக இருந்தது. தற்போது அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தை தந்துள்ளது.

பெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த 15சென்ட் இடத்தை அந்து ஊரில் பள்ளிக்கூடம் கட்ட கொடுத்துள்ளார். அவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னை போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைப்பவர்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல் எண்ணத்தில் தான் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்கு சென்று வீர மரணம் அடைந்துள்ளார்.

அங்கு மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.

நமது அரசாங்கம் கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய Infrastructure வழங்க வேண்டும். ஈரம் காயாத அவருடைய சாமாதியில் நிறுக்கும் போது நெஞ்சம் பதை பதைத்துவிட்டது.

அவருடைய ஆன்மாவுக்கும், குடும்பத்தாருக்கும் பிராத்தனை செய்கிறேன் என்றார் கார்த்தி.

தினமும் 1000 ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி; போருக்கு தயாரா.?

தினமும் 1000 ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி; போருக்கு தயாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again Super Star Rajinikanth going to meet his fans8 ஆண்டுகளுக்கு பிறகு தன் ரசிகர்களை கடந்த 2017 மே மாதம் சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இச்சந்திப்பில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 19 மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

புகைப்படம் எடுத்துக் கொண்ட கடைசி நாள் நிகழ்வில் “போர் வரும் போது பார்த்துக் கொள்வோம். அதுவரை காத்திருங்கள்’ என தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாகத் தெரிவித்திருந்தார் ரஜினி.

இது அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக இருந்த்து.

இந்நிலையில் மீண்டும் இந்த டிசம்பர் மாத இறுதியில் சந்திக்கிறார். இது போருக்கான அழைப்பு குறித்த அறிவிப்பு இருக்குமா? என்பது குறித்த தகவல்கள் இல்லை.

வருகிற டிசம்பர் 26ந்தேதி முதல் 31ந்தேதி வரை சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த முறையும் சந்திப்பு நடைபெற உள்ளது.

ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் தினமும் 1000 ரசிகர்களை சந்திக்கவிருக்கிறாராம்.

இதற்கான உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை பெரு நகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகிகளான வி.எம். சுதாகர், சிவராமகிருஷ்ணன் இருவரும் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Again Super Star Rajinikanth going to meet his fans

சீயான் விக்ரம் பாணியில் தன் தோற்றத்தையே மாற்றிய சரிஷ்

சீயான் விக்ரம் பாணியில் தன் தோற்றத்தையே மாற்றிய சரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Imai movie hero Sarish new look updatesஷங்கர் இயக்கிய ஐ படத்திற்காக தன் தோற்றத்தையே மாற்றியவர் விக்ரம். தற்போது இவரது வழியில் இமை நாயகன் சரிஷ் அவர்களும் செய்துள்ளார்.

படு கரடு முரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை தான் ‘இமை’.

இப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளவர் சரிஷ்.

படத்தில் நடித்த சரிஷ் தன் அனுபவம் பற்றிக் கூறும் போது, “இது ஒரு ரவுடி சார்ந்த கதைதான் என்று கேள்விப்பட்டதுமே என் தோற்றத்தை இயக்குநர் கூறியபடி மாற்ற ஆரம்பித்தேன்.

கொழு கொழு உடம்பை இளைக்க வைத்தேன். தாடி வளர்க்கத் தொடங்கினேன். தலையைச் சரியாக வாராமல் முடியை வளர்த்தேன். என் நிறத்தை மங்கலாக்க வெயிலில் நின்று கறுத்தேன்.

இவ்வளவும் செய்து மாறிய பின், என் தோற்றம் இயக்குநருக்குப் பிடித்து ஒரு வழியாகத் திருப்தி வந்த பிறகுதான் படப்பிடிப்புக்கே போனோம்.

படப்பிடிப்பில் நடித்துப் பார்த்த போது தான் நடிப்பு என்றால் எவ்வளவு சிரமம் என்று புரிந்தது. ஒவ்வொரு படமும் எவ்வளவு கஷ்டங்களுக்குப் பின் உருவாகி வருகிறது என்பது புரிந்தது.

இப்போதெல்லாம் ரசிகர்களை ஏமாற்ற முடியாது. சின்சியரான உழைப்பும் தேவை. யதார்த்தமும் இருக்க வேண்டும். இவை இரண்டுமே இமை படத்தில் இருக்கும்.

இப்படத்தை இயக்கியிருப்பவர் விஜய் கே.மோகன். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் ‘நளசரிதம் நாலாம் திவசம் ‘ ,’வேனல் மரம் ‘என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர்.

என்னை நன்றாகப் பயன்படுத்தியுள்ளார். படத்தை ஜே அண்ட் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்பிக் வி. டோரி தயாரித்துள்ளார். முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

நாயகியாக அட்சய பிரியா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் இரண்டு படங்களில் நடித்து அவை வெளியாகவுள்ளன.

“தமிழக ரசிகர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. புதியவர்களை வரவேற்பார்கள். திறமைகளுக்கும் புதுமைகளுக்கும் ஊக்கம் தருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

சென்னை, பாண்டிச்சேரி ,பொள்ளாச்சி. ஊட்டி,கேரளாவிலுள்ள சாலக்காடு, கொல்லங்கோடு, கோவிந்தபுரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

நல்லதொரு விஷூவல் ட்ரீட்டாக இருக்கும்படி ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் வி.கே.பிரதீப் . இவர் ஏராளமான விளம்பரப் படங்களில் பணியாற்றியவர்.

இசையமைப்பாளர்கள் மிக்கு காவில் மற்றும் ஆதி ஃப் என இருவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.பாடல்கள்- யுகபாரதி , நடனம் _ தீனா, ஸ்டண்ட் – டேஞ்சர் மணி , ஒப்பனை மிட்டா ஆண்டனி.

நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விரைவில் ‘இமை’ வெளியாகவுள்ளது என்கிறார் நாயகன் சரிஷ்.

Imai movie hero Sarish new look updates

imai movie stills

அரவிந்த்சாமியை போல் மற்ற ஹீரோக்கள் செய்யனும் : ஞானவேல்ராஜா

அரவிந்த்சாமியை போல் மற்ற ஹீரோக்கள் செய்யனும் : ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvindswami and gnanavel rajaபிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.

இவர் பிரெண்ட்ஸ், காவலன், எங்கள் அண்ணா, ஹிட்லர் உள்ளிட்ட மலையாள ரீமேக் படங்களை தமிழில் இயக்கியுள்ளார்.

தற்போது இயக்கியுள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படமும் மலையாள ரீமேக் படம்தான்.

அரவிந்த்சாமி, அமலாபால், நைனிகா, ராகவன், சூரி, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்க இப்படத்தை முருகன் தயாரித்துள்ளார். அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கலந்துக் கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது…

பொதுவாக ஒரு படத்தில் ஹீரோ கமிட் ஆகும்போது கோடி கணக்கில் அட்வான்ஸ் வாங்குகின்றனர்.

எல்லா தயாரிப்பாளர்களும் வட்டிக்கு பணம் வாங்கிதான் சம்பளம் கொடுக்கிறார்கள்.

இப்படத்தில் அரவிந்த்சாமி கமிட் ஆகும்போது அவர் எந்த தொகையும் வாங்கவில்லையாம்.

அவரைப் போல் அனைவரும் செய்ய வேண்டும்.

சூட்டிங் முடிந்து டப்பிங் சமயத்தில் வாங்கினால் அதற்கும் ரீலீஸ்க்கும் ஒரு மாதம்தான் இடைவெளி இருக்கும்.

அந்த சமயத்தில் முழு தொகையும் வாங்கிக் கொண்டால் தயாரிப்பாளருக்கு வட்டி ஏறாது. ஒரு மாத வட்டி மட்டும்தான் இருக்கும்.

முன்பே சம்பளம் கொடுப்பதால் ஹீரோ சம்பளத்திற்கு இணையாக வட்டி ஏறிவிடுகிறது.

சில நேரங்களில் தயாரிப்பாளர்கள் ஏமாற்றிவிடுவார்கள் என்பார்கள். அப்படி செய்ய முடியாது. ஏனென்றால் அவர் பின்பு அடுத்த படத்தை தயாரிக்க முடீயாது. மற்ற ஹீரோக்கள் உஷாராகிவிடுவார்கள்.

தயாரிப்பாளர் சங்கமும் கேள்வி கேட்கும்.” என்று பேசினார்.

More Articles
Follows