தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த ஊரடங்கு மே 1 வரை இருக்கும் என கூறப்படுகிறது.
உலகமெங்கும் உள்ள மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் ஒவ்வொருவரும் தங்களுக்க பிடித்தவற்றை செய்து வீடியோவாக பதிவிட்டு இணையத்தை கலக்கி வருகின்றனர்.
ஒரு சிலர் கொரோனா தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். கொரோனா பாடல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பாடலை நாய் அழகாக பாடுகிறது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவை அவர் எங்கோ பார்த்து பகிர்ந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
Dog Sung Corona virus song Video goes viral